ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை வங்கதேச அணி பதிவு செய்துள்ளது.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேச அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 13-ம் தேதி டார்வினிலுள்ள மராரா மைதானத்தில் தொடங்கியது.
ஆஸ்திரேலியா...
ஆசியக் கோப்பை, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
துபாயில் ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியும், ஜப்பானில் ஆசிய விளையாட்டுப் போட்டியும் நடைபெறவுள்ளன. இந்நிலையில் இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் மகளிர் அணிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்(பிசிபி) நேற்று அறிவித்துள்ளது.
இரு போட்டிகளில் பங்கேற்கும் அணிகளுக்கு எய்மன் பாத்திமா கேப்டனாக இருப்பார். ஆசியக் கோப்பை போட்டி துபாயில் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 13 வரை நடைபெறவுள்ளது. ஆசிய...
இஸ்போர்ட்ஸ் செஸ் உலகக் கோப்பை போட்டியில் முன்னாள் உலக சாம்பியனும், நார்வே வீரருமான மாக்னஸ் கார்ல்சென் 2-வது முறையாக கோப்பையை வென்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இப்போட்டிகள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் மாக்னஸ் கார்ல்செனும், பெலாரஸ் கிராண்ட்மாஸ்டர் டெனிஸ் லசாவிக்கும் மோதினர்.
முதல் செட்டில் கார்ல்சென் 3-1 என்ற கணக்கிலும், 2-வது செட்டில் 3-1 என்ற கணக்கிலும் லசாவிக்கை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் கோப்பையைக் கைப்பற்றினார்.
கடந்த ஆண்டும்...
சிங்க்பீல்டு கோப்பை செஸ் போட்டியின் 3-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா தோல்வி கண்டார். கிராண்ட் செஸ் டூரின் கடைசி தொடரான சிங்க்பீல்டு கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவின் செயினிட் லூயிஸ் கிளப்பில் நடைபெற்று வருகிறது.
9 சுற்றுகள் கொண்ட கிளாசிக் போட்டியான இதில் நேற்று நடைபெற்ற 3-வது சுற்றில் ஆர்.பிரக்ஞானந்தாவும், ஜெர்மனியின் வின்சென்ட் கீமரும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய வின்சென்ட் கீமர், பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார்.
3-வது சுற்றின் முடிவில்...
நைஜீரியாவில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டியின் அணிப் பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்ருதி ஜோஷி தங்கம் வென்றார்.
நைஜீரியாவின் லாகோவில் நேற்று நடைபெற்ற மகளிர் அணி சேபர் பிரிவில் இந்திய அணி முதலிடம் பெற்று தங்கம் வென்றது. தங்கம் வென்ற இந்திய அணியில் ஸ்ருதி ஜோஷியும் இடம்பெற்றிருந்தார்.
வீராங்கனை ஸ்ருதி ஜோஷி மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் (சிஐஎஸ்எஃப்) பணியாற்றி வருகிறார். மேலும் இவர், இதே போட்டியின் மகளிர் தனிநபர் சேபர்...
இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வானது எனது அமைதிக்குக் கிடைத்த பரிசு என்று இந்திய கிரிக்கெட் அணியின் புதுமுக வீரர் சரண்ஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இலங்கை சென்றுள்ளது. இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி (நாளை) காலே நகரில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின்...
கிரிக்கெட்டை உலகளாவிய விளையாட்டாக மாற்ற பல நாடுகள் முன்வரவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரைப் போலவே ஐரோப்பாவில் ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் (இடிபிஎல்) கிரிக்கெட் தொடர் வரும் 26-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் டப்ளின் கார்டியன்ஸ், எடின்பர்க் கேஸ்டில் ராக்கர்ஸ்,
ராட்டர்டாம் டாக்கர்ஸ், கிளாஸ்கோ காஸ்மிக், ஐரிஷ் உல்ஃப்ஸ், ஆம்ஸ்டர்டாம் ஃபிளேம்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்தப்...
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் செய்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான நேற்றைய போட்டியின்போது அவர் ஷதமன் இஸ்லாம் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அவர் தனது 434-வது விக்கெட்டைக் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்தியிருந்த இடது கை பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத்தின் (இலங்கை) சாதனையை அவர் முறியடித்தார்.
ரங்கனா ஹெராத் 433...
ஆஸ்திரேலியா - வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டார்வினில் உள்ள மராரா மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்குகிறது.
வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதன் முதல் போட்டி மராரா மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணியில் ‘பிக் ஃபோர்’ என அழைக்கப்படும் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், நேதன்...
இந்தியா - இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முன்னாள் வீரரான அஜிங்க்ய ரஹானே வர்ணனையாளராக அறிமுகமாகிறார்.
இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 15-ம் தேதி காலே நகரில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அஜிங்க்ய ரஹானே வர்ணனையாளராக அறிமுகமாகிறார். இதற்காக அவர், போட்டியை ஒளிபரப்பும் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வர்ணனைக் குழுவில் இணைந்துள்ளார்.
முதல்தரக்...









