நான் நிம்மதியாக சாப்பிடுவது ஆர்.பி.சவுத்ரி போட்ட பிச்சை என்று இயக்குநர் விக்ரமன் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணமடைந்தார். அவருடைய மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் திரையுலகம் மட்டுமன்றி பல்வேறு மொழி படங்களையும் தயாரித்து வெற்றி கண்டவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனரான ஆர்.பி.சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.பி.சவுத்ரி மறைவு குறித்து இயக்குநர் விக்ரமன் கண்ணீருடன் வீடியோ பதிவொன்றை...
என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி.செளத்ரி எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணமடைந்தார். அவருடைய மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் திரையுலகம் மட்டுமன்றி பல்வேறு மொழி படங்களையும் தயாரித்து வெற்றி கண்டவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனரான ஆர்.பி.சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.பி.சவுத்ரி மறைவு...
பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி (72) சாலை விபத்தில் மரணமடைந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியில் பல படங்களைத் தயாரித்தவர் ஆர்.பி.சவுத்ரி. ராஜஸ்தானை சேர்ந்த இவர், பல படங்களை விநியோகித்தும் உள்ளார்.
தமிழில், 1990-களில் ஏராளமான புதிய இயக்குநர்களையும் நடிகர், நடிகைகளையும் அறிமுகப்படுத்தியவர் இவர். விக்ரமன் அறிமுகமான ‘புதுவசந்தம்’, கே.எஸ்.ரவிகுமார் அறிமுகமான ‘புரியாத புதிர்’, சரத்குமார் நடித்த ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’, ‘சூர்ய...
பாரத், ‘குடும்பஸ்தன்’ சான்வி மேக்னா நடிக்கும் படத்துக்கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்கும் இதில் பால சரவணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்கிறார்.
‘மாவீரன்’, ‘3 பிஹெச்கே’ போன்ற படங்களைத் தயாரித்த சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிக்கிறார். ரொமான்டிக் காமெடி டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 105+ தொகுதிகளை வசப்படுத்தி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள திமுக கூட்டணிக்கு 74 தொகுதிகளும், மூன்றாம் இடத்தில் உள்ள அதிமுக கூட்டணிக்கு 53 தொகுதிகளும் மட்டுமே வசமாகின்றன
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த்: நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு...
முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தோல்வி மனதை பிசைகிறது என இயக்குநர் மாரி செல்வராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இந்த தேர்தல் முடிவுகள் நிறைய அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் சில நம்பிக்கைகளையும் எனக்கு கொடுத்திருப்பதை போல பெருவலியையும் கொடுத்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தோல்வி மனதை பிசைகிறது. அரசியலின் அடிப்படையான சித்தாந்தம், கொள்கை கோட்பாடுகளை தாண்டி மக்கள் திரள் , மக்கள் பிரியம் , மக்கள்...
கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்ன விலை’. சஜீவ் பழூர் இயக்கியுள்ள இதில் ஒய்.ஜி. மகேந்திரா, பூர்ணிமா பாக்யராஜ், மோகன் ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணன், தீபா சங்கர், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமூக-அரசியல் பின்னணியுடன் கூடிய குடும்ப த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை கலாமயா பிலிம்ஸ் சார்பில் கிதேஷ் வி தயாரித்துள்ளார்.
இப்படம் வெளிவருவதற்கு முன்பே தாதா சாகேப் பால்கே...
‘தலைவன் தலைவி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கும் படத்துக்கு ‘பரிமளா அண்ட் கோ’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
ஜெயராம், ஊர்வசி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சாண்டி, அனந்திகா சனில்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். யோகிபாபு, மிஷ்கின், சிங்கம்புலி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன், தமிழ்க்குமரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பசங்க புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன்...
சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்துவதே சமூகப் பார்வை கொண்ட படைப்பாளியின் இலக்காக இருக்க இயலும். அதை அந்தப் படைப்பாளி அனல் பறக்கவும் சொல்லலாம் அல்லது அரவணைத்தும் சொல்லலாம். நாம் இன்னது என்று வரையறுக்க இயலாத பல உத்திகளை அறிந்தவராக இருப்பவர்தான் ஒரு சமூகப் படைப்பாளியாக தனித்து நிற்கிறார்.
அப்படியாக ஒரே திரைப்படத்தில் மனித மனங்களில் உள்ள வன்மமற்ற போட்டி, பொறாமைகள், உள்ளூர் கிரிக்கெட் வரை புரையோடிப்போன சாதிய வன்மம், பெண்களின் சுயமரியாதை...
நடிகர் பிரம்மானந்தம் வைத்த நம்பிக்கை – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 31
admin - 0
திரைப்படங்களில் டப்பிங் பேசும் போது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். ஆரம்பத்தில் எந்த வாய்ப்பும் எளிதாக எனக்கு கிடைத்துவிடவில்லை. தங்களை ‘ப்ரமோட்’ பண்ணிக்கொள்வதற்கு இப்போது இருப்பது போல, அலைபேசியோ, ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களோ அப்போது இல்லை.
ஒவ்வொரு தயாரிப்பு நிர்வாகியாக போய் பார்க்க வேண்டும், இயக்குநர்களைச் சந்திக்க வேண்டும், டப்பிங் ரைட்டர்களைப் பார்க்க வேண்டும், நேரடிப் படங்கள் என்றால் அசோசியேட், அசிஸ்டென்ட் இயக்குநர்கள் என...









