Google search engine
இஸ்ரேலில் பல்வேறு கட்டிடப்பணிக்காக 50 ஆயிரம் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இதற்காக அந்த அரசின் சார்பில் இந்தியாவின் உத்தரபிரதேசம் மற்றும் பிஹார் அரசுகளுக்கு ஆட்களை அனுப்பக் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இஸ்ரேலில் கட்டிடப் பணிகளுக்கு ஆட்கள் சேர்ப்பு பணி வரும் ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளது. இந்நாட்டின் பணிகளுக்கு தேவைப்படும் தொழிலாளர்களின் வயது 25 முதல் 32 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர்கள், கட்டிட...
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஸ்னவா திருமலையில் தலைமுடி காணிக்கை செலுத்தினார். மேலும் அன்னதானத்துக்கு ரூ.17 லட்சம் நன்கொடையும் அவர் வழங்கினார். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர். இவர் சிங்கப்பூரில் பள்ளி படிப்பு படித்து வருகிறார். இவர் படிக்கும் பள்ளியில் அண்மையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் மார்க் சங்கர் உட்பட பலர் தீக்காயமடைந்தனர். ஒரு மாணவி...
ஒடிசா பல்கலைக்கழக துணைவேந்தரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ஈடுபட்ட 2 நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். ஒடிசாவின் பீரம்பூர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி வருபவர் கீதாஞ்சலி தாஸ். இவரிடம் அமலாக்கத் துறையில் இருந்து பேசுவதாக கூறி இரண்டு பேர் அறிமுகமாகினர். பின்னர், கீதாஞ்சலி தாஸ் பணமோசடியில் ஈடுபட்டதாக கூறி அவரை பிப்ரவரி 14 முதல் 22 வரை டிஜிட்டல் அரெஸ்ட்டில் வைத்திருப்பதாக கூறி விசாரணை முன்னுரிமைக்காக ரூ.14 லட்சத்தை டெபாசிட்...
நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள் ரூ.10 லட்சம் கோடியில் மேம்படுத்தப்படும். இதில் வடகிழக்கு மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: உலகத் தரத்துக்கு இணையாக இந்தியாவில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இதன்படி ரூ.10 லட்சம் கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் வடகிழக்கு...
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிப்பது வரம்பு மீறிய செயல் என கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் குற்றம்சாட்டி உள்ளார். தமிழக அரசின் சில மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டதை எதிர்த்தும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயம் செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்ததுடன் கிடப்பில் இருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல்...
கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சியின் போது ஒப்பந்ததாரர் சங்கத்தினர் தெரிவித்த 40 சதவீத கமிஷன் புகார் மீது சிஐடி விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 2022-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை மீதான பாஜக அரசு மீது அம்மாநில ஒப்பந்ததாரர் சங்கத்தினர் 40 சதவீத கமிஷன் ஊழல் புகாரை தெரிவித்தனர். அதாவது அரசின் ஒப்பந்த பணிகளை ஒதுக்குவதற்கு அமைச்சர்கள், அதிகாரிகள் 40 சதவீதத்தை கமிஷனாக...
தெலங்​கானா மாநிலம், கம்​மம் மாவட்​டம் ரெட்​டிபல்லி கிராமத்தை சேர்ந்​தவர் ராமய்யா (87). விவ​சா​யி​யான ராமய்யா 50 வருடங்​களுக்​கும் மேலாக கம்​மம் உட்பட அதன் சுற்​றுப்​புற மாவட்​டங்​களில் உள்ள பள்​ளி, கல்​லூரி, பேருந்து நிலை​யங்​கள், விளை​யாட்டு மைதானங்​கள், அரசு அலு​வல​கங்​கள் என பல இடங்​களில் மரக்​கன்​றுகளை நடு​வதை வழக்​க​மாக கொண்​டிருந்​தார். இதனால் இவரை சிலர் கேலி​யும் செய்​ததுண்​டு. ஆனால், அவர் அதனை பொருட்​படுத்​து​வ​தில்​லை. இவர் தன் சட்டை மீதும், தலை​யிலும் “இயற்​கையை...
மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து உள்ளது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்தும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பை நிர்ணயம் செய்யக் கோரியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை...
விசாகப்பட்டினம்: ஆந்​தி​ரா​வில் பட்​டாசு தொழிற்​சாலை​யில் ஏற்​பட்ட தீ விபத்​தில் சிக்கி 2 பெண்​கள் உட்பட 8 தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​தனர். படு​காயமடைந்த 7 பேர் மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். ஆந்​திர மாநிலம் அனகாபல்லி மாவட்​டத்​துக்கு உட்​பட்ட கொத்​தவுட்ல மண்​டலம் கைலாசபுரத்​தில் உள்ள பட்​டாசு தொழிற்​சாலை​யில் நேற்று மதி​யம் 12.45 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்​பட்​டது. ஆலை முழு​வதும் தீ மளமளவென பரவிய​தால் அங்​கிருந்தபட்​டாசுகள் சரமாரி​யாக வெடித்து...
வக்பு சட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து நடை​பெற்ற போராட்​டம் வன்​முறை​யாக மாறிய​தால் மேற்கு வங்க மாநிலம் முர்​ஷி​தா​பாத்​தில் பதற்​ற​மான சூழல் நில​வு​கிறது. இதையடுத்​து, மேலும் 5 கம்​பெனி துணை ராணுவ படை​யினர் குவிக்​கப்​பட்​டுள்​ளனர். நாடாளு​மன்ற இரு அவை​களி​லும் நிறைவேற்​றப்​பட்ட வக்பு சட்ட திருத்த மசோ​தாவுக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு ஒப்​புதல் அளித்​தார். இதைத் தொடர்ந்​து, நாடு முழு​வதும் வக்பு சட்​டம் அமலுக்கு வந்​துள்​ளது. இதற்​கிடையே, வக்பு சட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து...