Google search engine
 சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு நேற்று வந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். பின்னர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாகலாந்து மிக குளிர்ச்சியாகவும், இயற்கை எழில் நிறைந்த மாநிலமாகவும் உள்ளது. இந்த மாநிலத்தில் முந்தைய காலத்தில் ஆயுதம் ஏந்திய போராளிகள் இருந்தனர். மோடி பிரதமரான பிறகு போராளிகளுக்கும், அரசுக்குமிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இனி ஆயுதத்தை ஏந்த மாட்டோம் என்று போராளிகள் உறுதியளித்தனர். அதை...
பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யப்படும் இடமாறுதல்களை ஏற்க முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கம்ப்யூட்டர் புரோகிராமராகப் பணிபுரிந்து வருபவர் ஆர்.சிவகுமார். இவர் 1995 முதல் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தனக்கு கம்ப்யூட்டர் புரோகிராமர்களுக்கான ஊதியம் தரப்படுவதில்லை. ணிக்குரிய ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதில் சிவகுமாருக்கு சாதகமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை உச்ச...
கோவை மாநகர சைபர் க்ரைம் பிரி​வில் உதவி ஆய்​வாள​ராகப் பணி​யாற்றி வந்த சுகன்யா கடந்த​ஆண்டு மே மாதம் அளித்த புகாரில், ‘பெண் காவலர்​கள், உயர​தி​காரி​கள் குறித்து அவதூறாகப் பேசிய சவுக்கு சங்​கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று கூறி​யிருந்​தார். அதன் பேரில், போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து சங்​கரை கைது செய்தனர். தொடர்ந்​து, பல்​வேறு காவல் நிலை​யங்​களில் சங்​கர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில், தன் மீது...
தமிழகத்​தைச் சேர்ந்த எழுத்​தாளர் எஸ்​.​ராமகிருஷ்ணனுக்கு பார​திய பாஷா விருது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. கொல்​கத்​தாவைச் சேர்ந்த இலக்​கிய அமைப்​பான பார​திய பாஷா பரிஷத், அகில இந்​திய அளவில் சிறந்த இலக்​கிய​வா​தி​களை தேர்​வுசெய்து விருது வழங்கி கவுர​வித்து வரு​கிறது. அந்த வகை​யில் தமிழகத்​தைச் சேர்ந்த எழுத்​தாளர் எஸ்​.​ராமகிருஷ்ணன் பார​திய பாஷா பரிஷத் விருதுக்கு தேர்​வுசெய்​யப்​பட்​டுள்​ளார். இந்த விருது ரூ..1 லட்​சம் ரொக்​கப் பரிசு, பாராட்​டுச் சான்​றிதழ் ஆகிய​வற்றை உள்​ளடக்​கியது. கொல்​கத்​தா​வில் மே மாதம் 1-ம்...
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு போட்டிகள் ஏப்.30-ம் தேதி வரை நடைபெற உள்ளன. அம்பேத்கர் பிறந்தநாள் ஏப்.14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ‘சமத்துவம் காண்போம்’ என்ற தலைப்பில் எக்ஸ், இன்ஸ்டாகிராம், முகநூல், வாட்ஸ்அப், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் ஏப்.30 வரை பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும் நடத்தப்படுகின்றன. வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்களை...
கிரிண்டர் செயலியை பயன்படுத்தி போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாகவும், எனவே அந்த செயலியை உடனடியாக தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையர் அருண் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னையில் போதைப் பொருள் கடத்தல், விற்பனை, பதுக்கலைத் தடுக்க காவல் ஆணையர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். போலீஸாரின் தொடர் நடவடிக்கைகளால் பல்வேறு வகையான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதோடு, அதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது...
சென்னையில் அரசு கையகப்படுத்திய 248 ஏக்கர் நிலத்தில் தனியார் மதுபான ஆலை நிர்வாகம் செயல்படுவது சட்டவிரோதம் என்று தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், அந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏப்ரல் 21-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. சென்னை வளசரவாக்கம், மதுரவாயல் பகுதியில் மோகன் மதுபான ஆலை நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் 248 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கடந்த 1975-ம் ஆண்டு கையகப்படுத்தி உத்தரவிட்டது. இந்த நிலத்தில்...
பாஜக மாநில தலை​வர் தேர்​தலுக்கு விருப்​பமனு தாக்​கல் இன்று நடை​பெறுகிறது. தமிழக பாஜக​வில் மாநில தலைவர் மற்​றும் தேசிய செயற்​குழு உறுப்​பினர் பதவி​களுக்​கான தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி, இவ்​விரு பதவிகளுக்கு போட்​டி​யிடு​பவர்​கள் விருப்​பமனு தாக்​கல் செய்​ய​லாம் என தமிழக பாஜக தேர்​தல் அதி​காரி எம்​.சக்​கர​வர்த்தி அறி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மாநில தலை​வர் மற்​றும் தேசிய செயற்​குழு உறுப்​பினர் தேர்​தலுக்​கான விருப்​பமனுக்​களை கட்​சி​யின் இணை​யதள​மான www.bjptn.com...
பாமகவுக்கு இனி நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார் என்று கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளது பாமகவினரிடையே உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், சாதி வாரி கணக்கெடுப்பு, அரசுப் பள்ளிகளின் மேம்பாடு, ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். இதைத் தொடர்ந்து அவர் அறிக்கை ஒன்றை வாசித்தார். 1980-ல் வன்னியர் சங்கம் தொடங்கிய காலத்தில்...
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் 3-வது நாளாக சோதனை நடந்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரவிச்சந்திரன் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார். அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் தொடர்புடைய சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் கடந்த ஏப்.7-ம் தேதி சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் 2-வது நாளாக நேற்று முன்தினமும் சோதனை நடந்தது. இந்நிலையில், அமைச்சர் நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்...