Google search engine

கிள்ளியூர்: ஒன்றிய அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டிய எம் எல் ஏ

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம்  பழுதடைந்து, மிகவும்  பழமையாகவும், போதிய இட வசதியும் இன்றியும்  காணப்பட்டது.   இதனையடுத்து பழுதடைந்து காணப்பட்ட கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய கட்டிடத்தை அகற்றி விட்டு நவீன முறையில் புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்று சட்டமன்றத்தில் கிள்ளியூர் சட்டமன்ற...

தக்கலை: சிதிலமடைந்த மின்கம்பம்; கயிற்றால் கட்டிய மின்வாரியம்

தக்கலை காமராஜர் பஸ் நிலையம் பின்புறம் ராமன்பரம்பு பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மின்கம்பம் ஒன்றின் அடிப்பகுதி உடைந்து, மேல் பகுதி முழுவதும் சிதிலமடைந்து எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. மேலும் இந்த மின்கம்பம் தொடர்ந்து பழுதடைந்து தன் உறுதித்தன்மையை இழந்து கொண்டே வருவதால், அப்பகுதி...

மார்த்தாண்டம்: போலீசார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மார்த்தாண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.  மார்த்தாண்டம் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையில் நடந்த இந்த விழிப்புணர்வு பேரணியை மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சசி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மார்த்தாண்டம்...

திற்பரப்பு:   அருவி நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திற்பரப்பு அருவி சிறந்த சுற்றுலா தலம் ஆகும். இங்கு விடுமுறை நாட்களில் பயணிகள் நெரிசல் அதிகமாக இருக்கும். அந்த பகுதியில் பார்க்கிங் பகுதி உட்பட சுற்றுவட்டாரம் முழுவதும் கடைகள் நிரம்பி உள்ளன. அருவி நடைபாதை, சாலையோரம் போன்ற பகுதிகளை ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளால் பெரும் நெருக்கடி ஏற்படுவதுடன்...

புதுக்கடை: பைக் விபத்தில் மாணவர் உட்பட 3 பேர் படுகாயம்

புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் அபிஷ் (19). இவர் ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். சம்பவ தினம் இவருக்கு சொந்தமான பைக்கில் இவரது நண்பர்கள் முஞ்சிறை பகுதி லிஜோ (22), பரக்கணி பகுதி விஷ்ணு (20) ஆகியோருடன் தேங்கா பட்டணம் -...

குமரி: மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு.

குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இம்மாதம் 31ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மீனவர்கள் தங்கள் குறைகளை தொடர்பான மனுக்களை ஆட்சியரிடம் நேரில் கொடுக்கலாம்...

நாகர்கோவிலில் நடுரோட்டில் பிரேக் டவுன் ஆன அரசு பஸ்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பாலம் பகுதியில் நேற்று அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து வந்து திடீரென பிரேக் டவுன் ஆனது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.  குறுகிய பாலம் பகுதியில் அரசு பஸ் பிரேக் டவுன் ஆனதால் நாகர்கோவில் திருநெல்வேலி...

ஆசாரிபள்ளத்தில் தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் காந்தி நகரை சேர்ந்தவர் சுந்தர் கணேஷ் (வயது 34), தொழிலாளி. இவரது வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த ஆஸ்வின் (25), அமிர்தானந்த் (23) ஆகியோர் மது குடிப்பது வழக்கம். இதனை சுந்தர் கணேஷ் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம்...

இரணியல்:   இளம்பெண் திடீர் மாயம்

இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் மகள் முருகேஸ்வரி (19). சம்பவ தினம் இவரது பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தனர். வீட்டில் முருகேஸ்வரி மட்டுமே தனியாக இருந்தார். வேலைக்குச் சென்ற பெற்றோர் மாலையில் வீட்டிற்கு வந்தபோது முருகேஸ்வரியை காணவில்லை.  இதைத் தொடர்ந்து அவரை உறவினர்கள் மற்றும் பல்வேறு இடங்களில்...

திங்கள்சந்தை:  கன்னியர் திருச்சபை அருட்சகோதரிகள் கூட்டம்

திங்கள்சந்தை அருகே முன்னாள் மாங்குழி பங்குக்குட்பட்ட பட்டரிவிளையில் பிறந்து அழகப்பபுரத்தில் இயேசுவின் திரு இருதய கன்னியர்கள் சபையை நிறுவி ஏழைப் பெண்களுக்கு அருள் வாழ்வளித்து மறைந்தவர் அருட்சகோதரி ஸ்கொலாஸ்டிக்கா. இவரை புனிதர் நிலைக்கு உயர்த்த ஆயத்தப் பணிகள் நடந்து வருகிறது. இதற்கான கூட்டம் அழகப்பபுரத்தில் நடந்தது. அருட்சகோதரி...