புதிய சிம்பொனி ஒன்றை எழுத இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.
லண்டனில் கடந்த மார்ச் 8-ம் தேதி ‘வேலியன்ட்’ என்ற தலைப்பில் பாரம்பரிய சிம்பொனி இசையை அங்குள்ள ஈவென்டிம் அப்போலோ அரங்கில் அரங்கேற்றம் செய்தார் இளையராஜா. உலகின் மிகச் சிறந்த ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து அவர் இதை அரங்கேற்றினார்.
அவரது இசைக் குறிப்புகளை நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பல்வேறு இசைக் கருவிகளில் ஒரே நேரத்தில் இசைத்தது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இதன்மூலம்,...
பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான கோவர்தன் அஸ்ரானி காலமானார். அவருக்கு வயது 84. அவர் அஸ்ரானி என சினிமா ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார்.
திங்கட்கிழமை (அக்.20) அன்று மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார். இதை அவரது மேலாளர் உறுதி செய்தார். சினிமா உலகில் சுமார் 5 தசாப்தங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஆறு படங்களை இயக்கி உள்ளார். சுமார் 300-க்கும் மேற்பட்ட...
“நான் சாதியால் நெருக்கடிக்கு உள்ளான ஒரு ஆள்” என்று மாரி செல்வராஜ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
‘பைசன்’ திரையிடப்பட்டு வரும் திரையரங்குகளுக்கு சென்று விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு. இதற்காக திருநெல்வேலியில் உள்ள ராம் திரையரங்கிற்கு சென்றார்கள். இதில் இயக்குநர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ராஜிஷா விஜயன் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
பார்வையாளர்களுடன் உரையாடிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய சில...
’வீர தீர சூரன்’ படத்துக்குப் பிறகு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி, அப்படங்கள் தொடங்கப்படாமல் இருக்கின்றன. இதனால் விக்ரமின் அடுத்த படம் என்ன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனால், அடுத்ததாக அறிமுக இயக்குநர் ஒருவரது இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் படத்தினை முடித்துவிட்டு, விஷ்ணு எடவன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விக்ரம். இப்படத்தினை வேல்ஸ்...
ஒளி சினிமாவின் ஆன்மா எனில், நிழல் அதன் நிசப்தமான குரல். அது வெறும் இருளல்ல. ஒரு காட்சியின் உணர்ச்சி, மனநிலை, தத்துவம், கூடவே கதையின் மறைமுகமான அடுக்குகளையும் வெளிப்படுத்தும் சக்தி கொண்டது. ஒளி கண்களுக்குத் தெரியலாம், ஆனால் நிழல் நேராக மனதுடன் பேசுகிறது. சினிமா வரலாற்றில் பல ஒளிப்பதிவாளர்கள் நிழலைப் பயன்படுத்தி காட்சிகளை மட்டும் அழகுபடுத்தாமல், கதையின் உள் உலகையும் செதுக்கியுள்ளனர்.
கே.எஸ். பிரசாத் – மர்மத்தைச் செதுக்கிய நிழல்கள்: ஆரம்பகால...
“தற்போதைய சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல்நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்று சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஜாய் கிரிசில்டா எழுப்பியுள்ள தற்போதைய சர்ச்சையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்குமாறு பல நபர்கள் என்னை அணுகி வருகின்றனர்.
நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையும், சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும், இந்த சர்ச்சையைத்...
பி.ஆர்.சோப்ராவின் 1988-ம் ஆண்டு தொலைக்காட்சி தொடரான மகாபாரத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் பங்கஜ் தீர் நேற்று காலமானார். அவருக்கு வயது 68.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பங்கஜ் தீர், கடந்த சில மாதங்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். சந்திரகாந்தா, பதோ பாகு, கானூன் போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் சோல்ஜர், ஆண்டாஸ், பாட்ஷா உள்ளிட்ட பல்வேறு திரைப் படங்களிலும் அவர்...
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷனும் ஜப்பான் தூதரகமும் இணைந்து சென்னையில் ஜப்பான் திரைப்பட விழாவை இன்று (அக்.15) முதல் அக்.17-ம் தேதி வரை நடத்துகிறது. சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள கோத்தே இன்ஸ்டிடியூட்டில் இப்பட விழா நடக்கிறது.
அக்.15 அன்று மாலை 6 மணிக்கு அண்ட் சோ த ேபட்டன் இஸ் பாஸ்டு (And So the Baton Is Passed) படம் திரையிடப்படுகிறது. அக்.16-ல் மாலை 5 மணிக்கு,...
கன்னட நடிகையான ருக்மணி வசந்த், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர்-1’ படம் பான் இந்தியா முறையில் 5 மொழிகளில் வெளியானது. இதில் இளவரசியாக நடித்த அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரை புதிய ‘நேஷனல் கிரஷ்’ என்று சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
இதுபற்றி அவர் கூறும்போது, ``பலர் என்னை அப்படி அழைக்கிறார்கள். அது நன்றாக இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி...
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘டியூட்’. சரத்குமார், ரோகிணி, ‘பரிதாபங்கள்’ டேவிட் உள்பட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு அக். 17-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து...










