நித்திரவிளை: வீட்டின் மீது முறிந்து விழுந்த மின்கம்பம்
நித்திரவிளை அருகே இரவிபுத்தன் துறை செயிண்ட் ஜோசப் காலனி பகுதியை சேர்ந்தவர் பவுலி (55). இவரது கணவர் ஜான்ரோஸ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர் தனது இரண்டு மகள்களுடன் நேற்று காலை 8 மணி அளவில் வீட்டின் உள்ளே இருக்கும்போது, வீட்டின் அருகே நிற்கும்...
கோட்டார் காவல் நிலையத்தில் ஆயுத பூஜை விழா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று (அக்.,11) போலீசார் காவல் நிலையத்தை தூய்மைப்படுத்தி காவலர்களின் வாகனங்கள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்டவற்றிற்கு மாலை அணிவித்து பூஜை செய்து ஆயுத பூஜையை விமர்சையாக கொண்டாடினர். இதில் ஏஎஸ்பி லலித்குமார், ஆய்வாளர் அருள்பிரகாஷ் முன்னிலையில்...
குமரி: விளையாட்டு பொருட்களுக்கு ஆயுத பூஜை..சிறுவனின் வைரல் வீடியோ
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடையை சேர்ந்த ஷாஜு என்பவரின் 3 வயது சிறுவன் ஷாமல் யாத்ராவுக்கு அவரது பெற்றோர் விளையாடுவதற்காக பல்வேறு வகையான விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனர். நேற்று (அக்.,11) ஆயுத பூஜையை ஒட்டி விளையாட்டுப் பொருட்களை ஒரே இடத்தில் வைத்து சிறுவன் ஷாமல் யாத்ரா பூஜை...
அருமனை: சாலையில் ஜல்லி குவியல்; போக்குவரத்து பாதிப்பு
அருமனை அடுத்த இடைக்கோடு பஞ்சாயத்து 17 வது வார்டுக்கு உட்பட்ட உத்தரங்கோடு பகுதி உள்ளது. இந்த சாலை மார்த்தாண்டத்தில் இருந்து மலையோர பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாகும். இந்த பகுதியில் மழை நீர் வடிகால் ஓடை செய்யும் பணி நடைபெற உள்ளது.
இதற்க்காக இன்று (அக்.,12) சாலையில் நடுவே...
நித்திரவிளை: கலிங்கராஜபுரத்தில் முதியவர் மாயம்
நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரத்தை சேர்ந்தவர் பாவல்ஸ் (63). மீன்பிடி தொழிலாளி. தற்போது வேலை செய்ய முடியாமல் வீட்டில் இருந்துள்ளார். இவரது மனைவி தாமஸ் மேரி. சம்பவ தினம் தாமஸ் மேரி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது பாவல்சை காணவில்லை....
கருங்கல்: சாம்சங் நிறுவன விவகாரம்; சி.ஐ.டி.யூ கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். தொழிற்சங்க அமைக்கும் பதிவை தொழிலாளர் துறை உடனடி செய்ய வேண்டும். உட்பட கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், அடாவடித்தனமாக காவல்துறை அத்துமீறி தொழிலாளர்களையும், சங்க தலைவர்களையும் கைது செய்த...
கருங்கல்: போலீஸ்காரர் வீட்டு கதவு உடைத்து திருட்டு
கருங்கல் அருகே கம்பிளார் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி மகன் லாசர். இவர் சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி, குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்த லாசர் கடந்த 2-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றார். 8-ம் தேதி பக்கத்தில் உள்ளவர்கள் உறவினர்...
குழித்துறை: நன்றி அறிவிப்பு கூட்டமாகமாறிய உண்ணாவிரத போராட்டம்
குழித்துறை அருகே மருதன்கோடு பகுதியில் இருந்த மகாத்மா காந்தி சிலை கடந்த மாதம் இரவில் மர்ம ஆசாமிகளால் சேதப்படுத்தப்பட்டது. இதில் குற்றவாளியை போலீசார் கைது செய்ய முடியாமல் திணறி வந்தனர். இதனை தொடர்ந்து மகாத்மா காந்தி சிலையை சேதப் படுத்திய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும்...
மார்த்தாண்டம்: வணிகர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு
மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வர்த்தக சங்க அரங்கத்தில் நேற்று (அக்.,10) நடைபெற்றது. புதிய தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜா செல்வராஜ் வரவேற்று பேசினார். புதிய செயலாளர் சுரேஷ் குமார் அறிமுக உரை நிகழ்த்தினார்.
விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்...
நாகர்கோவிலில் உலக மனநல தின விழிப்புணர்வு ஊர்வலம்
மனநலம் குறித்த விழிப்புணர்வையும், சிகிச்சை முறை அதன் தேவை குறித்த விழிப்புணர்வையும் பொது மக்களுக்கு ஏற்படுத்திட உலக மனநல தின விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நேற்று (அக்.,10) மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பாக குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியை கன்னியாகுமரி...













