Google search engine
மேற்கு வங்க தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் (டிஎம்​சி) 80 எம்​எல்​ஏக்​களில் 58, மக்​களவை​யின் 29 எம்​.பி.க்​களில் 20 பேர் மற்​றும் மாநிலங்​களவை​யின் 13 எம்​.பி.க்​களில் 4 பேர் மம்​தாவுக்கு எதி​ராகக் கிளம்பி உள்​ளனர். இதை சமாளிக்க காங்​கிரஸ் கட்​சி​யில் மீண்​டும் ஐக்​கிய​மாவது குறித்து மம்தா யோசனை செய்து வரு​கிறார். கடந்த வாரம் டெல்​லி​யில் நடை​பெற்ற இண்​டியா கூட்​டணி கூட்​டத்​தில் மம்தா பங்​கேற்​றார். இதற்கு முன்பு நடை​பெற்ற இண்​டியா கூட்​டணி...
கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி குஜராத்தின் அகம​தா​பாத்​திலிருந்து புறப்​பட்ட ஏர் இந்தியா விமானம் ஏஐ-171 சில நிமிடங்​களி​லேயே விபத்​துக்​குள்​ளானது. இந்த விபத்தில் குஜ​ராத் முன்​னாள் முதல்​வர் விஜய் ரூபானி உள்பட 260 பேர் உயி​ரிழந்​தனர். இந்த விபத்​திலிருந்து விஸ்வாஸ்​குமார் ரமேஷ் (39) என்​பவர் மட்டும் உயிர்​பிழைத்​தார். விபத்து நடந்த இடத்​திலிருந்து ரத்​தம் தோய்ந்த சட்​டை​யுட​னும், கையில் செல்​போனுடன் இவர் நடந்து வரும் வீடியோ அப்​போது இணை​யத்​தில் வைரலானது. இந்​நிலை​யில்...
உணவுப் பொருட்​கள் மற்​றும் உணவு பாக்​கெட்​டு​களில் உலோக ஊசிகள், ஸ்டேப்ளர் பின், வயர்​களை பயன்​படுத்​தக்​கூ​டாது என்று இந்​திய உணவு பாது​காப்​பு, தர நிர்ணய ஆணை​யம் கண்​டிப்​புடன் உத்​தர​விட்​டுள்​ளது. செய்​தித்​தாளில் உள்ள அச்​சுமை​யில் தீங்கு விளைவிக்​கும் ரசாயனங்​கள் உள்​ளன. எனவே உணவுப் பொருட்​களை செய்​தித்​தாள்​களில் பொட்​டலம் கட்​டக்​கூ​டாது என்று இந்​திய உணவுப் பாது​காப்​பு, தர நிர்ணய ஆணை​யம் (எப்​எஸ்​எஸ்​ஏஐ) சில நாட்​களுக்கு முன்பு உத்​தர​விட்​டது. இதைத் தொடர்ந்து எப்​எஸ்​எஸ்ஏஐ நேற்று வெளி​யிட்ட உத்​தர​வில்...
தாய்லாந்தில் இருந்து மும்பை வந்திறங்கிய 28 வயது மாடல் அழகி ஒருவர், 11 கிலோவுக்கும் அதிகமான உயர்தர கஞ்சா கடத்தி வந்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கேரளாவை சேர்ந்த மாடல் அழகி ஹர்ஷா சன்னி. இவர் 'மிசஸ் கேரளா' 2025 போட்டியில் பங்கேற்றவர் ஆவார். இந்நிலையில் ஹர்ஷா சன்னி, தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து ஏர் இந்தியா விமானம் முலம் கடந்த புதன்கிழமை நள்ளிரவு மும்பையின் சத்ரபதி சிவாஜி...
மக்​களவை​யில் தங்​களை ‘உண்​மை​யான திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்​சி) குழு​வாக அங்​கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க அக்கட்சியின் அதிருப்தி எம்​.பி.க்​கள் மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லாவை சந்​திக்​கத் தயா​ராகி வரு​கின்​றனர். மேற்கு வங்​கத்​தில் அண்​மை​யில் நடை​பெற்ற சட்​டப்​பேரவை தேர்​தலில் பாஜக அமோக வெற்றி பெற்​று, முதல்​முறை​யாக ஆட்​சியை கைப்​பற்​றியது. திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சிக்கு (டிஎம்​சி) 80 இடங்​கள் மட்​டுமே கிடைத்​தன. இந்த தோல்விக்கு பிறகு அக்​கட்​சி​யில் உட்​கட்சி பூசல் அதி​கரித்து...
