ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே - குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் குஜராத் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பந்து வீசுவதற்கு சிஎஸ்கே அணி அதிக நேரம் எடுத்துக்கொண்டது. நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி 2-வது முறையாக இதேபோன்று செயல்பட்டதால் அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விளையாடும் லெவன்...
மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சாலிகா, உலகத் தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க் கியர்ஸ்ஃபெல்டுடன் மோதினார்.
ஒரு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 71-ம் நிலை வீராங்கனையான அஷ்மிதா சாலிகா 23-21, 18-21, 11-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இன்று பலப்பரீட்சை: பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்குமா பஞ்சாப் கிங்ஸ்?
admin - 0
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் 7 ஆட்டங்களில் 6-ல் வெற்றிகளை குவித்து மிரட்டியிருந்தது. இதனால் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாக அந்த அணி இருக்கக்கூடும் என அனைவராலும் கருதப்பட்டது. ஆனால் அடுத்த 6 ஆட்டங்களில் அந்த அணி...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகு அந்த அணியின் வீரர் டிராவிஸ் ஹெட் உடன் கைகுலுக்க மறுத்தார் ஆர்சிபி வீரர் விராட் கோலி. இது இப்போது கிரிக்கெட் உலகில் பேசு பொருளாகி உள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று ஹைதராபாத் நகரில் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 67-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் விளையாடின. இதில்...
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சாலிகா, மலேசியாவின் கோ ஜின் வெய்-யை எதிர்த்து விளையாடினார்.
இதில் அஷ்மிதா சாலிகா 21-13, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.கால் இறுதி சுற்றில் அஷ்மிதா சாலிகா, போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் லின்...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று மோதல்: லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்யும் முனைப்பில் ஆர்சிபி
admin - 0
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
ரஜத் பட்டிதார் தலைமையிலான நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி 13 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 18 புள்ளிகளை குவித்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. அதேவேளையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 13...
இந்தியா ‘ஏ’, இலங்கை ‘ஏ’, ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 9 முதல் 21 வரை இலங்கையில் உள்ள தம்புலா நகரில் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான இந்தியா ‘ஏ’ அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் இடம் பெற்றிருந்த ஹர்ஷ் துபே, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா விளையாட உள்ள ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டி...
ருமேனியாவில் உள்ள புக்காரெஸ்ட் நகரில் கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியான சூப்பர் செஸ் கிளாசிக் போட்டி நடைபெற்று வருகிறது.
இதன் 6-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, ருமேனியாவின் டேக் போக்டன்-டேனியலுடன் மோதினார். 68-வது நகர்த்தலின்போது இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
6 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் வின்சென்ட் கீமர் 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பேபியானோ கருணா, அனிஷ் கிரி, ஜோர்டென் வான் ஃபாரஸ்ட், ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர்...
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் 26 பேர் கொண்ட ஜெர்மனி அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் 40 வயதான நட்சத்திர கோல் கீப்பரான மானுவல் நோயர் சேர்க்கப்பட்டுள்ளார். சீனியர் வீரரான மானுவல் நோயர் கடந்த 2024-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடருடன் ஓய்வு பெற்றிருந்தார்.
ஆனால்...
ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதவுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விட்டது. இருந்தபோதும், கடைசி ஆட்டத்தில் வெற்றி...










