Google search engine
சூர்​யா, மமிதா பைஜு, ராதிகா சரத்​கு​மார், ரவீணா டாண்​டன், யோகி பாபு உள்பட பலர் நடித்​துள்ள படம் ‘விஸ்​வ​நாத் அண்ட் சன்​ஸ்’. வெங்கி அட்​லூரி இயக்​கி​யுள்ள இப்​படத்தை சித்​தாரா என்​டர்​டெ​யின்​மென்ட்ஸ் தயாரித்​துள்​ளது. ஆக.14-ல் வெளி​யாக இருக்​கும் இப்​படத்​துக்கு ஜி.​வி.பிர​காஷ் குமார் இசை அமைத்​துள்​ளார். இதன் இசை வெளி​யீட்டு விழா கோயம்​புத்​தூரில் மாணவ, மாணவி​கள் முன்​னிலை​யில் நடை​பெற்​றது. விழா​வில் தயாரிப்​பாளர் சூர்​யதேவர நாக வம்​சி, வெங்கி அட்​லூரி, ஜிவி பிர​காஷ் குமார்,...
ஜீவா நடிக்​கும் ‘தகப்​பன்’ படத்தை ‘கி​டா’ படத்தை இயக்​கிய ரா.வெங்​கட் இயக்​கு​கிறார். சுகு​மார் ஒளிப்​ப​திவு செய்​கிறார். நாயகியாக ரஜிஷா விஜயன் நடிக்​கிறார். ‘கருடன்’, ‘மாமன்’ படங்​களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் சார்​பில் குமார் தயாரிக்​கும் இப்​படத்​துக்​குச் சுயாதீன இசைக்​கலைஞர் மார்​ஷல் ராபின்​சன் இசையமைக்​கிறார். அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்​றும் மனித உணர்​வு​களை மைய​மாகக் கொண்ட ஆழமான குடும்​பக் கதை​யாக உரு​வாகி வரும் இப்​படத்​தின் முதல் தோற்​றம்...
ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம்​,‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’. இதில் மது​மிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி, மாதங்கி சதீஷ், ரியா மனோஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். பியட்ரோ வில்லானி ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களுக்கு ஜெய்கார் ஹரிநாத், அசோக் ஸ்ரீதரன் இசையமைத்துள்ளனர். பின்​னணி இசையை ஜோயி ரிடா அமைத்துள்ளார். “தாயை இழந்து தனிமையில் வளர்ந்த இளைஞன், மதுவுக்கு அடிமையாகி வாழ்ந்து...
கவுரவ தோற்றத்தில் நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். தனது இயக்குநர் மற்றும் நடிகர்கள் நண்பர்களின் பல்வேறு படங்களில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் விஜய் சேதுபதி. தற்போது அதனை நிறுத்திவிட்டதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அப்பேட்டியில் விஜய் சேதுபதி, “கவுரவ தோற்றத்தில் நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டேன். ரஜினி சார் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ படம் மட்டுமே இதில் விதிவிலக்கு. ஏனென்றால் அப்படத்தின் போஸ்டரில் எனது முகம் இடம்பெற்றாலும்,...
ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி ‘நூறுசாமி’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விஜய் ஆண்டனி நடித்து தயாரித்து வெளியான படம் ‘நூறுசாமி’. இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. ஜூன் 19-ம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும், திரையுலகினர் பலரும் இப்படத்தினை பார்த்து பாராட்டு தெரிவித்தார்கள். இப்படம் ஆகஸ்ட் 7-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனை விளம்பரப்படுத்தும்...
சசிகுமார் நடித்திருக்கும் குற்றப்புலனாய்வு த்ரில்லர் வெப் சீரிஸ் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’. ஆக.7-ல் பிரைம் வீடியோவில் வெளியாகும் இதில் மூஸா ராசா என்ற கதாபாத்திரத்தில் போலீஸாக நடித்திருக்கிறார் அவர். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி இருக்கும் இதில் யஷ்வந்த், அனகா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ள இந்த...
அஜித் நடிப்பில் உருவாகும் அடுத்த 3 படங்களை முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ’குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு, தனது அடுத்த படம் என்ன என்பதை அறிவிக்காமல் இருக்கிறார் அஜித். ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குநர் என்றாலும், பட்ஜெட் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட பிரச்சினைகளால் இப்படம் அறிவிக்கப்படாமல் உள்ளது. தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் படத்தை அஜித்தே நடித்து தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார். அதன்படி இந்த மாதத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் படப்பிடிப்பு...
நிவின் பாலி, சூரி, அஞ்​சலி நடித்​துள்ள படம், ‘ஏழு கடல் ஏழு மலை’. ராம் இயக்​கி​யுள்ள இந்​தப் படத்​துக்கு யுவன் சங்​கர் ராஜா இசை அமைத்​துள்​ளார். வி ஹவுஸ் புரொடக் ஷன்ஸ் சார்​பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்​தப் படம் பல்​வேறு சர்​வ​தேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்​றது. இப்​படத்​தின் டீஸர் வரவேற்பைப் பெற்​றுள்ள நிலை​யில் அக்​.1-ல் படம் வெளி​யாக இருக்​கிறது. இதுபற்றி படக்​குழு கூறும்​போது, “இதில் நிவின்​பாலி​யின் வித்தியாச​மான தோற்​ற​மும் நடிப்​பும்...
தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக நடிகர் கவின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. எங்களுக்கு ஓர் ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். கவின் தனது தோழியான மோனிகா டேவிட்டை 2023-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சின்னத் திரையில் தனது கலையுலக பயணத்தை தொடங்கிய நடிகர் கவின் தற்போது...
ஜாய் கிரிசில்டாவின் மகன் ராகாவை தனது மகன் என கூறியுள்ள மாதம்பட்டி ரங்கராஜ் தனது மகனுக்கு அனைத்து கடமைகளையும் செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவில், மகன் ராகாவுடன் இருக்கும் படத்தையும், அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘எனது மகன் ராகாவுக்கு ஒரு தந்தையாகச் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு...