Google search engine
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை நேற்று சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, அவசரநிலை பற்றி அறிக்கை வெளியிட்டதற்காக அதிருப்தி தெரிவித்தார். மக்களவைத் தலைவராக 2-வதுமுறையாக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்ட ஓம் பிர்லா, அவசரநிலை பிரகடனத்தின் 50-வது ஆண்டை முன்னிட்டு மக்களவையில் ஒரு அறிக்கையை வெளியிட்டாார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலையை அமல்படுத்தியது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் என பிர்லா தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்...
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது அமைச்சரவை சகாக்களை மாநிலங்களவையில் அறிமுகம் செய்து வைத்தார். நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியஅமைச்சரவை கடந்த 9-ம் தேதிபதவியேற்றது. பிரதமரை தொடர்ந்து 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். 18-வது மக்களவையின் முதல்கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இதில் நேற்று முன்தினம் மக்களவை தலைவர் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவை சகாக்களை மக்களவையில் அறிமுகம்...
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை சிபிஐ நேற்றுமுன்தினம் கைது செய்து, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அர்விந்த் கேஜ்ரிவாலை திட்டமிட்டே சிபிஐ கைது செய்துள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், “வழக்கு ஆவணங்களின் அடிப்படையில் பார்க்கையில் சிபிஐயின் கைதை சட்டவிரோதம் என்று கூற முடியாது” என்று தெரிவித்த சிறப்பு நீதிமன்றம், கேஜ்ரிவாலை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐவுக்கு அனுமதி வழங்கியது. கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால்...
“ஜிஎஸ்டியால் தொழில்துறை பலனடைந்துள்ளது. தமிழ்நாடு, உத்தரபிரதேசத்தில் பாதுகாப்புத் துறை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுகின்றன. பாதுகாப்புத் துறை சார்ந்த ஏற்றுமதியில் அதிகரித்து வருகின்றன.” என்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார். 18-வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நேற்று மக்களவையின் தலைவராக ஓம் பிர்லா...
மக்களவையில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என்ற சமாஜ்வாதி கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.செளத்ரி மக்களவை சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், “மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழ்வது செங்கோல். எனவே செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க...
பாஜக மூத்த தலைவர் அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (ஜூன் 26) பின்னிரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படதாகத் தெரிகிறது. முன்னாள் துணை பிரதமரான அத்வானிக்கு 96 வயதாகிறது. அவருக்கு சிறுநீரகம் தொடர்பான உபாதை காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகவியல் துறை நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருடைய நிலைமை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள்...
மக்களவைத் தேர்தலில் 99 தொகுதிகள் பெற்ற காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. 10 வருடங்களுக்கு பிறகு இந்தஅந்தஸ்தை காங்கிரஸ் பெற்றுள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி நியமித்தது. கடந்த 2004 முதல் 20 வருடஅரசியல் வாழ்வில் ராகுலுக்குமுதன்முறையாக அரசியல் சாசனப்பதவி கிடைத்துள்ளது. இதற்காக அவருக்கு பல்வேறு வசதிகள் கிடைக்க உள்ளன. எதிர்க்கட்சி தலைவருக்கு டெல்லியில் டைப்-8 குடியிருப்பு கிடைக்கும். இதன் பரப்பளவு 8,250சதுர அடி ஆகும். தனி...
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தனது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து விடலாமா என்று தீவிரமாக ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. அண்மையில் நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில்175 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி,11 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. மக்களவைத் தேர்தலில்இக்கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு...
பிரயாக்ராஜில் 2025-ம் ஆண்டில் மகா கும்பமேளா நடைபெற உள்ளதையொட்டி பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று போலீஸாருக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 2025-ம் ஆண்டில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக தலைநகர் லக்னோவில் நேற்று போலீஸ் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார். அப்போது...
கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம்தேதி இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டது. அவசரநிலைபிறப்பிக்கப்பட்டு நேற்றுடன் 50 ஆண்டுகள் ஆகிறது. அவசரநிலையின் கதை ஜூன் 25, 1975 அன்று தொடங்கவில்லை. அதற்கு முன்னதாகவே, 1974-ம் ஆண்டு குஜராத்தில் ‘நவநிர்மான் அந்தோலன்’ என்ற பெயரில் காங்கிரஸ் அரசின்...