திருவட்டாறு: பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர் நியமனம்
தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குனராக அலுவலகத்திலிருந்து வந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாவது: - தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு அலுவல் சாரா பழங்குடியினர் 14 பேர், அலுவல் சாரா பழங்குடியினர் அல்லாத மூன்று உறுப்பினர்களைக் கொண்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பழங்குடியினர் நலவாரிய ஆய்வுக் கூட்டம் மற்றும்...
அருமனை: சந்தன மரம் வெட்டி கடத்திய ஒருவர் கைது
களியக்காவிளை அருகே உள்ள செங்கவிளை பகுதியை சேர்ந்தவர் கிங்சிலி ஆனந்த் (46). இவர் ராணுவ வீரர். அருமனை அருகே மேல்புறம் பகுதியில் இவருக்கு சொந்தமான இடத்தில் சந்தன மரம் உள்ளது. அதனை யாரோ திருட்டுத்தனமாக வெட்டி சென்றதாக கிங்சிலி ஆனந்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் அவர் பணியிடத்திலிருந்து...
குமரி: உணவு கழிவுகளுடன் வந்த டெம்போ சிறைபிடிப்பு
கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு உணவுக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் டெம்போக்களில் ஏற்றி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பன்றிப் பண்ணைகளுக்கு உணவாக இவை கொண்டு வரப்படுவதாக தெரிகிறது. பன்றிப் பண்ணைகளுக்கு கொண்டு வரப்படும் உணவுக் கழிவுகளை...
இரணியல்: கஞ்சா விற்றதாக 2 பேர் கைது
திங்கள்நகர் அடுத்த கண்டன்விளை விளையாட்டு மைதானம் பகுதியில் கஞ்சா புழக்கம் இருப்பதாக இரணியல் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று (பிப்.8) சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கு நின்ற இரணியல் பகுதியைச் சேர்ந்த ரதீஷ் (20), சர்ஜின் (19) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள்...
மணவாளக்குறிச்சி: மணல் ஆலையை பார்வையிட்ட கல்லூரி மாணவர்கள்
மணவாளக்குறிச்சியில் ஐ ஆர் இ எல் என்ற மத்திய அரசின் மணல் ஆலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியைச் சேர்ந்த 28 மாணவ மாணவிகள் மற்றும் ஆறு பேராசிரியர்கள் சென்று நேரில் பார்வையிட்டனர்.
இவர்களுக்கு கனிமங்களை பிரித்தெடுக்கும் செயல்முறைகளையும் அதன் பயன்பாடுகள்...
இடைக்கோடு: அரசு பள்ளி நூற்றாண்டு விழா ஜோதி பயணம்
மேல்புறம் அருகே இடைக்கோடு அரசு தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக இடைக்கோடு பேரூராட்சி தலைவர் உமாதேவி மற்றும் முன்னாள் பள்ளி மாணவியும், பேராசிரியையுமான பிந்து ஆகியோர் புத்தன் சந்தை சந்திப்பில் விழா ஜோதியை வழங்க வக்கீல் லாரன்ஸ் பெற்றுக் கொண்டார். ஜோதி பயணம் பள்ளி...
நாகர்கோவிலில் பட்ஜெட் நகல் கிழிப்பு போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று (பிப்.6) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பட்ஜெட் நகல் கிழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள், நெசவாளர்கள், ஏழை நடுத்தர மக்களையும் தமிழகத்தையும் புறக்கணித்த மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே புதிய தண்டவாளம்..அதிகாரிகள் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பு நிலையம் அருகே ரயில் வரும் தண்டவாளப் பகுதியில் புதிதாக ஒரு தண்டவாளம் அமைப்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் நேற்று (பிப்.6) ஆய்வு நடத்தினர். தற்போது 2 தண்டவாளங்கள் வந்து கொண்டிருக்கின்ற நிலையில், அதில் ஒரு தண்டவாளத்தை தள்ளி வைத்துவிட்டு நடுவில் புதிதாக...
தக்கலை: பைக்கில் இருந்து விழுந்த வேன் டிரைவர் உயிரிழப்பு
தக்கலை அருகே உள்ள பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் குமார் (37). வேன் டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி ஆஷா தேவி (34) என்ற மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். கடந்த மூன்றாம் தேதி பொருட்கள் வாங்குவதற்காக முகேஷ் குமார் பைக்கில் குமாரகோவில் பகுதிக்கு சென்றார்.
பின்னர்...
முகிலன்விளை: முதல்வர் மருந்தகத்தினை பார்வையிட்ட ஆட்சியர்
குமரி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் முகிலன்விளையில் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்தகம், இன்று கலெக்டர் அழகு மீனா மேற்கொண்டார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்: முதல்வர் மருந்தகங்கள் செயல்படுத்தப்படும் தேர்வில் தொழில் முனைவோர்களுக்கு மருந்தாளுநர்களுக்கு ரூ. 3 இலட்சம் அரசு மானியமாக...













