Google search engine
பெங்களூருவில் நேற்று மாலை பெய்த ஆலங்கட்டி மழையால் பவுரிங் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெங்களூருவில் கடந்த இரு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் பலத்த இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சாலைகளிலும் ஐடி நிறுவனங்களிலும் சாலைகளில் பனிமழை பெய்தது போன்று காட்சியளித்தது. சிவாஜி நகர், கம்மனஹள்ளி, கிருஷ்ண ராஜபுரம்,...
ஒடிசா மாநிலம் கேந்​துஜார் மாவட்​டம் தியா​னாலி கிராமத்​தைச் சேர்ந்​தவர் ஜீத்து முண்​டா. இவரது சகோ​தரி கக்ரா முண்டா இரண்டு மாதங்​களுக்கு முன்பு கால​மா​னார். மல்​லி​பாசி பகு​தி​யில் உள்ள ஒடிசா கிராமின் வங்​கிக் கிளை​யில் கக்ரா கணக்கு வைத்​திருந்​தார். அதில் இருந்த ரூ.19,400-ஐ எடுப்​ப​தற்​காக ஜீத்து முண்டா வங்​கிக்​குச் சென்​றுள்​ளார். கல்​வியறிவு இல்​லாத பழங்​குடி​யின​ரான ஜீத்து முண்​டா​விடம், அவரது சகோ​தரி​யின் இறப்​புச் சான்​றிதழ் அல்​லது வாரிசுச் சான்றிதழ் இல்​லை. இதனால், கணக்கு...
மூதாட்டி தாக்​கல் செய்த அவதூறு வழக்கை 20 ஆண்டுகள் கழித்​து விசா​ரிக்கப்​படும் என்ற உத்தரவை மறுநாளில் மாற்றி மும்பை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மும்​பையைச் சேர்ந்த தாரிணிபென் (90), த்வனி தேசாய் (57) ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு கில்​கில்​ராஜ் பன்​சாலி மற்​றும் சிலருக்கு எதி​ராக உயர் நீதி​மன்​றத்​தில் ஒரு மனு தாக்​கல் செய்தனர். 2015ம் ஆண்டு ஷியாம் கூட்​டுறவு வீட்​டு ​வசதி சங்கத்தின் வரு​டாந்​திர பொதுக்​குழுக் கூட்​டத்​தின்​போது நடந்ததாகக்...
டீப்ஃபேக் வீடியோ மூலம் வங்கியில் கடன் பெற்று நூதன மோசடி செய்த நான்கு பேரை அகமதாபாத் சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் எப்படி கவனம் பெற்று என்பது குறித்து பார்ப்போம். வழக்கமாக சைபர் மோசடியாளர்கள் ஓடிபி எண்ணை கொண்டு மோசடி செய்வர். அதனால் ஓடிபி-யை யாரிடமும் பகிர வேண்டாம் என காவல் துறையினர், வங்கிகள் சொல்வதுண்டு. இந்நிலையில், அந்த ஓடிபி-யை பெற டீப்ஃபேக் வீடியோவை குஜராத்தில்...
தெற்கு மும்​பையைச் சேர்ந்த அப்​துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்​ரின் (35), மகள்​கள் ஆயிஷா (16) மற்​றும் ஜைனப் (13) ஆகியோர் கடந்த சனிக்கிழமை இரவு வீட்​டில் நடந்த உறவினர்​கள் சந்திப்புக்​குப் பிறகு தர்பூசணி பழம் சாப்​பிட்​டனர். அதன் பிறகு அனை​வருக்​கும் கடுமை​யான வாந்தி மற்​றும் வயிற்றுப்​போக்கு ஏற்​பட்​டது. சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்​களி​லேயே 4 பேரும் உயி​ரிழந்​தனர். உயி​ரிழந்​தவர்களின் பிரேதப் பரிசோதனைக்​குப் பிறகு வெளி​யான பூர்​வாங்க...
