இங்கிலாந்தில் வெளிநாட்டினர் அதிகளவில் குடியேறுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி தீவிர வலது சாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில் நேற்று முன்தினம் லண்டனில் "யுனைட் தி கிங்டம்" பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்களது போராட்டத்துக்கு போட்டியாக சட்டப்பூர்வ குடியேறிகளுக்கு ஆதரவு தெரிவித்து "பாசிசத்துக்கு எதிரான பேரணி"க்கு ஸ்டாண்ட் அப் டு ரேசிசம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதில்,...
அமெரிக்காவில் குடியரசு கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சார்லிகிக், அமெரிக்க அதிபர் தேர்தலின்போது குடியரசு கட்சிக்கு ஆதரவாக மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.
கடந்த 10-ம் தேதி அமெரிக்காவின் யூட்டா மாகாணம், ஓரமில் உள்ள யூட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்லி கிக் பங்கேற்றார். அப்போது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில்...
நேபாள கலவரத்தை பயன்படுத்தி நிழல் உலக தாதா உதய் சேத்தி தப்பியோட்டம்: மேலும் 15,000 கைதிகள் மாயம்!
admin - 0
நேபாளத்தில் ஏற்பட்ட கலவரத்தைப் பயன்படுத்தி அங்குள்ள சிறைகளிலிருந்து சுமார் 15,000 கைதிகள் தப்பி உள்ளனர். இவர்களில் 32 வருடம் தண்டனை பெற்ற கைதியான நிழல் உலக தாதா உதய் சேத்தியும் மாயமாகி உள்ளார்.
நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தால் அந்நாட்டில் அமைதியின்மை நிலவுகிறது. பொது மக்களுக்கும் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
இந்தச் சூழலில் போராட்டக்காரர்களால் பல சிறைகளின் கதவுகளும் உடைக்கப்பட்டன. இதைப் பயன்படுத்தி நேபாளின் 20-க்கும் மேற்பட்ட சிறைகளிலிருந்து சுமார்...
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபர் தலை துண்டிக்கப்பட்டு கொலை: குடும்பத்தினர் கண்முன்னே நிகழ்ந்த கொடூரம்!
admin - 0
செப்டம்பர் 10 ஆம் தேதி டல்லாஸ் மோட்டலில் இந்திய வம்சாவளி நபர் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா எனும் நபர், வாக்குவாதத்தால் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
டெக்சாஸின் டெனிசன் கோல்ஃப் மைதானத்திற்கு அருகில் இன்டர்ஸ்டேட் 30 இல் அமைந்துள்ள டவுன்டவுன் சூட்ஸ் மோட்டலில் இந்த கொடூர சம்பவம் நடந்தது. இந்தக் கொலை சம்பந்தமாக டல்லாஸ் காவல்துறையினர்...
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி-க்கு போராட்டக்காரர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர் விரைவில் இடைக்கால பிரதமராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு...
பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 27 ஆண்டுகள் 3 மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற சதி செய்த குற்றத்துக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலின் லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜெய்ர் போல்சனாரோ கடந்த 2019 முதல் 2022 வரை அந்நாட்டின் அதிபராக இருந்தார். வலதுசாரி கட்சித் தலைவரான இவர், 2022-ல்...
நேபாளத்தில் அரசுக்கு எதிராக வெடித்த கலவரத்தால் பதற்றம் நீடிக்கும் நிலையில், அரசியல்வாதிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடக்கின்றன. அங்குள்ள வணிக வளாகங்களை இளைஞர்கள் கும்பலாகச் சென்று கொள்ளையடித்து வருகின்றனர். பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக இதுவரை 26 பேரை ராணுவம் கைது செய்துள்ளது.
2008-ல் அண்டை நாடான நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, கம்யூனிஸ்ட் அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. இந்நிலையில், நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த...
இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்கிறது: ட்ரம்ப் அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு
admin - 0
இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றும், பிரதமர் மோடியுடன் பேச ஆவலாக உள்ளேன் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், ட்ரம்புடன் பேச நானும் ஆவலாக உள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனல்டு ட்ரம்ப், உலக நாடுகள் தங்கள் நாட்டு பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார். இதனால், பதிலுக்கு பதில் வரி...
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக 200 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் 3 நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஃபிரான்சுவா பேரூ தோல்வியடைந்த நிலையில், அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் மொத்தம் 577 உறுப்பினர்கள் உள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பேரூக்கு எதிராக 364 உறுப்பினர்களும், ஆதரவாக 194 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.19 உறுப்பினர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்தனர்.
இதன்மூலம் கடந்த 12...
யார் இந்த சுசீலா கார்கி? – நேபாள ‘ஜென் ஸீ’ போராட்டக்கார்கள் ‘டிக்’ செய்த இடைக்கால பிரதமர்!
admin - 0
ஊழல் முறைகேடுகள், வேலையின்மை, கருத்துச் சுந்திரத்துக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேபாளத்தில் அரசுக்கு எதிராக வெடித்த இளைஞர்களின் போராட்டத்தால் பதற்றம் நீடித்து வருகிறது.
நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. அவருடன் சேர்ந்து, நாட்டின் அதிபராக இருந்த ராம்சந்திர பவுடேலும் ராஜினாமா செய்தார். இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் நிலவி வரும்...










