யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் ஸ்பெயின் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இங்கிலாந்து இழந்திருந்தது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கரேத் சவுத்கேட் தனது பதவியில் இருந்து விலகி உள்ளார்.
கடந்த 2016-ம்ஆண்டு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக சவுத்கேட் நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் 2018-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி அரை...
33-வது ஒலிம்பிக் திருவிழா வரும் 26-ம் தேதி பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இதில் இந்தியாவில் இருந்து 118 வீரர், வீராங்கனைகள் 16வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய வீரர், வீராங்கனைகளின் பயிற்சிக்கு மட்டும் ரூ.470 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்திய விளையாட்டு ஆணையத்தின் மிஷன் ஒலிம்பிக் செல்லின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி இந்த தகவலை பிடிஐ செய்தி நிறுவனம்...
ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி: 42 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
admin - 0
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தது.4 போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில்...
பிரான்ஸில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில், ஈரோட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ப.இனியன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஈரோடு இடையன்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த கே.பன்னீர்செல்வம் - சரண்யா தம்பதியின் மகன் ப.இனியன். 6 வயது முதல் செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த இனியன், மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் தொடங்கி சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்றார். பல்வேறு சர்வதேச போட்டிகளில் பட்டம் வென்ற இனியன் 2,513 புள்ளிகள்...
புற்றுநோயால் அவதிப்படும் முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு பிசிசிஐ ரூ.1 கோடி உதவி
admin - 0
புற்றுநோயால் அவதிப்படும் இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரூ.1 கோடி நிதியுதவியை வழங்கியுள்ளது.
அன்ஷுமன் கெய்க்வாட் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பிரிட்டனிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்க தேவையான உதவியை பிசிசிஐ வழங்கவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், முன்னாள் வீரர் சந்திப் பாட்டீல் ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில்...
கோபா அமெரிக்கா கால்பந்துத் தொடரின் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கனடா அணியை உருகுவே வீழ்த்தியது. பெனால்டி ஷூட்-அவுட்டில் உருகுவே 4-3 என்ற கணக்கில் வெற்றி கண்டது.
புகழ்பெற்ற கோபா அமெரிக் காகால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இறுதிச் சுற்றுக்கு அர்ஜெண்டினா, கொலம்பியா அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
இந்நிலையில், அரையிறுதியில் தோல்வி கண்ட கனடா மற்றும் உருகுவே அணிகள் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் நேற்று நார்த்...
நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஸ்பெயின் அணி. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் அந்த அணி வீழ்த்தி இருந்தது.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் இந்தப் போட்டி நடைபெற்றது. இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் பதிவு செய்யும் நோக்கில் கவனம் விளையாடின. இருந்த போதும் முதல் பாதியில் கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. முதல் பாதி ஆட்ட நேரத்தில்...
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவின் சார்லோட் நகரில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் உருகுவே - கொலம்பியா அணிகள் மோதின.
39-வது நிமிடத்தில் கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் கார்னரில் இருந்து அடித்த பந்தை ஜெபர்சன் லெர்மா துள்ளியவாறு தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 44-வது நிமிடத்தில் டேனியல் முனோஷ் உதவியுடன் பந்தை பெற்ற...
இந்திய ரேசிங் திருவிழா 2024 போட்டிகள் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் நடைபெற உள்ளது. இந்த கார் பந்தய திருவிழா இந்தியன் ரேசிங் லீக் (ஐஆர்எல்) மற்றும் பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் (எஃப் 4 ஐசி) ஆகிய இரண்டு சாம்பியன்ஷிப்களை உள்ளடக்கியதாகும்.
இந்த போட்டியில் கொல்கத்தா ராயல் டைகர்ஸ் எனும் அணி அறிமுகமாகிறது. இந்த அணியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ்...
ஐபிஎல் கிரிக்கெட்டால் இங்கிலாந்தின் சராசரி வீரர்களும் பணக்காரர்கள் ஆனார்கள்: பாய்காட் கிண்டல்
admin - 0
ஐபிஎல் பணமழை டி20 ரியால்டி ரக கிரிக்கெட் ஷோவினால் சாதாரணது முதல் சராசரி இங்கிலாந்து டெஸ்ட் வீரர்கள் பணக்காரர்கள் ஆனது தவிர வேறொரு பயனும் இங்கிலாந்துக்கு ஏற்படவில்லை என்று ஜெஃப்ரி பாய்காட் கடுமையாக கிண்டல் தொனியில் விமர்சனம் செய்துள்ளார்.
குறிப்பாக மேற்கு இந்தியத் தீவுகளில் சமீபத்தில் முடிந்த டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் ஆட்டத்தை பரிகசிக்கும் விதமாக கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கினார் ஜெஃப்ரி பாய்காட்.
இது குறித்து ஆங்கில பத்திரிகையில் அவர் எழுதிய...