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியைச் சேர்ந்த உமர் ஹாரிஸ், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய நபராக கருதப்படுகிறார். 2012-ல் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவிய இவர், லஷ்கர் அமைப்புக்கு ஆள் சேர்த்தது, நிதி திரட்டி வந்தார். இது தொடர்பாக இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், காவல் துறையினரின் பிடியில் சிக்காமல் மின்னல் வேகத்தில் தப்பிச் செல்வதால் இவருக்கு கர்கோஷ் (முயல்) என்ற புனைப் பெயர் உள்ளது. கடந்த...
ஏப்ரல் 23இல் முதல் கட்ட வாக்குப் பதிவை எதிர்கொண்டிருக்கும் மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல் களம், அனலாகத் தகிக்கிறது. வழக்கமாகப் பல கட்டங்களாக நடத்தப்படும் மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல், இந்த முறை இரண்டே கட்டங்களாக நடத்தப்படுவது கவனம் ஈர்க்கிறது. ஆனால், வங்க மண்ணின் அரசியல் களத்துக்கே உரிய பரபரப்புக் காட்சிகளுக்கு இந்தத் தேர்தலும் விதிவிலக்கல்ல. 2011-லிருந்து முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் மம்தா பானர்ஜியைத் தோற்கடிக்க பகீரத முயற்சியில் இறங்கியிருக்கிறது...
குஜ​ராத்​தில் பறி​முதல் செய்​யப்​பட்ட சரக்கு வாக​னத்தை விடுவிக்க ரூ.55 லட்​சம் லஞ்​சம் கேட்ட 2 ஜிஎஸ்டி அதி​காரி​கள் கைது செய்​யப்​பட்​டனர். குஜ​ராத்​தில் நடி​யாத் பகு​தி​யில் ஜிஎஸ்டி அதி​காரி​கள் ஒரு சரக்கு வாக​னத்தை மறித்து ஜிஎஸ்டி வரி ரசீதை ஆய்வு செய்​துள்​ளனர். அதில் குறை​கள் இருப்​ப​தாக கூறி சரக்கு வாக​னத்தை ஜிஎஸ்டி அலு​வல​கத்​துக்கு கொண்டு சென்​றனர். அந்த சரக்கு வாக​னத்​தின் உரிமை​யாளர் ஜிஎஸ்டி கண்​காணிப்பாளர் அமர்​நாத் கோவர்​தன் ​ராம் சரோஜ், ஆய்​வாளர்...
கடந்த 2021 ஏப்​ரல் முதல் 2025 நவம்​பர் வரை நாடு முழு​வதும் டிஜிட்​டல் கைது உட்பட சைபர் மோசடியால் பொது​மக்​கள் ரூ.54,000 கோடியை இழந்துள்ளனர். இந்த மோசடியைத் தடுக்க சிபிஐ சார்​பில் அபய் என்ற பெயரில் ‘சாட்பாட்' வசதி தொடங்கப்படவுள்ளது. டெல்​லி​யில் இன்று நடை​பெறும் நிகழ்ச்​சி​யில் உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் ‘சாட்​பாட்' வசதியை தொடங்கி வைக்க உள்​ளார். இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறிய​தாவது: சிபிஐ அமைப்​பின் சாட்​பாட்...
மேற்​கு​ வங்​கத்​தில் பாஜக ஆட்சி அமைத்​தால் பெண்​களுக்கு ஆண்​டு​தோறும் ரூ.36,000 வழங்​கப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். ஏப்.23, 29 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக மேற்கு வங்க சட்டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. தேர்​தலை​யொட்டி மேற்​கு ​வங்​கத்​தின் விஷ்ணுபூர், புருலி​யா, ஜார்​கி​ராம், மிதி​னாபூர் உள்​ளிட்ட பகு​தி​களில் பாஜக வேட்​பாளர்​களை ஆதரித்து பிரதமர் மோடி...