பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து அம்ருதஹள்ளி, ஹெப்பகுடி,ஜே.பி.நகர், கே.ஜி.ஹள்ளி உள்ளிட்ட இடங்களில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதில் 9.46 கிலோ ஹைட்ரோ கஞ்சா, 34 கிலோ கஞ்சா, 5.67 கிலோ எம்டிஎம்ஏ, 131 கிராம் கோகைன், 29 எல்எஸ்டி மாத்திரைகள், 27 கிராம் எல்எஸ்டி கட்டிகள், 462...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நாட்டில் நக்சல் தீவிரவாதத்தை முற்றிலும் அகற்ற இலக்கு நிர்ணயித்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க வெற்றியை அரசு பெற்றுள்ளது.
கடந்த 2019-ல் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 61 மாவட்டங்களில் நக்சலைட் வன்முறை பதிவானது. இது இந்த ஆண்டு ஜனவரியில் சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டில் 5 மாவட்டங்களாக சுருங்கியுள்ளது.
சரண் அடையும் நக்சலைட்களுக்கான மறுவாழ்வு கொள்கையும் பலன் அளித்து வருவதால்...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
admin - 0
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்த மாநாட்டின் 2-வது நாளான நேற்று பல்வேறு கருத்தரங்குகள் நடைபெற்றன. மாநாடு தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு...
இந்தியாவில் உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையத்தை அமைக்க டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் இதுகுறித்த அறிவிப்பை டிசிஎஸ் வெளியிட்டது.
வணிக நிறுவனங்கள், அரசு அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்துக்கு பெருமளவில் மாறி வருவதால் வலுவான தரவு உள்கட்டமைப்பு இப்போது மிகவும் அவசியமானதாக மாறி உள்ளது.
தற்போது இந்தியாவின் தரவு மையத் திறன் 1.5 ஜிகா வாட்டாக உள்ளது....
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் துவாரகபுரி பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாக கடந்த ஜன. 13-ம் தேதி போலீஸாருக்கு புகார் வந்தது.
போலீஸார் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது அங்கு 24 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தியபோது அந்த வீடு துவாரகபுரியைச் சேர்ந்த எம்பிஏ மாணவர் பியூஷ் தம்னோட்டியா என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.
தலைமறைவாக இருந்த பியூஷை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து...
மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ பில்கேட்ஸ். பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவரான இவர் தனது அறக்கட்டளை குழுவினருடன் இந்தியா வந்துள்ளார்.
ஆந்திராவின் விஜயவாடா பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று வந்திறங்கிய இவரை ஆந்திர கல்வி மற்றும் ஐடி துறை அமைச்சர் நாரா லோகேஷ் வரவேற்றார். இதையடுத்து காரில் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வந்த பில் கேட்ஸுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன்...
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் சுந்தர்படா பகுதியில் கடந்த ஜனவரி 27ம் தேதி ஒரு வீட்டின் மொட்டை மாடியில் வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன.
இந்த சம்பவத்தில் ஷாநவாஸ் மாலிக், அவரது கூட்டாளி அமியா மாலிக், ஷாநவாஸின் தாய் மற்றும் மற்றொருவர் என நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ஷாநவாஸ் மாலிக் மற்றும் அவரது தாய்...
ராஜஸ்தானில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டம், பிவாடி தொழிற்பேட்டையில் மூடப்பட்ட ஒரு தொழிற்சாலையில் சட்ட விரோதமாக பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இங்குள்ள ஒரு கட்டிடத்தில் நேற்று காலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்த மற்ற கட்டிடங்களுக்கும் தீ வேகமாகப் பரவியது. இதில் மேலும் 3 முறை வெடி விபத்து ஏற்பட்டது.
விபத்தின் போது அந்த...
டெல்லியில் பிரம்மாண்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார்.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 5 நாள் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். பாரத் மண்டபத்தில் 600-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முக்கிய அரங்குகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். பல்வேறு நிறுவனங்களின் ஏஐ நிபுணர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
ஐ.நா.பொதுச்செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் மற்றும்...
ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது ரயில்வே வேலை வழங்க லாலு குடும்பத்தினர் லஞ்சமாக நிலம் பெற்றுக்கொண்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதுவரை 2 குற்றப் பத்திரிகைகள், 2 துணை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த வழக்கில் லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி...










