கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் மந்திர் மீது மர்ம நபர்கள் நேற்று தாக்குதல் நடத்தி உள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சினோ ஹில்ஸ் பகுதியில் இந்து கோயிலான பாப்ஸ் ஸ்ரீ சுவாமி நாராயண் மந்திர் மீது மர்ம நபர்கள் சிலர் நேற்றுமுன்தினம் தாக்குதல் நடத்தினர். இதில் கோயில் சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக இணையதளத்தில் வெளியான பதிவில் செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறும்போது,...
கனடா புதிய பிரதமரானார் மார்க் கார்னி: அமெரிக்க பரஸ்பர வரி விதிப்புக்கு பணிய மாட்டோம் என பேச்சு
admin - 0
கனடா நாட்டின் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், அந்நாட்டின் 24வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கனடா வங்கியின் முன்னாள் தலைவரான அவர் பிரதமராவது அந்நாட்டின் தற்போதைய நிதி சவால் சூழலில் கவனம் பெறுகிறது. மார்க் கார்னி கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராக பணியாற்றியுள்ளார். மேலும், 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராக...
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் அதிபர் ஆசாத் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இரு தினங்களில் மட்டும் பொதுமக்கள் உள்பட 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது அந்த நாட்டு வரலாற்றில் மோசமான உள்நாட்டு வன்முறை சம்பவங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
முன்னாள் அதிபர் ஆசாதுக்கு ஆதரவாக இருந்த அலவைட் சிறுபான்மை பிரிவினருக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை அன்று அந்த நாட்டின் தற்போதைய...
‘உக்ரைனுக்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிறுத்தியிருப்பது, எங்களை ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்க வைக்க அவர் முயற்சிப்பதாகவே தோன்றுகிறது’ என்று உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உக்ரைனின் நாடாளுமன்ற வெளியுறவு விவகாரக் குழு தலைவர் ஒலெக்சாண்டர் மெரேஷ்கோ கூறுகையில், “இப்போது உதவிகளை நிறுத்துவது என்பது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உதவுவதேயாகும். மேலோட்டமாக பார்த்தாலே இது மோசமானது. அவர் எங்களைச் சரணடைவதை நோக்கித்...
சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற போது அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த வரி விதிப்பு கடந்த பிப்ரவரி மாதமே அமல்படுத்த திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், போதைப் பொருள் அமெரிக்காவுக்குள் வருவதை தடுக்க அந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, இந்த கூடுதல் வரி விதிப்பு திட்டம் 30 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக ட்ரம்ப்...
ஹமாஸ் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என இந்தியாவிடம் இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது. தீவிரவாதத்திலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என இந்தியா கூறுகிறது. அதே நேரத்தில் பாலஸ்தீனத்தின் தனி நாடு கோரிக்கைக்கு இந்தியா ஆதரவாக உள்ளது. ஐ.நாவில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்க்கவும் இந்தியா ஆதரவு தெரிவித்து வருகிறது.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியபோது,...
பாகிஸ்தானிலுள்ள மதரஸாவில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் நடத்தும் மதரஸா பள்ளி ஒன்று உள்ளது. இந்த மதரஸா வளாகத்தில் மசூதி அமைந்துள்ளது. இந்த மதரஸாவில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமானோர் வளாகத்தில் கூடியிருந்தனர். இந்நிலையில் பிற்பகல் நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்தது.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் மசூதியில் வழிபாடு நடத்திய 5 பேர் உயிரிழந்தனர். மேலும்,...
இஸ்ரேலுடன் அடுத்த கட்ட சண்டை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என ஹமாஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் இடையே கடந்த மாதம் முதல்கட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து இஸ்ரேலில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகள் ஆகியார் விடுவிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் பிணைக் கைதிகள் 4 பேரின் உடல்களை ஹமாஸ் தீவிரவாதிகள் செஞ்சிலுவை சங்கம் மூலம்...
‘ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து பொய்களை பரப்புகிறது’ – ஐநா கூட்டத்தில் இந்தியா கண்டனம்
admin - 0
தோல்வி அடைந்த நாடான பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐநா மனித உரிமை ஆணையத்தின் 58வது அமர்வில், ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் இந்தியா மீது குற்றம் சாட்டி இருந்தது. இதற்கு, ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஷித்திஜ் தியாகி பதில் அளித்தார். அவர் தனது...
இஸ்ரேலுடன் அடுத்த கட்ட சண்டை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என ஹமாஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் - ஹமாஸ் இடையே கடந்த மாதம் முதல்கட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து இஸ்ரேலில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகள் ஆகியார் விடுவிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் பிணைக் கைதிகள் 4 பேரின் உடல்களை ஹமாஸ் தீவிரவாதிகள் செஞ்சிலுவை சங்கம் மூலம்...










