ஜப்பான் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அந்நாட்டு பிரதமர் சனே டகாய்ச்சி தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது. இந்நிலையில், சனே டகாய்ச்சிக்கு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஜப்பான் நாடாளுமன்ற கீழவை பிரதிநிதிகள் சபையில் உள்ள 465 இடங்களுக்கான இந்த தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 316 இடங்களில் பிரதமர் சனே டகாய்ச்சி தலைமையிலான லிபரல் ஜனநாயகக்...
விண்வெளியில் மனிதர்கள் குடியேறுவது குறித்து பல்வேறு முறை எலான் மஸ்க் பேசியது உண்டு. அதற்காக அவர் டார்கெட் செய்தது செவ்வாய் கிரகத்தைதான். இந்த சூழலில் இப்போது செவ்வாயில் இருந்து அந்த திட்டத்தை நிலவுக்கு மஸ்க் மாற்றி உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார். “ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவில் நகரம் அமைக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறது. இதை 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில்...
 2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு டொனால்டு ட்ரம்பைக் கொல்ல சதி செய்த குற்றச்சாட்டில் ரியான் ரூத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள ஒரு கோல்ஃப் மைதானத்தில் 2024ஆம் ஆண்டு டொனால்டு ட்ரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​ஒரு துப்பாக்கியுடன் ரியான் ரூத் (59) புதர்களில் கிட்டத்தட்ட 10 மணி நேரம் மறைந்திருந்ததாகவும், பின்னர் உளவுத்துறையினரால் அவர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்...
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். அமெரிக்​காவை சேர்ந்​தவரும் நிதி ஆலோ​சகரு​மான ஜெப்ரி எப்​ஸ்​டீன் என்ற கோடீஸ்​வரர், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி​ய​தாகக் கைது செய்​யப்​பட்​டார். இது தொடர்​பாக ஏராளமான ஆவணங்​கள் திரட்​டப்​பட்​டு, வழக்கு விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில், சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த அவர் 2019-ல் தற்​கொலை செய்து கொண்​டார். அமெரிக்காவில் சமீபத்​தில் கொண்​டு​வரப்​பட்ட வெளிப்​படைத்​தன்மை சட்​டத்​தின் கீழ் ஜெப்ரி...
அமெரிக்கா​வுடன் இந்தியா அண்மையில் மேற்​கொண்ட வர்த்தக ஒப்​பந்​தம் பாகிஸ்தானில் கடும் அரசி​யல் அதிர்​வலைகளை ஏற்படுத்தி​யுள்​ளது. அமெரிக்கா​வுடன் பல மாதங்​களாக பாகிஸ்​தான் நெருக்கம் காட்​டி​யும், அதனால் எந்​தப் பயனும் இல்​லை. மரியாதையை விலைக்கு வாங்க முடியாது என்று நெட்டிசன்கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர். பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்​றும் ராணுவ தலை​மைத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் மேற்​கொண்ட தீவிர முயற்​சிகளுக்​குப் பலனாக, பாகிஸ்​தானுக்கு 19 சதவீத வரியை அமெரிக்கா நிர்​ண​யித்​தது....
இந்​தி​யாவை தளமாகக் கொண்டு ஆன்லைனில் பார்மசி என்ற பெயரில் போதை பொருட்கள் விற்​கும் சர்​வ​தேச கிரிமினல் அமைப்​புடன் தொடர்​புடைய 200-க்​கும் மேற்​பட்ட வலைகளங்​களை அமெரிக்கா முடக்கி உள்​ளது. இதுகுறித்து அமெரிக்க மருந்து கட்​டுப்​பாட்​டுத் துறை அதிகாரி​கள் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியதாவது: இந்​தி​யாவை தளமாகக் கொண்டு நூற்றுக்கும் மேற்​பட்ட இணை​யதளங்​களில் மருந்து மற்றும் போதைப் பொருட்​கள் விற்​ப​தாக பல்​வேறு புகார்கள் வந்​தன. இதையடுத்து மருந்​துக் கட்டுப்பாட்டு துறை கள ஆய்​வாளர்​கள்,...
டெல்​லி​யில் வரும் 19, 20 ஆகிய தேதி​களில் செயற்கை நுண்​ணறிவு தொடர்​பான உச்சி மாநாட்டை இந்​தியா நடத்​தவுள்​ளது. இதில் பல்​வேறு நாடு​களின் தலைவர்​கள், பிர​தி​நி​தி​கள் கலந்​து​கொள்​ளவுள்ளனர். இந்த உச்சி மாநாட்​டுக்கு வரு​வதை ஐ.நா. சபை தலை​வர் அன்டோனியா குட்​டேரஸும் உறுதி செய்​துள்​ளார். இதுகுறித்து செய்தி நிறு​வனத்​துக்கு நேற்று அவர் அளித்த பேட்​டி: செயற்கை நுண்​ணறி​வுத்​துறை என்​பது மிக​வும் வேக​மாக வளர்ந்து வரும் ஒரு துறை​யாகப் பார்க்​கப்​படு​கிறது. இதனால் பல நன்​மை​களும்,...
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளிலும் உள்ள வர்த்தக வாய்ப்புகளை, பரஸ்பரம் சிறப்பாக பயன்படுத்திக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்...
நைஜீரியாவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள குவாரா மாநிலத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மாலை 6:00 மணியளவில் (1700 GMT) துப்பாக்கி ஏந்திய நபர்கள் குவாராவில் உள்ள வோரோ கிராமத்துக்குள் நுழைந்து, கடைகளையும் மன்னரின் அரண்மனையையும் தீ வைத்துக் கொளுத்தினர். மேலும், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று...
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு கடந்த ஓர் ஆண்டுகாலமாக சுமுகமானதாக அமையவில்லை. வரி விதிப்பு, வர்த்தக உறவு என பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளன. இந்த சூழலில் திங்கட்கிழமை (பிப்.2) அன்று இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி உடன் ட்ரம்ப் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டிருந்தார்....