Google search engine

மணவாளக்குறிச்சி: மணல் ஆலையை பார்வையிட்ட கல்லூரி மாணவர்கள்

மணவாளக்குறிச்சியில் ஐ ஆர் இ எல் என்ற மத்திய அரசின் மணல் ஆலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியைச் சேர்ந்த 28 மாணவ மாணவிகள் மற்றும் ஆறு பேராசிரியர்கள் சென்று நேரில் பார்வையிட்டனர்.  இவர்களுக்கு கனிமங்களை பிரித்தெடுக்கும் செயல்முறைகளையும் அதன் பயன்பாடுகள்...

இடைக்கோடு: அரசு பள்ளி நூற்றாண்டு விழா ஜோதி பயணம்

மேல்புறம் அருகே இடைக்கோடு அரசு தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக இடைக்கோடு பேரூராட்சி தலைவர் உமாதேவி மற்றும் முன்னாள் பள்ளி மாணவியும், பேராசிரியையுமான பிந்து ஆகியோர் புத்தன் சந்தை சந்திப்பில் விழா ஜோதியை வழங்க வக்கீல் லாரன்ஸ் பெற்றுக் கொண்டார். ஜோதி பயணம் பள்ளி...

நாகர்கோவிலில் பட்ஜெட் நகல் கிழிப்பு போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று (பிப்.6) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பட்ஜெட் நகல் கிழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள், நெசவாளர்கள், ஏழை நடுத்தர மக்களையும் தமிழகத்தையும் புறக்கணித்த மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே புதிய தண்டவாளம்..அதிகாரிகள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பு நிலையம் அருகே ரயில் வரும் தண்டவாளப் பகுதியில் புதிதாக ஒரு தண்டவாளம் அமைப்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் நேற்று (பிப்.6) ஆய்வு நடத்தினர். தற்போது 2 தண்டவாளங்கள் வந்து கொண்டிருக்கின்ற நிலையில், அதில் ஒரு தண்டவாளத்தை தள்ளி வைத்துவிட்டு நடுவில் புதிதாக...

தக்கலை:   பைக்கில் இருந்து விழுந்த வேன் டிரைவர் உயிரிழப்பு

தக்கலை அருகே உள்ள பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் குமார் (37). வேன் டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி ஆஷா தேவி (34) என்ற மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். கடந்த மூன்றாம் தேதி பொருட்கள் வாங்குவதற்காக முகேஷ் குமார் பைக்கில் குமாரகோவில் பகுதிக்கு சென்றார்.  பின்னர்...

முகிலன்விளை: முதல்வர் மருந்தகத்தினை பார்வையிட்ட ஆட்சியர்

குமரி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் முகிலன்விளையில் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்தகம், இன்று கலெக்டர் அழகு மீனா மேற்கொண்டார்.  தொடர்ந்து அவர் கூறுகையில்: முதல்வர் மருந்தகங்கள் செயல்படுத்தப்படும் தேர்வில் தொழில் முனைவோர்களுக்கு மருந்தாளுநர்களுக்கு ரூ. 3 இலட்சம் அரசு மானியமாக...

வில்லுக்குறி: விவசாய நிலத்தில் கொட்டப்படும் மனித கழிவுகள்

வில்லுக்குறி பேரூராட்சியின் அலுவலக பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் குளம் ஒன்றுள்ளது. இந்த குளத்தின் அருகேயுள்ள தோப்பில் கடந்த மூன்றாம் தேதி மாலை செப்டிக் டேங்க் கழிவு லாரி ஒன்று வந்து நின்றது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு...

குழித்துறை: சாலை சீரமைப்பு பணி..போக்குவரத்து மாற்றம்

களியக்காவிளையிலிருந்து குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை வழியாக நாகர்கோவில் செல்லும் நெடுஞ்சாலை பல மாதங்களாக குண்டும் குழியுமாக படுமோசமாக காணப்பட்டது. இதனால் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டன. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்க ரூ 14 கோடி 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இந்த...

குமரி: வாலிபர் வீட்டை சேதப்படுத்திய ரவுடி கைது

அருமனை அருகே சிதறால் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் (34). அதே பகுதியைச் சேர்ந்தவர் அகஸ்தின் (35). இவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் உள்ளார்.  நேற்று (பிப்ரவரி 05) அருமனையில் உள்ள தனியார் பாரில் சுனில் மற்றும் அகஸ்தின் மது குடித்துக்...

வள்ளவிளை: மண்ணெண்ணெய் கிட்டங்கியை முற்றுகையிட்ட மீனவர்கள்

கொல்லங்கோடு அருகே வள்ளவிளையில் ஃபைபர் படகுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கும் மண்ணெண்ணெய் கிட்டங்கி உள்ளது. இங்கு வள்ளவிளை, மார்த்தாண்டம், நீரோடி ஆகிய மூன்று மீனவர் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 975 படகுகளுக்கு மானிய விலை மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஃபைபர் படகு வைத்திருப்பவர்கள் நான்கு...