சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி என்ற யானையை அவர் தத்தெடுத்து உள்ளார். இந்த யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை 6 மாதங்களுக்கு அவர் வழங்குவார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் இதற்கு முன் வண்டலூர் பூங்காவிலிருந்து...
கருப்பு – வெள்ளை ஒளிப்பதிவு: காலம் தாண்டி நிற்கும் சினிமாவின் ஆதி மொழி | ஒளி என்பது வெளிச்சமல்ல 16
admin - 0
சினிமாவின் தொடக்கக் காலத்திலிருந்து சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக, கருப்பு-வெள்ளை என்பது சினிமாவின் ஆத்ம மொழியாகவே மலர்ந்திருந்தது. இன்று நாம் கோடிக்கணக்கான வண்ணங்கள் கொண்ட டிஜிட்டல் திரைகளில் படம் பார்த்தாலும், கருப்பு-வெள்ளை ஒளிப்பதிவு என்பது இன்றும் “வலிமையான கலைத் தீர்மானமாக” (ஆர்டிஸ்டிக் சாய்ஸ்) உருவெடுத்துள்ளது.
நவீன சினிமாவில் கருப்பு-வெள்ளை ஒளிப்பதிவு கதையை வகைப்படுத்தவும், காலகட்டங்களை உருவாக்கவும், மனித உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தவும் சக்திவாய்ந்த கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
கதையை வகைப்படுத்துதல் (செக்மெண்டிங் நரேடிவ்ஸ்)...
நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் சுந்தர்.சி இணைந்து புதிய திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்தப் படத்துக்கு ‘புருஷன்’ என தலைப்பிட்டுள்ளனர். இதன் டைட்டில் புரோமோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
விஷால் உடன் நடிகை தமன்னா மற்றும் நடிகர் யோகி பாபு இதில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். ஏசிஎஸ் அருண் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை வெங்கட் ராகவன் எழுதி உள்ளார்....
திரெளபதி-2 படத்தை வெளியிட தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த மகாமுனி அம்பலகாரர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு 14-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த மன்னன் வீர வல்லாள தேவன். இவரின் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் திரௌபதி-2 படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
வீர வல்லாள தேவன் என்பவர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு...
நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். அனில் ரவிபுடி இயக்கிய இப்படம் வெற்றிபெற்றதை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, சிரஞ்சீவி அறிக்கை வெளியிட்டுஉள்ளார்.
இந்நிலையில் அவர் இயக்குநர் பாபியுடன் மீண்டும் இணைகிறார். இந்தப் படம் அப்பா, மகள் உறவை பற்றிய படம் என்று கூறப்படுகிறது. இருவரும் இதற்கு முன் ‘வால்டர் வீரய்யா’ படத்தில் பணியாற்றி இருந்தனர்.
இதில்...
அர்ஜுன் தாஸ், அன்னா பென் நடிக்கும் படத்துக்கு ‘கான் சிட்டி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் யோகிபாபு, வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்பட பலர் நடிக்கின்றனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்குகிறார்.
ஷான் ரோல்டன் இசை அமைக்கும் இப்படத்துக்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். “ஒரு மிடில்...
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம், உலகளவில் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில், மொழிப் போராட்டப் பின்னணியில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம், பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. முதல் ஓரிரு நாட்கள் தடுமாறினாலும் அடுத்தடுத்த நாட்களில் நல்ல வசூலை பெற்றது.
முதல் நாளில் உலகளவில் ரூ.27 கோடிக்கும் மேல் வசூலித்த இப்படம், 11-வது நாளான இன்று இதுவரை ரூ.100 கோடி வசூலித்துள்ளது. "உலகம்...
‘லாரா’ படத்தைத் தொடர்ந்து எம்.கே.ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கும் படம், ‘அறுவடை’. எம்.கார்த்திகேசன் இயக்கி, ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சரவணன், ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் நடிக்கிறார்கள். ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ரகு ஸ்ரவண் குமார் இசை அமைத்துள்ளார்.
கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாகும் இப்படக் குழுவினர், கோயம்புத்தூரில் பொங்கல்...
ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம், ‘மை லார்ட்’. இதில் சைத்ரா ஜே. ஆச்சர், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், கோபி நயினார், வசுமித்ர உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார்.
அம்பேத்குமார் வழங்குகிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதையின் நாயகனான சசிகுமார் பேசும் வசனங்களும் விளிம்பு நிலை மக்களுக்கான ஜனநாயக உரிமைகளும் சிறுநீரகத் திருட்டு...
ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், அக் ஷய் கன்னா உள்பட பலர் நடித்துள்ள இந்தித் திரைப்படம், ‘துரந்தர்’. ஆதித்யா தார் இயக்கிய இந்த ஸ்பை த்ரில்லர்’ படம், 2025-ம் ஆண்டு அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் முதலிடத்தில் உள்ளது. இப்படம் இதுவரை ரூ. 1,280 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இந்தியாவில் மட்டும் ரூ.879 கோடி வசூலித்துள்ளது. இப்படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின்...