இந்​திய ரயில்வே அகல ரயில் பாதைகளை முழுமையாக மின்​மய​மாக்​க இலக்​கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், நாட்​டின் அகல ரயில் பாதை​யில் 99.6% ஏற்​கெனவே மின்​மய​மாக்​கப்​பட்டு விட்​ட​தாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்​ளது. மொத்​த​முள்ள 70,271 கி.மீ. அகல ரயில் பாதை​யில் 2026 மே 31ம் தேதி நில​வரப்​படி 70,002 கி.மீ. மின்​மய​மாக்​கப்​பட்​டுள்​ளது. இந்தியா​வில் ரயில் ​பாதை மின்​மய​மாக்​கல் கடந்த 1925-ல் தொடங்​கியது. நாட்​டின் முதல் மின்​சார ரயில் 1,500 வோல்ட் டிசி அமைப்​பில்,...
மருத்​துவ இளநிலைப் படிப்​பு​களுக்​கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடை​பெற்​றது. இந்த வினாத்தாள் முன்​கூட்​டியே கசிந்​திருப்​பது தெரிய​வந்​தது. இதுகுறித்து சிபிஐ வழக்​குப் பதிவு செய்து தீவிர விசா​ரணை நடத்தி வரு​கிறது. வினாத்​தாள் தயாரிப்பு குழு​வில் இடம் பெற்றிருந்த பேராசிரியர்கள் சிலர் நீட் வினாத்​தாளை பல லட்சங்களுக்கு விற்​பனை செய்​திருப்​பது சிபிஐ விசா​ரணை​யில் தெரியவந்துள்ளது. மகா​ராஷ்டி​ரா​வின் புனேவை சேர்ந்த இவர்​கள் உட்பட 13 பேர் கைது செய்​யப்​பட்டு...
ஹைத​ரா​பாத் கூகட்​பல்லி பகு​தி​யில் உள்ள ‘கிளப் மஸ்​தி’ எனும் பார் வெகு பிரசித்​தம். இதனை ‘கு​யின்ஸ் அண்ட் கிங்ஸ் பப்’ என்​றும் அழைப்​பர். இங்கு இரவில் நிபந்​தனை​களை மீறி ஆட்​டம், பாட்​டு, கொண்​டாட்​டம் என கேளிக்கை விருந்​துகள் நடந்து கொண்டே இருக்​கும். இந்த பாரில் இளம் பெண்​கள் நடன​மாடியபடியே, கஸ்​டமர்​களை கவர்ந்​து, அவர்​களை அளவுக்கு அதி​க​மாக மது​பானம் குடிக்க வைத்​து, பணத்தை பில்​லுக்கு மேல் போட்டு தீட்​டு​வதும் வழக்​கம் என...
உத்தர பிரதேச மாநிலம் அயோத்​தி​யில் உள்ள ராமர் கோயிலுக்​காக இந்​தியா மட்​டுமல்​லாது, உலகம் முழு​வ​தி​லும் இருந்து நன்​கொடை குவிந்து வரு​கிறது. ரொக்​கம் மட்​டுமல்​லாமல் தங்​கம், வைரம் மற்​றும் வெள்ளி போன்ற உலோகங்​களும் நன்​கொடை​யாக அளிக்​கப்​படு​கின்​றன. இந்த சொத்​துகளை உச்ச நீதி​மன்ற உத்​தர​வின் பேரில் நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்​வகித்து வரு​கிறது. இந்​நிலை​யில், நன்​கொடை விவரங்​கள் சரி​யாக வெளி​யிடப் ​பட​வில்லை என்​றும் குறிப்​பிட்ட தொகை​யைக்...
குஜ​ராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 73 வயது முதி​யவர். பாரத ஸ்டேட் வங்​கி​யில் (எஸ்​பிஐ) பணி​யாற்றி ஓய்வு பெற்​றவர். கடந்த 2025 நவம்​பரில் ஒரு முதலீட்டு வாய்ப்பைக் கண்​டுள்ளார். அது உண்​மை​யானது என்று நம்பவைப்​ப​தற்​காக, பிரபல தொழில​திபர்​களின் பெயர்​கள் அதில் தவறாகப் பயன்​படுத்​தப்​பட்​டிருந்​தன. இதை நம்பி அவர் அதில் இருந்த இணைப்பை கிளிக் செய்​துள்​ளார். இந்த நடவடிக்கை அவரை ‘வென்ட்ரா ட்ரேட்' என்ற வர்த்தக செயலியை பதி​விறக்​கம் செய்ய வைத்​தது....