Google search engine
பெங்​களூரு மாநகர காவல் ஆணை​யர் சீமந்த் குமார் சிங் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பெங்​களூரு மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் போதைப்​பொருள் தடுப்​புப் பிரி​வினருடன் இணைந்து அம்​ருதஹள்​ளி, ஹெப்​பகுடி,ஜே.பி.நகர், கே.ஜி.ஹள்ளி உள்​ளிட்ட இடங்​களில் போதைப்​பொருள் கடத்​தலைத் தடுக்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர். அதில் 9.46 கிலோ ஹைட்ரோ கஞ்​சா, 34 கிலோ கஞ்​சா, 5.67 கிலோ எம்​டிஎம்ஏ, 131 கிராம் கோகைன், 29 எல்​எஸ்டி மாத்​திரைகள், 27 கிராம் எல்​எஸ்டி கட்​டிகள், 462...
மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்​குள் நாட்​டில் நக்​சல் தீவிர​வாதத்தை முற்​றி​லும் அகற்ற இலக்கு நிர்​ண​யித்​துள்​ளார். இதில் குறிப்​பிடத்​தக்க வெற்​றியை அரசு பெற்​றுள்​ளது. கடந்த 2019-ல் சத்​தீஸ்​கர், ஜார்க்​கண்ட் உள்​ளிட்ட மாநிலங்​களில் 61 மாவட்​டங்​களில் நக்சலைட் வன்​முறை பதி​வானது. இது இந்த ஆண்டு ஜனவரி​யில் சத்​தீஸ்​கர் மற்​றும் ஜார்க்​கண்​டில் 5 மாவட்​டங்​களாக சுருங்​கி​யுள்​ளது. சரண் அடை​யும் நக்சலைட்களுக்கான மறு​வாழ்வு கொள்​கை​யும் பலன் அளித்து வரு​வ​தால்...
செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி வலி​யுறுத்தி உள்​ளார். டெல்லி பாரத் மண்​டபத்​தில் செயற்கை நுண்​ணறிவு உச்சி மாநாடு நேற்று முன்​தினம் தொடங்​கியது. இந்த மாநாட்​டின் 2-வது நாளான நேற்று பல்​வேறு கருத்​தரங்​கு​கள் நடை​பெற்​றன. மாநாடு தொடர்​பாக பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதிவு​களில் கூறி​யிருப்​ப​தாவது: அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்​பங்​களை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த வேண்​டும். குறிப்​பாக செயற்கை நுண்​ணறிவு...
இந்தியாவில் உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையத்தை அமைக்க டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் இதுகுறித்த அறிவிப்பை டிசிஎஸ் வெளியிட்டது. வணிக நிறுவனங்கள், அரசு அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்துக்கு பெருமளவில் மாறி வருவதால் வலுவான தரவு உள்கட்டமைப்பு இப்போது மிகவும் அவசியமானதாக மாறி உள்ளது. தற்போது இந்தியாவின் தரவு மையத் திறன் 1.5 ஜிகா வாட்டாக உள்ளது....
மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூரின் துவாரகபுரி பகு​தி​யிலுள்ள ஒரு குடி​யிருப்பில் துர்​நாற்​றம் வீசுவ​தாக கடந்த ஜன. 13-ம் தேதி போலீ​ஸாருக்கு புகார் வந்​தது. போலீ​ஸார் வந்து கதவை உடைத்​துப் பார்த்​த​போது அங்கு 24 வயது மதிக்​கத்​தக்க பெண்​ணின் சடலம் கண்​டெடுக்​கப்​பட்​டது. போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி​ய​போது அந்த வீடு துவாரகபுரியைச் சேர்ந்த எம்​பிஏ மாணவர் பியூஷ் தம்​னோட்​டியா என்​பவருக்​குச் சொந்​த​மானது என்​பது தெரிய​வந்​தது. தலைமறை​வாக இருந்த பியூஷை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். இதுகுறித்து...
மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ பில்கேட்ஸ். பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவரான இவர் தனது அறக்கட்டளை குழுவினருடன் இந்தியா வந்துள்ளார். ஆந்திராவின் விஜயவாடா பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று வந்திறங்கிய இவரை ஆந்திர கல்வி மற்றும் ஐடி துறை அமைச்சர் நாரா லோகேஷ் வரவேற்றார். இதையடுத்து காரில் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வந்த பில் கேட்ஸுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன்...
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் சுந்தர்படா பகுதியில் கடந்த ஜனவரி 27ம் தேதி ஒரு வீட்டின் மொட்டை மாடியில் வெடிபொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இந்த சம்பவத்தில் ஷாநவாஸ் மாலிக், அவரது கூட்டாளி அமியா மாலிக், ஷாநவாஸின் தாய் மற்றும் மற்றொருவர் என நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ஷாநவாஸ் மாலிக் மற்றும் அவரது தாய்...
ராஜஸ்​தானில் சட்​ட​விரோத பட்​டாசு ஆலை​யில் ஏற்பட்ட பயங்கர வெடி​விபத்​தில் 8 தொழிலா​ளர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். ராஜஸ்​தானின் அல்​வார் மாவட்​டம், பிவாடி தொழிற்​பேட்​டை​யில் மூடப்​பட்ட ஒரு தொழிற்​சாலை​யில் சட்​ட​ விரோத​மாக பட்​டாசு ஆலை இயங்கி வந்​துள்​ளது. இங்​குள்ள ஒரு கட்​டிடத்​தில் நேற்று காலை​யில் திடீரென வெடி​விபத்து ஏற்​பட்​டது. இதையடுத்து அருகில் இருந்த மற்ற கட்​டிடங்​களுக்​கும் தீ வேக​மாகப் பரவியது. இதில் மேலும் 3 முறை வெடி விபத்து ஏற்​பட்​டது. விபத்​தின் ​போது அந்த...
டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்​தார். டெல்​லி​யில் உள்ள பாரத் மண்​டபத்​தில் 5 நாள் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். பாரத் மண்​டபத்​தில் 600-க்​கும் மேற்​பட்ட அரங்​கு​கள் அமைக்​கப்​பட்டு உள்​ளன. இதில் முக்​கிய அரங்குகளை பிரதமர் மோடி பார்​வை​யிட்​டார். பல்​வேறு நிறுவனங்களின் ஏஐ நிபுணர்​களு​டன் அவர் கலந்​துரை​யாடி​னார். ஐ.நா.பொதுச்​செய​லா​ளர் அந்​தோணியோ குத்​தேரஸ் மற்​றும்...
ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ரயில்வே வேலை வழங்க லாலு குடும்பத்தினர் லஞ்சமாக நிலம் பெற்றுக்கொண்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதுவரை 2 குற்றப் பத்திரிகைகள், 2 துணை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த வழக்கில் லாலு, அவரது மனைவி ராப்ரி தேவி...