சட்ட விரோத சுர‌ங்க மோசடி வழக்கு: கர்நாடக பாஜக எம்எல்ஏவுக்கு 7 ஆண்டு சிறை

0
31

கர்​நாட​கா​வில் கடந்த 2011-ல் எடியூரப்பா தலை​மையிலான பாஜக ஆட்​சி​யில் ஜனார்த்தன ரெட்​டி சுற்றுலா, தொழில்​துறை அமைச்​ச​ராக பதவி வகித்​தார். அப்​போது அவர் கர்​நாட​கா​வில் பெல்​லாரி, பீஜாப்​பூரிலும், ஆந்​தி​ரா​வில் அனந்தப்​பூரிலும் சுரங்க நிறு​வனங்​களை நடத்தி வந்​தார். இந்​நிலை​யில் இரும்பு தாதுக்​களை சட்ட விரோத​மாக வெளி​நாடு​களுக்கு கடத்​தி​ய​தாக ஜனார்த்தன ரெட்டி மீது சிபிஐ வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தி​யது.

கடந்த 14 ஆண்​டு​களாக நடை​பெற்​று​வந்த இவ்​வழக்​கில் ஹைத​ரா​பாத் சிபிஐ நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​த‌து. இந்த தீர்ப்பில், ‘‘ஓபலாபுரம் சுரங்க நிறு​வனத்​தின் இயக்​குநர் னி​வாச ரெட்​டி, சுரங்க அதிபர் ஜனார்த்தன ரெட்​டி, அவரது உதவி​யாளர் மெக்​ரூஃப் அலி கான், சுரங்​கத் துறை​யின் முன்​னாள் இயக்​குநர் வி.டி. ராஜகோ​பால் ஆகியோர் குற்​ற​வாளி​களி​களாக கருதப்​படு​கின்​றனர்.

இந்த நால்​வருக்​கும் தலா 7 ஆண்​டு​கள் சிறை தண்​டனை​யும், ரூ.10 ஆயிரம் அபராத​மும் விதிக்​கப்​படு​கிறது” என்று குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. இதையடுத்து 4 பேரை​யும் போலீ​ஸார் காவலில் எடுத்​துள்​ளனர். ஜனார்த்தன ரெட்​டி இப்போது பாஜக எம்எல்ஏவாக உள்ளார். 7 ஆண்​டு​கள் சிறை தண்​டனை வி​திக்​கப்​பட்​டுள்​ள​தால்​, அவரது எம்​எல்​ஏ பத​வி பறி​போய்​ உள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here