புத்தாண்டையொட்டி ராஜஸ்தானில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும் நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், பிரியங்கா காந்தி வதேரா ஆகியோர் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் நேற்று ரந்தம்போருக்கு வருகை தந்தனர்.
சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ளது ரந்தம்போர் சரணாலயம். இது புலிகள் மற்றும் செழுமையான பல்லுயிர் பெருக்கத்திற்கான முக்கிய இடமாகும். மேலும், இது, சுற்றுலாப் பயணிகளுக்கு மிக விருப்பமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
ஜெய்ப்பூர், ஜெய்சால்மர், உதய்பூர், ஜோத்பூர் மற்றும் முக்கிய மத...
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா வதேராவின் மகன் ரெஹானின் திருமண நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த வகுப்புத் தோழி அவியா பெய்க்கை கரம் பிடிக்கிறார் ரெஹான்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மகள் பிரியங்கா - ராபர்ட் வதேரா தம்பதிக்கு மகன் ரெஹான் (24), மகள் மிரய்யா என 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், ரெஹான் தன்னுடன் பள்ளியில் பயின்ற வகுப்புத்...
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் மஜத முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33), 10-க்கும் மேற்பட்ட பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் கடந்த 2024-ம் ஆண்டு வெளியாகின. அவர் மீது வீட்டு பணிப் பெண் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அதே வீட்டு பணிப் பெண்,...
2025-ல் இந்தியாவில் நடைபெற்ற மாற்றங்கள், சாதனைகளை பட்டியலிட்டு சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவு
admin - 0
2025-ம் ஆண்டு நிறைவை ஒட்டி சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி நேற்று விரிவான பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: நாட்டின் வளர்ச்சிக்காக கடந்த 11 ஆண்டுகளாக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பு 2025-ம் ஆண்டில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் அமல் செய்யப்பட்டன. இது, இந்தியாவின் ஆண்டாக நினைவு கூரப்படும்.
குறிப்பாக 2025-ம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. 5% மற்றும் 18% என்ற இரு விகிதங்கள் மட்டும்...
உத்தராகண்ட் மாநிலம், அல்மோராவில் இருந்து ராம் நகருக்கு தனியார் பேருந்து நேற்று காலை புறப்பட்டது. இந்த பேருந்தில் ஓட்டுநர், நடத்துநர் உட்பட 19 பேர் பயணம் செய்தனர்.
பிகியாசைன் மலைப்பகுதி சாலையில் பேருந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக 500 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்....
கடந்த 2017-ல் உத்தர பிரதேச மாநிலம் உன்னாவில் வேலை கேட்டுச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக எம்எல்ஏவாக இருந்த குல்தீப் சிங் செங்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் வழங்கியும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்தும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய...
உ.பி.யில் உயிருடன் இருந்தவர் பெயரில் உடற்கூறாய்வு: மருத்துவர் உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம்
admin - 0
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் ஜிஎஸ்விஎம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருடன் இருந்த ஒருவர் பெயரில் உடற்கூராய்வு அறிக்கை அனுப்பிய சம்பவத்தில் மருத்துவர் உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கான்பூரில் பிரபல ஜிஎஸ்விஎம் மருத்துவக் கல்லூரியில் ஹாலெட் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு ஓர் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. வார்டு எண் 12-ல் உள்ள படுக்கை எண் 42-ல் ஒரு அடையாளம் தெரியாத நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு...
வான் தகவல் தொடர்பு கருவிகளை தயாரிக்க இந்திய விமானப்படை, சென்னை ஐஐடியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
விமானப்படை பயன்பாட்டுக்காக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வான் தகவல் தொடர்பு கருவிகளை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக விமானப்படையின் மென்பொருள் மேம்பாட்டு மையம் (எஸ்டிஐ) ஐஐடி சென்னையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் தற்சார்பு நிலையை ஏற்படுத்துவதிலும், தற்சார்பு இந்தியா தொலைநோக்கை நனவாக்குவதிலும் இந்த ஒப்பந்தம் மிக முக்கியமான நடவடிக்கை. இந்த ஒப்பந்தத்தில் விமானப்படையின்...
கடந்த சில வாரங்களாக டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. பனிமூட்டம் தொடர்பாக டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்துக்கு நேற்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த சூழலில் வடஇந்தியா முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக 128 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட விமானங்கள்...
2026-27-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இந்த பட்ஜெட் எவ்வாறு சரிசெய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில் பட்ஜெட் குறித்து பொருளாதார அறிஞர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாட உள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் துணைத்...
