காசி தமிழ் சங்கமங்களால் உயர்ந்த தமிழர் பெருமை: வாராணசி ஆட்சியர் தமிழர் ராஜலிங்கம் சிறப்பு நேர்காணல்
admin - 0
காசி தமிழ் சங்கமங்களால் இந்தி மொழி பேசுபவர்களிடம் தமிழர் பெருமை பல மடங்கு உயர்ந்திருப்பதாக வாராணசி மாவட்ட ஆட்சியர் தமிழர் எஸ்.ராஜலிங்கம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியில் முக்கிய நிர்வாகப் பணியாற்றும் தென்காசி மாவட்டத் தமிழரான அவர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த பேட்டி:
மகா கும்பமேளாவால் வாராணசியிலும் குவியும் கூட்டத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்?
மகா கும்பமேளாவில் வசந்த பஞ்சமிக்கு பிறகு பெரும்பாலான அகாடா துறவிகள் வாராணசிக்கு இடம்பெயர்வார்கள்....
அதிமுக முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி திமுக-வில் இணையப் போகிறார் என்று வதந்திகள் வட்டமடித்த நிலையில், அவரை கட்சியின் அமைப்புச் செயலாளராக்கி இருக்கிறார் பழனிசாமி. இவரோடு சேர்ந்து, முன்னாள் எம்எல்ஏ - வான ஆர்.சின்னசாமியும் அமைப்புச் செயலாள ராக்கப்பட்டிருக்கிறார். இப்படி ஒரே மாவட்டத்தில் இருவருக்கு திடீரென அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது பல்வேறு யூகங்களைக் கிளப்பி விட்டிருக்கிறது.
அதிமுக கோட்டை எனச் சொல்லப்படும் கோவை மாவட்டத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பவர்...
திமுக-வில் இனி வரும் காலம் உதயநிதியின் காலமாகத்தான் இருக்கும் என்பதால் திமுக முக்கிய தலைகள் பலரும் தங்களுக்குப் பதிலாக தங்களது வாரிசுகளை முன்னிறுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அண்ணாச்சியும் தனது மகன் ரமேஷை 2026 சட்டப் பேரவை தேர்தலுக்கு தயார்படுத்தி வருகிறார்.
சாத்தூர் ராமச்சந்திரன் என அழைக்கப்படும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எம்ஜிஆர் அமைச்சரவையில் இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்தவர். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக...
நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை ‘கெட்டப்’ போட்டு வந்தாலும்… – தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
admin - 0
திமுகவில் நடைபெறுவது களையெடுப்பல்ல; சீரமைப்பு என்றும் அறிவாலயத்தின் ஒரு துகளைக்கூட யாரும் அசைக்க முடியாது என்றும் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அந்தக் கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது: நாளுக்குநாள் திராவிட மாடல் அரசுக்கு தமிழக மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. ஆட்சியில், மக்கள் நலனுக்கான திட்டங்களை அறிவித்து, அதனை முழுமையாகச் செயல்படுத்தும் வகையில் அயராமல் உழைப்பதால்தான் மக்களிடம் ஆதரவு பெருகியுள்ளது. தமிழக மக்கள் நமக்கு...
கோயம்பேட்டில், பயணியுடன் மோதிக் கொண்ட மாநகர போக்குவரத்து ஊழியர்கள் 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மதுரவாயல் வடக்கு மெட்ராஸ் சாலையை சேர்ந்தவர் சரவணன் (40). இவர் கடந்த 12-ம் தேதி இரவு கிண்டியில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து, மாநகரப் பேருந்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்தார்.
பின், மதுரவாயலில் உள்ள தனது வீட்டுக்குச் செல்ல பேருந்தில் ஏற முற்பட்டபோது, அப்பேருந்து நிற்காமல் சென்றது. இதையடுத்து, கோயம்பேடு பேருந்து நிலைய நேரக்...
கவரைப்பேட்டை அருகே சாதுர்யமாக செயல்பட்டு பெரும் விபத்தை தவிர்த்த ரயில் ஓட்டுநருக்கு பாராட்டு
admin - 0
கவரைப்பேட்டையில் விபத்தின் போது சாதுர்யமாகச் செயல்பட்டு, பெரும் விபத்தைத் தவிர்த்த ரயில் ஓட்டுநர் சுப்பிரமணிக்கு ரயில்வே வாரியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்காவுக்கு கடந்த ஆண்டு அக்.11-ம் தேதி பாக்மதி அதிவிரைவு ரயில் சென்றது. திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே அந்த ரயில் சென்றபோது பிரதான பாதைக்குப் பதிலாக, லூப் லைன் எனப்படும் கிளைப் பாதையில் மாறி அங்கு ஏற்கெனவே...
விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புக்கான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு
admin - 0
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-1-ல் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயிலை சாலை மேம்பாலத்துடன் இணைத்து நீட்டிப்பதன் பரிந்துரைக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கோபாலிடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் நேற்று சமர்ப்பித்தார்.
மெட்ரோ ரயில் மற்றும் மேம்பாலச் சாலையின் ஒருங்கிணைந்த கட்டுமானத்தை வழங்குவதற்காக, தமிழக அரசுக்கு முன்னர்...
கும்மிடிப்பூண்டி அருகே மேல்பாக்கம் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ள 66 வீடுகளை அகற்றும் பணியை உயர் நீதிமன்ற தடையால் அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மேல்பாக்கம் கிராமம் ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது.
இங்கு வனத்துறைக்கு சொந்தமாக உள்ள சுமார் 70 ஏக்கர் நிலத்தில் பெரும்பகுதியை ஆக்கிரமித்து 66 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்துள்ள இந்த வீடுகளை அகற்ற...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்.2-ம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியை இலக்காக வைத்து தீவிர அரசியல் களப்பணியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆண்டு விழுப்புரத்தில் விஜய் நடத்திய முதல் அரசியல் மாநில மாநாட்டில் லட்சக்கணக்கானோர் திரண்டனர். அப்போது, மத்திய,...
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், ஞானசேகரனுக்கு பின்னணியில் முக்கிய நபர்கள் மேலும் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதை முன் வைத்து ‘யார்...










