தண்ணீர் குறைந்து வரும் முக்கடல் அணை
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 25 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது மைனஸ் 9.5 அடிக்கு நீர்மட்டம் சரிந்துள்ளது. இதனால், புத்தன் அணையில் இருந்து தற்போது நாகர்கோவில் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குமரி – கேரளா எல்லையில் இளம் பெண் கொலை – கணவர் கைது
திருவனந்தபுரம் அருகே பாறசாலை பகுதியில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கணவன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு என்ற ஆசிரியரும், அல்மா என்ற அவரது மனைவியும் 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். குழந்தைகள் இல்லாத நிலையில், அடிக்கடி ஏற்பட்ட தகராறில்...
குமரி மாவட்டத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 6 ரூபாய் வரை உயர்ந்த முட்டை, தற்போது மேலும் 50 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விற்பனை சந்தையில் ஒரு முட்டை 6 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு முட்டை...
பத்மநாபபுரம்: பெண் கொலை ; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள்
முளகுமூடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (50), பணியில் ஒழுங்கீனம் காரணமாக 2014-ல் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 7.2.2021 அன்று மேரி ஜெயா அமுதா என்ற பெண்ணைப் பின்தொடர்ந்து, அவரது கழுத்தில் இருந்த சங்கிலியைப்...
குமரி: குரியன்விளை பத்ரகாளி கோவிலில் தீ மிதி விழா
களியக்காவிளையில் உள்ள குரியன்விளை பத்திரகாளி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று நள்ளிரவு அக்கினி காவடி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சண்டிகா ஹோமம், நவக்கிரக ஹோமம், அக்கினி காவடி, கலை நிகழ்ச்சிகள், நாகரூட்டுபூஜை, சமூக பொங்காலை, பூப்படை போன்ற பல சிறப்பு பூஜைகள் நடந்தன. நள்ளிரவில்...
குமரியில் வாக்குப்பதிவு குறைய காரணம் என்ன?
தமிழகம் முழுவதும் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் அதிகபட்சமாக கரூரில் 92.63% வாக்குகளும், குறைந்தபட்சமாக குமரியில் 75.61% வாக்குகளும் பதிவாகி இருந்தது. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் ஏராளமாக நடைபெற்ற போதிலும் வாக்குப்பதிவு குறைந்துள்ளதற்கு காரணம் வெயில் மற்றும் உறவினர்களின் வீட்டு நிகழ்ச்சிகள்...
குளச்சல்: வாக்காளர்களுக்காக பதுக்கிய 231 மது பாட்டில்கள்
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 21ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை பயன்படுத்தி, குளச்சல் மற்றும் குறும்பனை பகுதிகளில் சிலர் மது பாட்டில்களை பதுக்கி, வாக்காளர்களுக்கு விற்பனை செய்ய முயன்றதாக தகவல் வெளியானது. இதையடுத்து, போலீசார் நடத்திய சோதனையில்...
பேச்சிப்பாறை: படகில் வந்து வாக்களித்த மலைவாழ் மக்கள்
பேச்சிப்பாறை ஊராட்சியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் வசிக்கும் 1000க்கும் மேற்பட்ட பழங்குடியின வாக்காளர்கள், அரசு பழங்குடியின உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு படகுகளில் கட்டணம் செலுத்தி வந்து வாக்களித்து வந்தனர். வாக்காளர்களின் வசதிக்காக இந்த தேர்தலில் 3 இலவச படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த...
மார்த்தாண்டம்: கட்டிடத்தில் இருந்து விழுந்த பெயிண்டர் சாவு
மார்த்தாண்டம் ரயில் நிலையம் அருகே பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஜான் (59) என்பவர் கட்டிடத்திலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி...
கொல்லங்கோடு: பத்ரகாளி அம்மனுக்கு பத்தாம் உதய பொங்கல்
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் நேற்று சித்திரை மாதம் 10ம் நாள் பத்தாம் உதய பொங்கல் விழா நடைபெற்றது. காலை 10:30 மணியளவில் கோவில் தந்திரி ஈஸ்வரன் போற்றி பண்டார அடுப்பில் தீ மூட்டி விழாவை துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் தமிழகம்...













