மலையாள இயக்குநரான ஜிதின் லால் இயக்கத்தில் படம் ஒன்றில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் விக்ரம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் விக்ரம். இப்படத்தை அருண் விஸ்வா தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் 4 படங்கள் நடிப்பதற்கு கதைகள் கேட்டு முடிவு செய்திருப்பதாக விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதில் ஒரு படத்தை ‘இருமுகன்’...
முழுமையான சயின்ஸ் ஃபிக்ஷன் கதையுடன் உருவாகியுள்ள திரைப்படம், ‘மகரம்’. அகஸ்டின் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. ஆதர்ஷ் சந்திர சேகரன் இசை அமைத்துள்ளார். அமல் டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜித், இஷிதா, அமர் ரமேஷ், நிர்மல், சாமி, அசோக் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் அகஸ்டின் பிரபு கூறும்போது, “4 கதைகளை ஒன்றோடொன்று இணைத்து ஒரு...
விமல் நடிக்கும் ‘வடம்’ படத்தை வி.கேந்திரன் இயக்கியுள்ளார். மாசாணி பிக்சர்ஸ் சார்பில் ஆர்.ராஜசேகர் தயாரிக்கும் இதில் நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ, முனீஸ்காந்த், பால சரவணன், ‘ஆடுகளம்’ நரேன், மது சூதன் ராவ், தீபா, இந்து மதி மணிகண்டன், ஷரவண சக்தி, மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மஞ்சு விரட்டுப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்ச் 6ல் வெளியாகும் இப்படத்தின்...
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
‘அரசன்’ படத்தை முடித்துவிட்டு, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் கதை மற்றும் திரைக்கதையினை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் சிம்பு. தற்போது சிம்பு, அஸ்வத் மாரிமுத்து மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் சந்தித்து படத்தின் பணிகளைத் துரிதப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படங்களை...
நடிகர் அஜித் சார் ஒரு சிறந்த மனிதர் என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் விஜய் இயக்கத்தில் அஜித்தின் கார் ரேஸ் சம்பந்தப்பட்ட படமொன்று தயாராகி வருகிறது. இது முதலில் ஆவணப்படம் என்றே கூறப்பட்டு வந்தது. ஆனால் இது முழுமையான படம் என்றும், ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடியதாக இருக்கும் என்றும் விஜய் பேட்டி யொன்றில் தெரிவித்திருந்தார்.
இப்படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். நேற்று தனியார் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு...
‘கனா’ படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறிய நடிகர் சிவகார்த்திகேயன் சிறிய பட்ஜெட்களில் நல்ல கதைகளை தொடர்ந்து தயாரித்து வருகிறார். அந்த வரிசையில் புதுமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தாய் கிழவி’ எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.
கருமாத்தூர் எனும் கிராமத்தில் வாழும் முதிய பெண் பவுனுத்தாயி (ராதிகா சரத்குமார்). கணவனை இழந்த பின்னரும், யாருடைய தயவும் இன்றி, வட்டிக்குக் கடன் கொடுத்த பணத்தை...
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் அடுத்த படத்துக்கு 'டெக்ஸ்லா' எனப் தலைப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கிராமத்துப் பின்னணியில், சிறுவர்களின் உலகத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகவுள்ளதாகத் தெரிகிறது.
'3', 'வை ராஜா வை', ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த 'லால் சலாம்' ஆகிய படங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா இயக்கும் நான்காவது திரைப்படம் இதுவாகும்.
'வை ராஜா வை' படத்துக்குப் பிறகு மீண்டும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் அவர்...
வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28, சென்னை 28-2 ஆகிய திரைப்படங்களை இணைத் தயாரிப்பு செய்த கேஜே சரவணா, தனது தந்த்ரா பிலிம்ஸ் சார்பில், சுவாமி ஐயப்பனின் மகிமையை சொல்லும் 2 திரைப்படங்களைத் தயாரிக்கிறார்.
இந்தப் படங்களின் தலைப்புகளான ‘தத் த்வம் அஸி’, ‘ஆர்ய கேரள வர்மன்’ ஆகியவற்றை வெங்கட் பிரபு வெளியிட்டார். ஐயப்ப பக்தரின் வாழ்க்கை, அவரது நம்பிக்கை, பக்தி மற்றும் ஆன்மீக பயணத்தை மையமாகக் கொண்டு ஆன்மீக...
மாலா மணியனின் ஃபர்ஸ்ட் காபி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘சிறகு’. கவிஞரும் எழுத்தாளருமான குட்டி ரேவதி இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஹரிகிருஷ்ணன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கோவையைச் சேர்ந்த அக் ஷிதா நாயகியாக நடித்துள்ளார்.
நிவாஸ், வித்யா, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரோல் குரோலி இசையமைத்துள்ள இப்படத்துக்கு ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம், மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8-ம் தேதி மதுரையில் உள்ள கோபுரம்...
கமக்யா நாராயண் சிங் இயக்கத்தில் விபுல் ஷா தயாரித்துள்ள படம், ‘த கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’. இப்படம் நேற்று (பிப்.27) வெளியாவதாக இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தைத் தடை செய்யக் கோரி தேவ் நம்பூதிரி உள்ளிட்டோர் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன.
கேரளாவை வகுப்புவாத கண்ணோட்டத்தில் காட்டுவதாகவும், இது சட்டம், ஒழுங்கை பாதிக்கக் கூடும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இவ்வழக்கின் வாதங்களைக் கேட்ட...










