தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் மொத்தம் 50 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து கஜினி மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹபீஸ் உமர் நேற்று கூறியதாவது: காபூல் - காந்தகார் நெடுஞ்சாலையில் புதன்கிழமை இரவு பயணிகள் பேருந்தும் எண்ணெய் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதுபோல் இதே நெடுஞ்சாலையின் மற்றொரு இடத்தில் பயணிகள் பேருந்தும் சரக்கு லாரியும் மோதிக்கொண்டன. இவ்விரு விபத்துகளிலும் பெண்கள், குழந்தைகள்...
சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் சிக்கியுள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது. 2025 பிப்ரவரி மாதம் அவர் பூமி திரும்புவார் என கடந்த ஆகஸ்ட் மாதம் நாசா தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அவரது வருகை மேலும் தாமதமாகி உள்ளது.
நாசா விண்வெளி வீரர்கள் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலக்ஸாண்டர் கோர்புனோவ்...
புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தையில் அறிமுமாக உள்ள இந்த தடுப்பூசி கட்டணமின்றி கிடைக்கும் என தகவல்.
புற்றுநோய்க்கான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதை ரஷ்ய நாட்டு செய்தி முகமை TASS உறுதி...
ஜார்ஜியாவில் இந்திய உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த 12 இந்தியர்கள் சடலாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் கார்பன் மோனாக்சைடு விஷவாயு தாக்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஐரோப்பிய நாடான ஜார்ஜியாவின் மலைப்பகுதியான குடவுரி என்ற இடத்தில் சொகுசு விடுதி உள்ளது. இதில் இந்திய உணவுகளை பரிமாறும் உணவகம் உள்ளது. இதில் வடஇந்திய தொழிலாளர்கள் 12 பேர் பணியாற்றி வந்தனர். இவர்கள் விடுதியின் இரண்டாவது மாடியில் உள்ள அறைகளில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் தங்கள்...
சிரியாவில் அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு புரட்சி வெடித்தது. ஆசாத் படைகளுக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்றது. இதில் சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 27-ம் தேதி சிரியா ராணுவத்துக்கு எதிராக மிகப்பெரிய போரை துருக்கி ஆதரவு பெற்ற எச்டிஎஸ் கிளர்ச்சிப் படை தொடங்கியது. அதேநேரம், ஈரானும், ரஷ்யாவும் ஆதரவு தராததால்...
ஜார்ஜியாவில் இந்திய உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த 12 இந்தியர்கள் சடலாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் கார்பன் மோனாக்சைடு விஷவாயு தாக்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஐரோப்பிய நாடான ஜார்ஜியாவின் மலைப்பகுதியான குடவுரி என்ற இடத்தில் சொகுசு விடுதி உள்ளது. இதில் இந்திய உணவுகளை பரிமாறும் உணவகம் உள்ளது. இதில் வடஇந்திய தொழிலாளர்கள் 12 பேர் பணியாற்றி வந்தனர். இவர்கள் விடுதியின் இரண்டாவது மாடியில் உள்ள அறைகளில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் தங்கள்...
மாஸ்கோவில் மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படையின் பொறுப்பதிகாரியான மூத்த ஜெனரல் இன்று கொல்லப்பட்டதாக அந்நாட்டு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.
கிரெம்ளினின் தென்கிழக்கில் 7 கி.மீ.,தொலைவில் உள்ள ரியாஷன்ஸ்கி பிரோஸ்பெக்ட் அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே நடந்த இந்தக் குண்டுவெடிப்பில், ரஷ்யாவின் அணுசக்தி மற்றும் ரசாயன, உயிரியல் பாதுகாப்பு படையின் தலைவரான லெப்டினட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் உயிரிழந்தார்.
இதுகுறித்து விசாரணைக்குழு கூறுகையில், ரஷ்ய கூட்டமைப்பின்...
அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு அதிபர் பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஸ்கான்ஸினில் உள்ள மேடிசன் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் நுழைந்த சிறுவன் ஒருவன் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினான். இதில் ஆசிரியர் ஒருவரும், சிறுவனின் சக மாணவர் ஒருவரும் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரும் சடலமாக நிகழ்விடத்தில் மீட்கப்பட்டார்.
சம்பவம் நடந்த பள்ளியில் 400...
கனடாவில் இந்திய மாணவர்கள் 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வெறுப்பு குற்றம் காரணமாக இந்த சம்பவங்கள் நடைபெறுவதால், இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கனடா ஆதரவு தெரிவித்து, இந்தியா மீது குற்றம் சுமத்தியதால் இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனடா நாட்டு மக்கள் அல்லது காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு விசாக்கள் வழங்குவதை இந்தியா மறுக்கிறது என கனடா ஊடகத்தில் செய்தி வெளியாகின....
சிரியாவில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களில் ஒருவர், அங்குள்ள அசாதாரண சூழ்நிலையை விவரித்தார். சிரியாவில் வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் 13 ஆண்டு கால உள்நாட்டுப் போருக்கு பிறகு கிளர்ச்சிப் படைகள் ஆட்சியை கைப்பற்றியுள்ளன. அங்கு பதற்றமாக சூழல் நிலவுகிறது. இதையடுத்து சிரியாவில் தவித்த 75 இந்தியர்களை அங்குள்ள இந்தியத் தூதரகம் பத்திரமாக மீட்டது. அவர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு பேருந்தில் அழைத்து...










