நாசிக்கில் தெரு நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தக் கோரி, சிவசேனா நடத்திய போராட்டம் வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இந்நிலையில், சிவசேனா (யுபிடி) இளைஞர் அணி மாவட்டத் தலைவர் விக்ரம் ரந்தாவே, நிபாட் நகர பஞ்சாயத்து தலைமை அதிகாரி தீரஜ் பாம்ரேவின் அலுவலகத்துக்கு சென்று அவரது மேசை மீது நாய்களை அவிழ்த்து விட்டார்.
இதுகுறித்து, ரந்தாவே கூறியதாவது: நாசிக்சில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது....
திரிணமூல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்: இடைத்தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையம் உத்தரவு
admin - 0
திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்துள்ள உள்கட்சிப் பிளவை தொடர்ந்து, வரவிருக்கும் மேற்கு வங்க சட்டமன்ற இடைத்தேர்தலில் அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த இரு தரப்புக்கும் தேர்தல் ஆணையம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2026 மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சியின் தலைமைக்கு எதிராக உள்கட்சி போராட்டம் வெடித்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் சுமார் 60 எம்எல்ஏ-க்கள்...
கேரள மாநிலம் வயநாடு மாவட்ட ஆட்சியர் குழந்தையை பெற்றெடுத்த 6 நாட்களில் பணிக்கு திரும்பினார். எனினும், பின்னர் 2 மாத விடுப்பில் சென்றுள்ளார்.
கேரளாவின் வயநாடு ஆட்சியர் மேகாஸ்ரீ. 2017-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான அவர், கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி தனது அலுவலக பணிகளை முடித்தார். பிறகு அவர் வீட்டுக்குச் செல்வதற்குப் பதிலாக நேராக மருத்துவமனையில் சேர்ந்து கொண்டார். மறுநாள், மேகாஸ்ரீ தனது 3-வது பெண் குழந்தையைப்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் அந்நாட்டு அதிபர் புதினின் வாழ்த்துச் செய்தியையும், இரு தலைவர்களும் இணைந்திருக்கும் புகைப்படத்தையும் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்டது.
அந்த வாழ்த்துச் செய்தியில், மோடி தனது நாட்டு மக்களிடையே ஆழ்ந்த மரியாதையையும், உலக அரங்கில் பெரும் செல்வாக்கையும் பெற்றிருப்பதாக புதின்...
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த வயதிலும் அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மிகவும் சுறுசுறுப்பாகவும் வேலை செய்து வருகிறார்.
இதற்கு காரணம் அவரின் யோகா மற்றும் உடற்பயிற்சி பழக்கங்கள். அவரது உடல்நலம் குறித்த உரையாடல்களில் இதுவே பிரதானமாக இருக்கும். அதேநேரம் அவரின் உணவுப் பழக்கங்களும் இதில் முக்கியமானவை. அவை மிகவும் எளிமையானவை. அவரது உணவுகளை வரையறுக்கும் விரிவான உணவு அட்டவணை (சூப்பர் டயட்)...
பிஎஃப் திட்டத்தில் மாதச் சம்பள உச்சவரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் முன்மொழிவை ஏற்று, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் கட்டாயப் பாதுகாப்புக்கான மாதச்...
வடக்கு அரபிக் கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படையின் போர்க் கப்பல் மீது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் மோதியது தொடர்பாக, அந்நாட்டு தூதரகத்தின் பொறுப்பு அதிகாரியை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது.
வடக்கு அரபிக் கடலில் நேற்று முன்தினம் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படையின் போர்க் கப்பலை நோக்கி பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் ஒன்று அதிக வேகத்தில் மோதியது. இந்த சம்பவத்தில் பெரிய அளவில்...
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கோலாகலமாக தொடங்கி உள்ள நிலையில், நேற்று காலை 2-ம் நாள் பிரம்மோற்சவத்தின் பாகமாக உற்சவ மூர்த்தியான மலையப்பர், வாசுகியாக கருதப்படும் சின்ன சேஷ வாகனத்தில், பாண்டுரங்கர் அலங்காரத்தில் எழுந்தருளினார். 4 மாட வீதிகளிலும் திரளான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷமிட்டவாறு சுவாமியை தரிசித்தனர்.
வாகன சேவைக்கு முன் யானை, குதிரை, காளை ஆகிய பரிவட்டங்கள் செல்ல, அவற்றிற்கு பின் ஜீயர் சுவாமிகளும் அவரது...
“ஒவ்வொரு இந்தியர் மீதும் வரியை சுமத்திய பிரதமர்” – யுபிஐ கட்டணத்துக்கு ராகுல் எதிர்ப்பு
admin - 0
யுபிஐ பரிவர்த்தனைக் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தாந்தி தனது எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் ஒருமுறை, “நீங்கள் இடதுசாரி கொள்கை கொண்டவரா அல்லது வலதுசாரி கொள்கை கொண்டவரா” என்று கேட்கப்பட்டபோது, நான் இடதுபுறமோ அல்லது வலதுபுறமோ சாய்வதில்லை. நான் நேராக நிற்கிறேன்...
மும்பையில் தனது நிலத்தை அபகரித்ததாக பாஜக எம்எல்ஏ மீது பிரதமர் மோடியிடம், அவரது பள்ளித் தோழர் நேரில் சந்தித்து புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் ஸ்ரீகர் பர்தேஷி தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இதில், அஸ்கரலி வோரா, பாஜக எம்எல்ஏ நரேந்திர மேத்தா, பயந்தர் மாநகராட்சி ஆணையர் ராதா வினோத் சர்மா மற்றும் நகரத் திட்டமிடல் அதிகாரி புருஷோத்தம் ஷிண்டே ஆகியோர்...









