தேங்காப்பட்டணம்: துறைமுக பணி; தமிழக முதல்வர் திறந்தார்
கிள்ளியூர், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.60 கோடி மதிப்பில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (8-ம் தேதி) காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமை வகித்தார். கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார்....
குமரியில் கஞ்சா வழக்கில் 465 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக 465 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். கஞ்சா...
தேவிகோடு: சந்தன மரம் வெட்டி கடத்தியவர் கைது
தேவிகோடு பகுதியைச் சேர்ந்த அபீஸ் (32) என்பவர் தனது தோட்டத்தில் நட்டிருந்த சந்தன மரத்தை மர்ம நபர் ஒருவர் வெட்டி கடத்திச் சென்றார். இது குறித்து அவர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், உதயமார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (32) என்பவரை...
குமரி: மேம்பாலத்தில் அண்ணன் தங்கை பலி; கலெக்டர் ஆய்வு
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கார் மோதி கேரளாவைச் சேர்ந்த அண்ணன்-தங்கை ரஞ்சித், ரம்யா உயிரிழந்தனர். மேம்பாலத்தின் உச்சியிலிருந்து 40 அடி பள்ளத்தில் பைக்குடன் தூக்கி வீசப்பட்ட இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த குமரி கலெக்டர் அழகு மீனா, நேற்று 7-ம் தேதி விபத்து நடந்த...
பத்மநாபபுரம்: அதிமுகவினர் 28 பேர் மீது வழக்கு பதிவு
பத்மநாபபுரம் நகராட்சி 5வது வார்டில் சாக்கடை கலந்த குடிநீர் விநியோகம் குறித்து அதிமுக நகர செயலாளர் டேனியல் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் ஆழ்துளை கிணறு அமைப்பதாகவும், அதுவரை தினமும் குடிநீர் வாகனத்தில் வழங்குவதாகவும் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும்,...
மார்த்தாண்டம்: ரயில் சுரங்க பாதையில் வாலிபர் உயிரிழப்பு
மார்த்தாண்டம் ரயில்வே சுரங்கப்பாதை தண்டவாளத்தில் நேற்று இரவு ரத்தக்காயங்களுடன் ஒருவர் அடிபட்ட நிலையில் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் யார்,...
கன்னியாகுமரி: மரவள்ளி கிழங்கால் நாட்டு வெடிகுண்டு தயாரித்தவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட தாடகை மலையில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், பொன்னம்பலம் (42) என்பவர் கைது செய்யப்பட்டார். மரியதாஸ் (35) தப்பி ஓடினார். மரவள்ளி கிழங்கில் வெடிமருந்து நிரப்பி வனவிலங்குகளை வேட்டையாடும் முறை பின்பற்றப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கைது...
கொல்லங்கோடு: திருமண வேன் கவிழ்ந்து 18 பேர் காயம்
கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த வினு என்பவர், மகளின் திருமண விருந்துக்காக நேற்று மாலை கேரள மாநிலம் பாலராமபுரம் பகுதிக்கு 4 வேன்களில் சென்றார். இதில் ஒரு வேனில் 24 பேர் பயணம் செய்தனர். கொல்லங்கோடு அருகே மணலி பகுதியில் சென்றபோது, ஒரு பைக்கில் மோதி நிலை தடுமாறி...
கிள்ளியூர்: இரட்டை வாக்காளர்கள் கண்டறிதல்; கலெக்டர் ஆய்வு
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கடை பேரூராட்சி பகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்டோர், இரட்டை பதிவு, இடம் பெயர்ந்தோர், கண்டறியப்படாத வாக்காளர்களின் கணக்கீடு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மறு ஆய்வு செய்கின்றனர். குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேற்று (7-ம் தேதி) இவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு...
நாகர்கோவில் மாநகராட்சி நகர் நல அலுவலர் நியமனம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர நகர் நல அலுவலராக அரவிந்த் ஜோதி பொறுப்பு வகித்து வந்த நிலையில், தேனி சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த திட்ட அதிகாரி மனோஜ் குமார் புதிய நகர் நல அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மனோஜ் குமார் அவரிடம் பொறுப்பை ஒப்படைக்க அரவிந்த் ஜோதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது....













