Google search engine
வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. தற்போதுள்ள, ‘தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971’-ஐ, திருத்துவதற்கான இந்த மசோதாவை, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தாக்கல் செய்தார். ‘தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026’-ன் படி, தேசியப் பாடலான ‘வந்தே மாதர’-த்தை பாடும் கூட்டத்தை வேண்டுமென்றே தடுப்பதாகவோ அல்லது இடையூறு விளைவிப்பதாகவோ கண்டறியப்படும்...
நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்த உத்தரவிட்டவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா என்று ராகுல் காந்தி கூறியதற்கு, பாஜக எம்பிக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததால் மக்களவையில் அமளி ஏற்பட்டது. பொதுத் தேர்வு (முறைகேடு தடுத்தல்) திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் போராடியபோது, அவர்களுக்கு எதிராக காவல்துறை...
மக்​களவை​யில் எதிர்க்​கட்​சிகளின் பலத்த அமளி மற்றும் கூச்​சலுக்கு இடையே, பொதுத் தேர்​வு​கள் (முறை​கேடு​கள் தடுப்​பு) திருத்​தச் சட்ட மசோதா 2026, குரல் வாக்​கெடுப்பு மூலம் நேற்று நிறைவேற்​றப்​பட்​டது. வினாத்​தாள் கசிவு தடுப்​புச் சட்ட மசோதா தொடர்​பாக மக்களவை​யில் நேற்று விவாதம் நடை​பெற்​றது. இதில், எதிர்க்கட்சித் தலை​வர் ராகுல் காந்தி பங்​கேற்று பேசி​ய​தாவது: “இந்​தி​யக் கல்வி முறையை ஆர்​எஸ்​எஸ் சீரழித்து வரு​கிறது. மத்தியக் கல்வி அமைச்​சகத்தை அந்த துறை​யின் அமைச்​சர் இயக்​க​வில்​லை....
மேற்கு வங்​கத்​தில் முன்​னாள் அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்​டில் நேற்று நடை​பெற்ற சோதனை​யின்​போது, ரூ.20 கோடி ரொக்​கம், 15 கிலோ தங்​கம் பறி​முதல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்​பும் மாவட்​டம் டியூச்சா கிராமத்​தைச் சேர்ந்த மினார் மொண்​டல் அரசு பேருந்து ஓட்​டுந​ராக பணி​யாற்றி உள்​ளார். பின்​னர் அப்​பணியி​லிருந்து வில​கிய அவர், கல் குவாரி வியா​பாரத்​தில் ஈடு​பட்டு வந்த தனது உறவினர் துளுமொண்டலுடன் இணைந்து வர்த்​தகம் செய்து வந்​துள்​ளார். குறுகிய...
கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் டெல்​லி​யில் நாடாளு​மன்ற வளாகத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: “கர்​நாட​கா​வில் பரு​வ​மழை பெய்​யாத​தால் அணை​களில் போதிய அளவுக்கு நீர் இல்​லை. கடந்த இரு​முறை தமிழகம் நீர் கேட்டபோது, காவிரி ஒழுங்​காற்று குழு அவர்​களின் கோரிக்கையை நிராகரித்​திருந்​தது. தற்​போது தமிழகத்​துக்கு 3500 கன அடி நீர் திறந்​து​விடு​மாறு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்​தர​வுக்கு எதி​ராக மேல்​முறை​யீடு செய்​வது குறித்து அமைச்​சர்​கள், அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தினேன். அதில் மேல்​முறை​யீடு செய்​வதென முடி​வெடுத்​துள்​ளோம். தமிழக...
நீட் தேர்வு போராட்​டத்​தில் ஈடு​பட்ட மாணவர்​களை உடனடி​யாக விடுவிக்க வேண்​டும் என்​று மத்​திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் வினாத்​தாள் கசிவுக்கு எதி​ரான போராட்​டத்​தின்​போது, காவல்​துறை​யினர் பெல்​லட் குண்​டு​கள், கண்​ணீர்ப் புகை குண்​டு​களை பயன்​படுத்தி மாணவர்​கள் மீது தாக்​குதல் நடத்​தி​ய​தாக புகார் எழுந்​தது. அத்​து​மீறிய காவல் ​துறை​யினர் மீது நடவடிக்கை எடுக்கக்​கோரி தொடரப்பட்ட வழக்​கு​கள் உச்​ச நீ​தி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்​றும் நீதிப​தி​கள் ஜாய்​மால்யா...
கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் நேற்று காலையில் டெல்லி சென்​றார். மேகே​தாட்டு அணை திட்​டம், மகதாயி அணை திட்​டம் ஆகிய​வ‌ற்​றுக்கு மத்​திய அரசின் அனுமதி பெறு​வது குறித்து நீர்ப்​பாசன துறை அமைச்​சர் ராமலிங்க ரெட்​டி, தலைமை வழக்​கறிஞர் சசிகிரண் ஷெட்​டி, உச்ச நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் ஆகியோ​ருடன் ஆலோ​சனை நடத்​தி​னார். பிறகு காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே​வின் இல்​லத்​தில் மேகே​தாட்டு விவ​காரம், காவிரி நீர் பங்​கீட்டு பிரச்சினை, வறட்சி நில​வரம் குறித்து...
பாறைகள், கருங்கல் ஜல்லி உள்ளிட்டவற்றை கேரளாவுக்குக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் வி.டி. சதீசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் விஜய்க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த 9-ம் தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பு எண் 306ன் மூலம், மாநிலங்களுக்கு இடையேயான கருங்கல் பாறைகள், கருங்கல் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என்பதை...
டெல்​லி​யில் காவிரி நீர் ஒழுங்​காற்​றுக் குழு கூட்​டம் அதன் தலை​வர் எஸ்​.கே.ஹல்​தர் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் கர்​நாட​கா, தமிழ்​நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்​களை சேர்ந்த நீர்ப்​பாசனத் துறை அதிகாரி​கள் பங்​கேற்​றனர். இதில் தமிழக அரசின் தரப்​பில், “உச்​ச நீ​தி​மன்​றத்​தின் தீர்ப்பின்படி கர்​நாடகா காவிரி​யில் தமிழகத்​திற்கு வழங்க வேண்டிய நீரை மாத​வாரி​யாக வழங்​க​வில்​லை. இதனால் பாசனத்​திற்​காக மேட்​டூர் அணை இன்​னும் திறக்​கப்​பட​வில்​லை. எனவே கர்​நாடக அரசு தமிழகத்​துக்கு வழங்க...
பிரதமர் நரேந்​திர மோடி​யின் வீடியோ பேஸ்புக்​கில் இருந்து நீக்​கப்​பட்​டது தொடர்​பாக மெட்டா நிறு​வனத்​துக்கு மத்திய அரசு சம்​மன் அனுப்பி உள்​ளது. நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரம் தொடர்​பாக டெல்லி ஜந்​தர் மந்தரில் இளைஞர்​கள் தொடர் போராட்​டம் நடத்​தினர். இது தொடர்​பாக கடந்த 23-ம் தேதி நள்​ளிர​வில் பிரதமர் நரேந்​திர மோடி வெளியிட்ட செல்ஃபி வீடியோவில், “வி​னாத்​தாள் கசிவு வழக்​கு​களை விசா​ரிக்க விரைவு நீதி​மன்​றங்​கள் அமைக்​கப்​படும். நாடாளு​மன்​றத்​தில் புதிய மசோதா விரை​வில்...