Google search engine
மேற்கு தொடர்ச்சி மலைப்​பகு​தி​யில் பெய்​யும் பலத்த மழை காரண​மாக குற்​றாலம், மணி​முத்​தாறு, திற்​பரப்பு அருவி​களில் தொடர்ந்து வெள்​ளப்​பெருக்கு நீடிக்​கிறது. தென்​காசி, நெல்லை, கன்​னி​யாகுமரி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை​யோர மாவட்​டங்​களில், கடந்த ஒரு வார​மாக தென்​மேற்கு பரு​வ​மழை தீவிரம் அடைந்​துள்​ளது. குளிர்ந்த காற்​றுடன் அடிக்​கடி சாரல் மழை பெய்து வரு​கிறது. நேற்று அதி​கபட்​ச​மாக திருநெல்​வேலி மாவட்​டம் மாஞ்​சோலை​யில் 10 செ.மீ., ஊத்து பகு​தி​யில் 9 செ.மீ. மழை பதி​வாகி​யிருந்​தது. இதன் காரண​மாக,...
மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்திருப்பதாகவும், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி நீரை தவெக அரசு பெற்றுத்தர வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளனர். cச்இவ்விவகாரத்தில், மேட்டூர் அணையில் இருந்து நீரை திறப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ்: மேட்டூர் அணை திறக்கப்படாத தால்...
‘நான் அரசியலுக்குள் வருவதற்கு என் தாயின் அனுமதி கிடைத்து விட்டது. நான் அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என்பதை மக்களாகிய நீங்கள்தான் தெரிவிக்க வேண்டும்’, என நடிகர் ராகவா லாரன்ஸ் மக்களிடம் கருத்து கேட்டுள்ளார். இதுகுறித்து நேற்று காணொலி வாயிலாக அவர் பேசியதாவது: திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றால், முதலில் நான் அரசியலுக்கு வரவேண்டும். நான் எப்போதும் என் வீட்டில் குழந்தைகளை வளர்ப்பது, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது, இதய அறுவை...
இந்​தி​யா​வின் மாம்பழ பாரம்​பரி​யத்​தைக் கொண்​டாடு​வோம்’ என்ற தலைப்​பில் நாட்​டின் பல்​வேறு மாநில தோட்​டங்​களி​லிருந்த பறிக்​கப்​பட்ட சுவை மிகுந்த மாம்​பழங்​களை சென்னை மக்​களுக்கு நேரடி​யாக வழங்​கும் வித​மாக, நபார்டு வங்கி மற்​றும் அதன் துணை நிறு​வன​மான நப்​கி​சான் ஃபை​னான்ஸ் சார்​பில் ‘மாம்பழ திரு​விழா - 2026’ சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள எக்​ஸ்​பிரஸ் அவென்யூ வணிக வளாகத்​தில் நேற்று தொடங்​கியது. இதில் தமிழகம், ஆந்​திரப் பிரதேசம், கேரளா, கர்​நாட​கா, மத்​தி​யப் பிரதேசம் மற்​றும்...
பாமக நிறு​வனர் ராம​தாஸ் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்​தில் ஆட்டோக்களுக்கான கட்​ட​ணம் கடைசி​யாக 2013-ம் ஆண்டு நிர்​ண​யிக்​கப்​பட்​டது. அப்​போது நிர்​ண​யிக்​கப்​பட்ட கட்​ட​ணப்​படி ஆரம்ப 1.8 கிலோமீட்​டருக்கு ரூ.25, அதன்​பின் ஒவ்​வொரு கிலோ மீட்​டருக்​கும் ரூ.12 என நிர்​ண​யிக்​கப்​பட்​டது. கடந்த 13 ஆண்​டு​களாக இந்த கட்​ட​ணத்​தில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​பட​வில்​லை. ஆனால், இந்த காலக்​கட்​டத்​தில் பெட்​ரோல், டீசல் மற்​றும் சிஎன்ஜி எரிபொருட்​களின் விலை பல மடங்கு உயர்ந்​துள்​ளது. 2013-ம் ஆண்​டில் லிட்​டருக்கு ரூ.65...
சென்னை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு மே மாத ஊதியம் இன்று வரை...
“ஸ்ரீவைகுண்டம் பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி சமரசம் பேசி மறைக்க முயன்ற தவெக எம்எல்ஏ சரவணனை ராஜினாமா செய்ய வைத்து, கைது செய்ய இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா?” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வினவியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதல்வரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக...
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தவர். கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம் மிகவும் குறிப்பிடத்தக்கது. துயரம் மிகுந்த இந்த நேரத்தில், அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் என் எண்ணங்கள் இணைந்துள்ளன. ஓம் சாந்தி.’ எனத் தெரிவித்துள்ளார். உடல்...
மாநக​ராட்சி பள்​ளி​களில் 10, 12-ம் வகுப்பு தேர்​வு​களில் சிறப்​பிடம் படித்த மாணவர்கள், ஆசிரியர்​களுக்கு பள்​ளிக்​ கல்​வித்​துறை அமைச்​சர் ராஜ்மோகன் பரிசுகளை வழங்கி கவுர​வித்​தார். சென்னை மாநக​ராட்சி பள்​ளி​களில் 10,12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்​வில் அதிக மதிப்​பெண்​கள் பெற்ற 1,085 மாணவ, மாண​வியர், அதிக மதிப்​பெண்​கள் பெற உறு​துணை​யாக இருந்த 1,005 தலை​மை​யாசிரியர்​கள் மற்​றும் ஆசிரியர்​கள் என மொத்​தம், 2,090 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்​கும் விழா, ரிப்​பன்...
ரீல்ஸ் எடுத்து போஸ்ட் செய்யத் தான் ‘சிங்கப்பெண்’ பிரிவை முதல்வர் உருவாக்கினாரா? என்று ஸ்ரீவைகுண்டம் சம்பவத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதல்வருக்கு அக்கறை இருக்கிறதா?” என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில்...