கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அரவான் களப்பலி கொடுக்கப்பட்டதும், தாலியை அறுத்து விதவை கோலத்தில் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுதனர்.
உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில், சித்திரை திருவிழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக அரவானின் திருக்கண் திறத்தல் மற்றும் திருநங்கைகள் மாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து கோயிலில் உள்ள அரவான் சிரசுக்கு...
தமிழகம் முழுவதும் 62 மையங்களில் மே 4-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட தேர்தல் பார்வையாளர்கள் மே 2-ம் தேதி தமிழகம் வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்.23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. எவ்வித அசம்பாவிதம், மறு வாக்குப்பதிவும் இன்றி நடைபெற்று முடிந்த இந்த தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவு 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இருந்து பதிவான வாக்குகள்...
ஆதார், பான் எண்ணைத் திருடி நூதன மோசடி: ரூ.4.70 கோடி ஜிஎஸ்டி செலுத்துமாறு ஓட்டுநருக்கு நோட்டீஸ்
admin - 0
ஜிஎஸ்டி ரூ.4.70 கோடி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் வந்ததால் கார் ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் கமலநாதன் (36).
கடந்த 10 ஆண்டுகளாக திருவேற்காடு அடுத்த புளியம்பேடு நூம்பல் பகுதியில் மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், வேலூரில் உள்ள அவரது சொந்த வீட்டு முகவரிக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது.
அதில், ‘கமலநாதன் ரூ.4.70...
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றினர்.
இதுதொடர்பாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் சாந்தாராமன், மருத்துவக் கண்காணிப்பாளர் பாஸ்கர், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் மதிவாணன் ஆகியோர் கூறியதாவது: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த மாதம் தனலட்சுமி என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
மருத்துவமனையில் இருந்த ஒரு...
சென்னை துறைமுகம் தவெக வேட்பாளருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது: ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்
admin - 0
அமைச்சர் சேகர்பாபு கொலை மிரட்டல் தொடர்பாக துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக்கிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தல் வழக்கில், அதில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23-ம் தேதி அமைச்சர் சேகர்பாபு தனது அடியாட்களுடன் தன்னைத் தாக்கினார்கள் என்றும் மேலும் வாக்கு எண்ணிக்கை நாளில் தாக்குதல்...
மகளிர் இடஒதுக்கீட்டை தடுப்பதாக திமுக – காங்கிரஸ் மீது பாஜகவினர் அபாண்டமாக பழி சுமத்துகின்றனர். ஏப்ரல் 17-ம் தேதியோடு என்டிஏ கூட்டணி காலியாகிவிட்டது என ஓசூர் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில், முதல்வர் ஸ்டாலின்...
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்பாளராக போட்டியிடுகிறார். திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட விமானநிலையம் வயர்லெஸ் சாலை, கே.கே.நகர், காஜாமலை, கொட்டப்பட்டு பகுதிகளில் ரோடு ஷோவில் பங்கேற்று நேற்று வாக்குசேகரித்தார்.
விமான நிலையத்திலிருந்து தனது பிரத்யேக பிரச்சார வேனில் ஏறி வெளியே வந்த விஜய், வேன் மீது நின்றபடி விசில்அடித்து, கையசைத்து வாக்கு சேகரித்தார். வயர்லெஸ் சாலையில் சாலை வலம் சென்றபோது, அங்குள்ள புனித அந்தோணியார் ஆலயத்துக்குச்...
கோடைக்காலத்தை முன்னிட்டு, சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, சென்னை - கரக்பூர் சிறப்பு ரயில் உட்பட 3 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்விவரம்: சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (ஏப்.20) காலை 10 மணிக்கு சிறப்பு ரயில் (06003) புறப்பட்டு, மறுநாள் மாலை 4 மணிக்கு மேற்குவங்கம் மாநிலம் கரக்பூரை சென்றடையும். மறுமார்க்கமாக, கரக்பூரில் இருந்து ஏப்.21-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு சிறப்பு ரயில் (06004)...
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து, மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்.பி. நேற்று பிரச்சாரம் செய்தார். ராஜவீதியில் அவர் பேசியதாவது: கோவை தெற்கு தொகுதியில் நான் நடந்து செல்லாத வீதிகள் இல்லை. இந்த தொகுதி மக்களுடன் பேசியிருக்கிறேன்.
பழகியிருக்கிறேன். இது என் மக்கள். உங்கள் தொகுதிக்கு நீங்கள் வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். இது இப்போது நம் தொகுதியாக மாறி...
கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகம் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே, தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்று டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று இரவு சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எனது நண்பர்...










