Google search engine

தக்கலை:   பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் மீது வழக்கு

தக்கலை அருகே மருதூர்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் சம்பவ தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (32) என்பவர் இளம்பெண்ணின் வீட்டில் அத்துமீறி நுழைந்து ஆபாசமாகப் பேசி பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். உடனடியாக இளம்பெண் சத்தம் போடவே...

புதுக்கடை: பெண் மீது தாக்குதல்… தாய், மகள் மீது வழக்கு

மேலங்கலம் பகுதி பட்டன்காடு விளை என்ற இடத்தை சேர்ந்தவர் தங்கப்பன் மனைவி பங்கஜம் (50). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா மனைவி நிர்மலா (50). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். பங்கஜத்துக்கு பணம் கொடுத்தது சம்பந்தமாக இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. நேற்று நிர்மலாவும்...

புதுக்கடை: வாலிபர் மீது தாக்குதல் ஒருவர் மீது வழக்கு

புதுக்கடை அருகே பிலாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அபினேஷ் ஜாண் (31). இவர் பால் வியாபாரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுபி தேவபிள்ளை என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவ தினம் அபினேஷ் ஜாண் பைக்கில் புதுக்கடை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளை சுபி...

கன்னியாகுமரி: காசி விஸ்வநாதர் கோயில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள கோதைகிராமம் காசி விஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்பாள் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியை ஒட்டி காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பால், தயிர், பன்னீர், களபம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களினால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும்...

நாகர்கோவில்: விவசாயிகள் குறைதீர் கூட்டம்

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25-ந் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. கடந்த மாதம் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு இந்த கூட்டத்தில் பதில்கள் அளிக்கப்படும்.  மேலும்...

தக்கலை: மதுபாரில் சிறார்கள் வீடியோ வைரல் ; போலீஸ் விசாரணை

தக்கலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சிறுவர்கள் 3 பேர் மது அருந்தும்  வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. மது அருந்துவதை எச்சரித்த நபர்களை சிறுவர்கள் அவமானப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. 21 வயது உட்பட்டவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என தடை உள்ளது.  எந்த அடிப்படையில் இந்த...

குழித்துறை: திருச்சி சிவா படம் எரித்து காங்கிரஸ் போராட்டம்

காமராஜர் குறித்து திமுகவை சேர்ந்த திருச்சி சிவா எம்பி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலையில் குழித்துறையில் உள்ள குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு காங்கிரஸ் நிர்வாகிகள் திருச்சி சிவா எம்பி உருவப்படத்தை எரித்தும், செருப்பால் அடித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.  மேலும்...

கொல்லங்கோடு: கேரளாவில் இருந்து கொண்டு வரும் தெரு நாய்கள்

குமரி மேற்கு கடற்கரை சாலையில் கொல்லங்கோடு சுற்றுப் பகுதியில் இரவு வேளைகளில் சமூக விரோதிகள் சிலர் கேரளா தெரு நாய்களை கும்பலாக வாகனங்களில் கொண்டு வந்து விட்டு செல்கின்றனர்.  இந்த நாய்கள் அணிவகுத்து அந்தப் பகுதிகளில் கோழிக் கறிக்கடைகளில் தங்கி விடுகின்றது. இப்படி கொண்டு வந்து விடப்படும் நாய்களால்...

திருவட்டார்: ஆதிகேசவபெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் ஆடி மாதம் முதல் நாளான நேற்று பெருமாளுக்கு பலாக்காயும், கஞ்சியும் நிவேத்யமாக படைக்கப்பட்டது. 2-ம் நாள் பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் ஆதிகேசவபெருமாளுக்கு படைக்கும் பெருந்தமிர்து பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் வரை...

வில்லுக்குறி: பேரூராட்சி அதிகாரி, ஊழியர்கள் மீது வழக்கு

வில்லுக்குறி பேரூராட்சி, மாம்பழத்துறையாறு அணை செல்லும் வழியில் பேரூராட்சியின் வளம் மீட்புபூங்கா உள்ளது. இங்கு ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவக் கழிவுகளை எரித்த சம்பவம் நடந்தது.  இது குறித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலர், இரணியல் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து இலவச சட்ட உதவி மையம்...