Google search engine
தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற கூட்​டத்​துக்கு வந்த வடமாநில இளைஞர் மயங்கி விழுந்து உயி​ரிழந்​தார். சேலம் சீல​நாயக்​கன்​பட்டி பைபாஸ் பகு​தி​யில் உள்ள தாள ​முத்து நடராஜன் மைதானத்​தில் தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற நிர்​வாகி​கள் சந்​திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்​தது. இந்​தக் கூட்​டத்​தில் பங்​கேற்க சீல​நாயக்​கன்​பட்டி சிவசக்தி நகரைச் சேர்ந்த, வடமாநில இளைஞர் சிராஜ் (37) வந்​திருந்​தார். அவர் கடந்த 20 ஆண்​டு​ களாக மனை​வி, மகன், மகளு​டன் சேலத்தில்...
15 ஆண்​டு​களுக்கு முன்பு நடந்த கொலை வழக்​கில் 14 பேரை விடு​தலை செய்து கீழமை நீதி​மன்​றம் பிறப்​பித்த தீர்ப்பை ரத்து செய்​துள்ள உயர் நீதி​மன்​றம், தற்​போது உயிருடன் உள்ள 9 பேரை​யும் குற்​ற​வாளி​களாக அறி​வித்து உத்​தர​விட்​டுள்​ளது. திரு​வான்​மியூர் ரங்​க​நாத​புரத்​தைச் சேர்ந்த ரவி என்​பவரைக் கொலை செய்த வழக்​கில் தொடர்​புடைய சின்​னையா என்ற ஏழு​மலையை ஒரு கும்​பல் கடந்த 2010 ஜூன் 14 அன்று அவரது வீட்​டின் முன்​பாக வெட்டி படுகொலை...
லஞ்​சப் பணம் பெற்​ற​தாக எழுந்த குற்​றச்​சாட்​டில் பெண் இன்ஸ்பெக்டர் வீட்​டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்​தினர். சென்னை காவல் துறை​யில் உள்ள பாலியல் தடுப்​புப் பிரிவு இன்​ஸ்​பெக்​ட​ராக இருப்​பவர் ராஜலட்​சுமி. இவர் குடும்​பத்​தோடு சென்னை திரு​மங்​கலம், வெல்​கம் காலனி​யில் வசித்து வரு​கிறார். நேற்று காலை 6 மணி​யள​வில் இவரது வீட்​டுக்கு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீ​ஸார் சென்று திடீர் சோதனை​யில் ஈடு​பட்​டனர். சுமார் 4 மணி நேர சோதனைக்​குப் பிறகு...
அண்ணா நகர் பகுதியில் மிஸ்​டர் ஹேர் என்ற பெயரில் சிகை சீரமைப்பு சிகிச்சை மையம் இயங்கி வந்​தது. அங்​கு, போலி மருத்துவர்கள் மூலம் முடி மாற்று சிகிச்​சைகள் மேற்​கொள்​வது கண்​டறியப்​பட்​ட​தால், 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர். அந்த சிகிச்சை மையத்​துக்கு சுகா​தா​ரத் ​துறை அதி​காரி​கள் சீல் வைத்​தனர். படித்த இளைஞர்​களும், பெண்​களுமே இத்​தகைய மோசடிகளால் அதி​கம் பாதிக்​கப்​படு​வ​தால், தேசிய மருத்​துவ ஆணை​யத்​தின் (என்​எம்​சி) வழி​காட்​டு​தல்​களை மேற்​கோள் காட்டி மாநில மருத்​துவ...
பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் திட்டம், `தாய்மை செயலி' திட்டம் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனையில் ரூ.8.07 கோடியில் பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து தாய்மார்களுக்கு பெட்டகத்தை வழங்கிய அமைச்சர், தாய் மற்றும் சேய் நலனை மேம்படுத்தும் நோக்கில், பேறுகால மற்றும் குழந்தை...
“கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 வழங்க, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்துக்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே. திமுகவை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான்.” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “வழக்கமாக மாதந்தோறும் 15-ம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13-ம் தேதி வரவு...
“சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது தேர்தல் நேரத்து பணம் வரவு வைக்கும் இந்த ‘Patchwork’ வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?” என மகளிர் உரிமைத் தொகையோடு கோடைக்கால சிறப்பு நிதியாக ரூ.2000 சேர்த்து மொத்தம் ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தேர்தல்...
டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து விவகாரத்தில் எதிர்குரல் கொடுக்காமல், கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு தாலி கட்டிய மனைவி போல் ஆகிவிட்டன என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். ‘விடியா ஆட்சி, உங்கள் வீட்டு பில்லே சாட்சி’ என்ற தலைப்பில், அதிமுக சார்பில் பிரச்சாரம் நடை பெற்று வருகிறது. இது தொடர்பான செயலி மூலம் வீடுகள்தோறும் கணக்கெடுக்கும் பணியை, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் தொடங்கி வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்...
“குலவிளக்கு திட்டம் மூலம் மகளிருக்கு ரூ.2000 தருவோம் என அதிமுக தந்த தேர்தல் வாக்குறுதியால், திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் மகளிருக்கு ரூ.5000 கொடுத்து வாக்குகளை வாங்கலாம் என திமுக நினைக்கிறது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.1,000 உரிமைத்தொகையுடன், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு...
புதுவை சட்டப்பேரவையில் நேற்று, அரசின் கூடுதல் செலவினங்களுக்கான விவாதம் நேற்று நடந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவா குறுக்கிட்டு, “புதுவை எங்கும் போராட்டம் நடக்கிறது. ஒப்பந்த ஆசிரியர்கள், தற்காலிக பொதுப்பணி ஊழியர்கள், தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் என அனைவரும் போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வரவில்லை. ‘இரட்டை இன்ஜின்’ அரசு என்று கூறினீர்கள். தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. இலவசங்களை மட்டும் மக்களுக்கு அளித்துள்ளீர்கள்....