ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கத்தார் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு கத்தார் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் உறுப்பினர்கள் வசிக்கும் குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட கோழைத்தனமான இஸ்ரேலிய தாக்குதலை கத்தார் அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தக் குற்றவியல் தாக்குதல் அனைத்து சர்வதேச சட்டங்கள்...
இந்தியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த செனட் உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆஸ்திரேலிய பிரதமர்
admin - 0
ஆஸ்திரேலியாவில் குடியேறும் இந்தியர்கள் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அங்கு குடியேறிய வெளிநாட்டவர்களில் இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் 2-ம் இடத்தில் உள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 8.4 லட்சம் இந்தியர்கள் அங்கு வசிக்கின்றனர். இதுதவிர, ஆயிரக்கணக்கானோர் ஆஸ்திரேலியாவிலேயே பிறந்து குடியுரிமை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு எதிரான மனநிலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில வாரங்களாக வெளிநாட்டினர் அதிக அளவில் குடியேறுவதற்கு எதிராக, நாடு...
நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார்: அதிபர், பிரதமர் மாளிகை, நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு – முழு விவரம்
admin - 0
நேபாளத்தில் இளம் தலைமுறையினரின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்த நாட்டு பிரதமர் சர்மா ஒலி நேற்று பதவியை ராஜினாமா செய்தார். உலகின் ஊழல் மிகுந்த நாடுகளில் ஒன்றாக நேபாளம் திகழ்கிறது.
அந்நாட்டின் சமூக வலைதளங்களில் அண்மையில் ‘‘நெப்போ பேபி’’ என்ற பெயரில் வீடியோக்கள் பரவின. அதாவது நேபாளத்தின் அரசியல் தலைவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், பிரபலங்களின் வாரிசுகள் தங்களின் ஆடம்பர வாழ்க்கையை வீடியோவாக பதிவு...
ரஷ்யா உருவாக்கி உள்ள புற்றுநோய்க்கான தடுப்பூசி விரைவில் சந்தையில் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அரசின் அனுமதி கிடைத்ததும் இது சாத்தியமாகும்.
உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோயால் ஆண்டுதோறும் உலக அளவில் கோடிக் கணக்கான பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் புற்றுநோய்க்கான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் கடந்த ஆண்டு இறுதியில் தெரிவித்திருந்தார்.
இந்த தடுப்பூசியின்...
ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் திரும்ப மாட்டார்கள்: உக்ரைன் பிரதமர் யுலியா சிவிர்டென்கோ வேதனை
admin - 0
‘‘ரஷ்ய தாக்குதலில் நொறுங்கிய கட்டிடங்களை கட்டிவிடுவோம். ஆனால், உயிரிழந்தவர்களை திரும்ப வருவார்களா?’’ என்று உக்ரைன் பிரதமர் யுலியா சிவிர்டென்கோ தெரிவித்தார்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ படையில் சேர உக்ரைன் திட்டமிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் இருதரப்புக்கும் இடையில் மோதல் நீடிக்கிறது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷ்யா நேற்று மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்...
ஹூண்டாய் தொழிற்சாலையில் சட்டவிரோதமாக பணியாற்றிய 475 தென்கொரிய தொழிலாளர்கள் அமெரிக்காவில் கைது
admin - 0
அமெரிக்காவின் தென்கிழக்கு ஜார்ஜியா மாகாணத்தில் கட்டப்பட்டு வரும் ஹூண்டாய் தொழிற்சாலையில், தென்கொரியாவை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் சட்டவிரோதமாக பணியாற்றுவது தெரியவந்தது.
இவர்கள் சவானா என்ற இடம் அருகே எலாபெல் என்ற பகுதியில் உள்ள பேட்டரி தயாரிப்பு மையத்தில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் மற்றும் போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அவர்களை கண்டதும், சட்டவிரோதமாக பணியாற்றிய தென்கொரிய தொழிலாளர்கள் ஓடி மறைந்தனர். அவர்களை மடக்கிய அமெரிக்க போலீஸார்...
வரிகள், தடைகளை விதித்து இந்தியா, சீனாவை மிரட்டி பணிய வைக்க முடியாது: ரஷ்ய அதிபர் புதின் ஆதரவு பேச்சு
admin - 0
வரிகளையும் தடைகளையும் விதிப்பதன் மூலமாக ஆசியாவின் இருபெரும் பொருளாதாரங்களான இந்தியாவையும், சீனாவையும் மிரட்டி பணியவைக்க முடியாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாடு மற்றும் ராணுவ பேரணியில் பங்கேற்றதற்குப் பிறகு முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த புதின் இதுகுறித்து மேலும் கூறியதாவது: வரிகள் அதிகரிப்பு, வர்த்தக தடைகளை ஏற்படுத்துவது போன்ற செயல்களால் ஆசியாவில் வலிமை வாய்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளான...
“இந்தியாவையும், ரஷ்யாவையும் மோசமான சீனாவிடம் நாம் இழந்துவிட்டது போல் தெரிகிறது. அந்த நாடுகள் எதிர்காலத்தில் வளமாக இருக்கட்டும்” என சமூக ஊடகத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது விரக்தி கருத்தை தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியாவின் மீது அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி வரி விதித்தது. இதனால் இந்தியா - அமெரிக்க உறவில் விரிசல் ஏற்பட்டது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியிடம் இது...
இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள் வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்து வருவதாக ரஷ்ய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் டிமிட்ரி சுகாயேவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை 5.4 பில்லியன் டாலருக்கு வாங்க இந்தியா கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. அதன்படி இந்தியாவுக்கு வழங்கப்பட்ட எஸ்-400 ஏவுகணைகளும், உள்நாட்டு தயாரிப்பு வான் பாதுகாப்பு ஏவுகணைகளும் இணைந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டன. இவை,...
சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரிய தலைவர்கள் பங்கேற்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சனம்
admin - 0
சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரியத் தலைவர்கள் பங்கேற்றது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து 80 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், சீனாவில் நேற்று விழா நடத்தப்பட்டது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு விழாவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ஈரான் அதிபர் மசூத் பெஜேஷ்கியன் உள்பட சீனாவின் 26...










