வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
தற்போதுள்ள, ‘தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971’-ஐ, திருத்துவதற்கான இந்த மசோதாவை, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தாக்கல் செய்தார்.
‘தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026’-ன் படி, தேசியப் பாடலான ‘வந்தே மாதர’-த்தை பாடும் கூட்டத்தை வேண்டுமென்றே தடுப்பதாகவோ அல்லது இடையூறு விளைவிப்பதாகவோ கண்டறியப்படும்...
“மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அமித் ஷா உத்தரவிட்டார்” – ராகுல் கருத்தால் மக்களவையில் அமளி
admin - 0
நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்த உத்தரவிட்டவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா என்று ராகுல் காந்தி கூறியதற்கு, பாஜக எம்பிக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததால் மக்களவையில் அமளி ஏற்பட்டது.
பொதுத் தேர்வு (முறைகேடு தடுத்தல்) திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் போராடியபோது, அவர்களுக்கு எதிராக காவல்துறை...
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
admin - 0
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலத்த அமளி மற்றும் கூச்சலுக்கு இடையே, பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்தச் சட்ட மசோதா 2026, குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்ட மசோதா தொடர்பாக மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசியதாவது: “இந்தியக் கல்வி முறையை ஆர்எஸ்எஸ் சீரழித்து வருகிறது. மத்தியக் கல்வி அமைச்சகத்தை அந்த துறையின் அமைச்சர் இயக்கவில்லை....
மேற்கு வங்கத்தில் முன்னாள் அரசுப் பேருந்து ஓட்டுநர் வீட்டில் சோதனை: ரூ.20 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் பறிமுதல்
admin - 0
மேற்கு வங்கத்தில் முன்னாள் அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்டில் நேற்று நடைபெற்ற சோதனையின்போது, ரூ.20 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் டியூச்சா கிராமத்தைச் சேர்ந்த மினார் மொண்டல் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி உள்ளார். பின்னர் அப்பணியிலிருந்து விலகிய அவர், கல் குவாரி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த தனது உறவினர் துளுமொண்டலுடன் இணைந்து வர்த்தகம் செய்து வந்துள்ளார். குறுகிய...
“கர்நாடக அணைகளை பார்வையிடுமாறு தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்” – முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி
admin - 0
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கர்நாடகாவில் பருவமழை பெய்யாததால் அணைகளில் போதிய அளவுக்கு நீர் இல்லை. கடந்த இருமுறை தமிழகம் நீர் கேட்டபோது, காவிரி ஒழுங்காற்று குழு அவர்களின் கோரிக்கையை நிராகரித்திருந்தது. தற்போது தமிழகத்துக்கு 3500 கன அடி நீர் திறந்துவிடுமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அதில் மேல்முறையீடு செய்வதென முடிவெடுத்துள்ளோம். தமிழக...
நீட் தேர்வு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தின்போது, காவல்துறையினர் பெல்லட் குண்டுகள், கண்ணீர்ப் புகை குண்டுகளை பயன்படுத்தி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. அத்துமீறிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா...
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று காலையில் டெல்லி சென்றார். மேகேதாட்டு அணை திட்டம், மகதாயி அணை திட்டம் ஆகியவற்றுக்கு மத்திய அரசின் அனுமதி பெறுவது குறித்து நீர்ப்பாசன துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, தலைமை வழக்கறிஞர் சசிகிரண் ஷெட்டி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
பிறகு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் மேகேதாட்டு விவகாரம், காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை, வறட்சி நிலவரம் குறித்து...
பாறைகள், கருங்கல் ஜல்லி உள்ளிட்டவற்றை கேரளாவுக்குக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் வி.டி. சதீசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் விஜய்க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த 9-ம் தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பு எண் 306ன் மூலம், மாநிலங்களுக்கு இடையேயான கருங்கல் பாறைகள், கருங்கல் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என்பதை...
தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடி வீதம் காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
admin - 0
டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் தமிழக அரசின் தரப்பில், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கர்நாடகா காவிரியில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை மாதவாரியாக வழங்கவில்லை. இதனால் பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்னும் திறக்கப்படவில்லை. எனவே கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க...
பிரதமர் மோடியின் வீடியோ பேஸ்புக்கில் நீக்கப்பட்டது தொடர்பாக ‘மெட்டா’வுக்கு மத்திய அரசு சம்மன்
admin - 0
பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக கடந்த 23-ம் தேதி நள்ளிரவில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செல்ஃபி வீடியோவில், “வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். நாடாளுமன்றத்தில் புதிய மசோதா விரைவில்...










