Google search engine
உத்தர பிரதேச காவலர் பணிக்கான தேர்வில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தர பிரதேச காவல் துறையில் காவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்டில் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 48 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். கடந்த 13-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 60,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தர பிரதேசத்தின் ஜான்பூர் பகுதியை சேர்ந்த குஷ்பூ, கவிதா,...
இந்​தி​யா​வில் புதிய குடி​யுரிமை சட்​டத்தை கொண்டு வரும் வகை​யில், மக்​களவை​யில் குடி​யுரிமை மற்​றும் வெளி​நாட்​டினர் மசோதா தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​தி​யா​வில் போலி பாஸ்​போர்ட், போலி விசா பயன்​படுத்தி நுழைந்​தாலோ, தங்​கி​யிருந்​தாலோ, இந்​தி​யாவை விட்டு வெளி​யேறியது கண்​டு​பிடிக்​கப்​பட்​டாலோ, அதி​கபட்​சம் 7 ஆண்டு சிறை தண்​டனை, ரூ.10 லட்​சம் அபராதம் விதிக்​கப்​படும் என்று அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த 2023-24-ம் நிதி ஆண்​டில் இந்​தி​யா​வுக்கு மொத்​தம் 98.40 லட்​சம் வெளி​நாட்​டினர் வந்​துள்​ளனர். இந்​தி​யா​வுக்​குள் நுழை​யும்...
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கான மருத்துவக் காப்பீட்டை ரூ.10 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் மிகவும் ஏழ்மையான 40% குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மருத்துவக் காப்பீட்டு அளிக்கப்படுகிறது. இத்திட்டம் கடந்த ஆண்டு, பொருளாதார நிலையை கணக்கில் கொள்ளாமல் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இந்த...
டெல்லியில் தர்ஷனா ஜெயின் என்கிற 80 வயது மூதாட்டி தனது 59 வயது மகனுக்கு சிறுநீரக தானம் அளித்து மறு வாழ்வு அளித்துள்ளார். வடமேற்கு டெல்லி ரோஹிணி பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜேஷ். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் கடும் சிறுநீரக நோய் ஏற்பட்டதில் அவரது 2 சிறுநீரகங்களும் செயலிழந்தன. இதையடுத்து அவரது தாயாரும் மகனும் சிறுநீரக தானம் அளிக்க முன்வந்தனர். மருத்துவப் பரிசோதனையில் அவரது தாயாரின் சிறுநீரகம் பொருத்தமாக...
கர்​நாட​கா​வில் கதக் அருகே ஹோலி கொண்​டாட்​டத்​தின்​போது பள்ளி மாணவி​கள் 7 பேர் மீது மர்ம கும்​பல் ரசாயனம் கலந்த வண்​ணப்​பொடியை வீசினர். இதனால் மூச்​சுத் திணறல் ஏற்​பட்​ட​தால் 7 பேரும் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். கர்​நாடக மாநிலம் கதக் மாவட்​டத்​தில் லக் ஷ்மேஷ்வர் நகரில் நேற்று ஹோலி பண்​டிகை​யின்​போது, பள்ளி மாணவி​கள் 7 பேர் பேருந்து நிலை​யத்​தில் காத்​திருந்​தனர். அப்​போது 3 பைக்​கு​களில் வந்த இளைஞர் கும்​பல் அந்த மாணவி​கள் மீது ரசாயனம்...
தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்க பெங்களூரு நீதிமன்றம் மறுத்துவிட்டது. கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான‌ ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கடந்த 3-ம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,...
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஆண்டு கர்நாடக‌ முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் சிஐடி போலீஸார், அவரிடம் 2 நாட்கள் விசாரணை நடத்திய நிலையில், கடந்த ஜூனில் 750 பக்க குற்றப்...
பாகிஸ்தான் பெண் உளவாளியின் காதல் வலையில் சிக்கி, ரகசிய தகவல்களை அனுப்பிய, உ.பி. ஹஸ்ரத்பூர் ஆயுத தொழிற்சாலை ஊழியர் கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேசத்தின் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்ரத்பூர் என்ற இடத்தில் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலை உள்ளது. இங்கு ராணுவத்துக்கு தேவையான பலவித ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு ரவீந்திர குமார் என்பவர் பணியாற்றுகிறார். இவருக்கு பேஸ்புக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த நேகா சர்மா என்பவர் கடந்தாண்டு...
ஹோலி பண்​டிகை நேற்று ஹைத​ரா​பாத்​தில் வெகு விமரிசை​யாக கொண்​டாடப்​பட்​டது. தூல்​பேட்டை மல்சா புரம் எனும் இடத்​தில் நடந்த ஹோலி கொண்​டாடத்​தில் குல்ஃபி ஐஸ்​கிரீம்​கள், பர்​பிக்​கள், சில்​வர் காகிதத்​தில் ஒட்​டப்​பட்​டிருந்த இனிப்பு உருண்​டைகள் விநி​யோகம் செய்​யப்​பட்​டன. இதில் கஞ்சா கலந்​திருப்​பதை உணர்ந்த சிலர், இது குறித்து ரகசி​ய​மாக சிறப்பு அதிரடி படை​யினருக்கு தகவல் கொடுத்​தனர். அதன்​பேரில் உடனடி​யாக சிறப்பு அதிரடிப்​படை​யினர் சம்பவ இடத்​திற்கு வந்​து, அங்கு விழா ஏற்​பாடு செய்த...
டெல்லி மற்றும் ஆந்திராவில் முன்னாள் முதல்வர்கள் மிகவும் ஆடம்பரமாக மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட சொகுசு மாளிகைகளை என்ன செய்வது? என புதிய அரசுகள் குழம்பி வருகின்றன. டெல்லியில் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆட்சியின் போது, அங்கு 8 ஏக்கர் பரப்பளவில் அரசு பங்களா ரூ.33 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. மக்கள் வரிப்பணத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி அர்விந்த் கேஜ்ரிவால் சொகுசு மாளிகை கட்டியதாக டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக குற்றம்...