Google search engine

குழித்துறை: பைக் ஓட்டிய சிறுவனின் தாய்க்கு நீதிமன்றம் தண்டனை

கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனை தீவிரப்படுத்தி, விதி மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இருசக்கர வாகனங்கள் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மார்த்தாண்டம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையில் மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

கன்னியாகுமரி: குப்பை பிரித்தெடுக்கும் எந்திரத்தை பார்வையிட்ட எம். எல். ஏ

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி வலம்புரி குப்பை கிடங்கில் குப்பைகளை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை இன்று நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். காந்தி பார்வையிட்டார். உடன் பாஜக மாவட்ட பொருளாளரும் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவருமான முத்துராமன் மற்றும் மாமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

நாகர்கோவிலில் ஆயுதங்களுடன் நடமாடிய முகமூடி கும்பல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மீனாட்சி கார்டன் பகுதியில் நேற்று அதிகாலையில் 5 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து, கையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெரு நாய் குரைக்கும் சத்தம் கேட்டு, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது...

மண்டைக்காடு: கோயில் பகுதிகளில் உணவுத்துறை ஆய்வு

மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர். செந்தில்குமார் உத்தரவுப்படி குளச்சல் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி மற்றும் அகஸ்தீஸ்வரம் உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தி முருகன் ஆகியோர் திருவிழாக் கடைகள் மற்றும்...

இரணியல்: அரசு மருத்துவமனை ஊழியர் விஷம் குடித்து உயிரிழப்பு

இரணியல் அருகே சுங்கான்கடை  பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நல குறைவால் இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உண்டு. இதில் இரண்டாவது மகன் ஸ்பர்ஜன் (24) என்பவர்...

ஆற்றூர்: போலி ஆவணம் தயாரித்த பேரூராட்சி கவுன்சிலர் – வழக்கு

ஆற்றூர் பேரூராட்சி, தேமனூர் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி மகன் சிவன் என்ற செல்வன் (38). இவர் பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலராக செயல்பட்டு வருகிறார். இவர் பேரூராட்சியில் திட்ட குழு உறுப்பினராகவும் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் வீடு கட்டுவதற்காக தனியார்...

மார்த்தாண்டம்: செம்மண் கடத்திய 4 பேர்  மீது வழக்கு

மார்த்தாண்டம் அருகே நல்லூர் பி கிராமம் மலையம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக செம்மண் வெட்டி கடத்தப்படுவதாக மார்த்தாண்டம் போலீசருக்கு ரகசிய தகவல்  கிடைத்தது. இதன் பேரில் போலீசார் நேற்று குறிப்பிட்ட  இடத்தில் சென்று பார்த்தபோது, அங்கு ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் செம்மண் வெட்டி எடுத்து டெம்போவில் கடத்திக் கொண்டு...

கிள்ளியூர்: தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரை சந்தித்த ராஜேஷ் குமார் MLA

நேற்று முன்தினம் சென்னை வருகை தந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக பொறுப்பாளர் திரு. கிரீஷ் சோடங்கர் அவர்களை சென்னை விமான நிலையத்தில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு திரு. ராஜேஷ்குமார் அவர்கள் வரவேற்றதோடு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல்பாடுகள் குறித்து...

விரிவிளை: கோயில் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

நித்திரவிளை அருகே விரிவிளை என்ற இடத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இருந்தது. இந்த கடை மேற்கு கடற்கரை சாலையில் இருந்ததால் நீதிமன்ற உத்தரன்படி கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ( 2017-ல்)  மூடப்பட்டது. இந்த டாஸ்மாக் கடை இருந்த பகுதியிலிருந்து பத்து மீட்டர் தொலைவில் ஜெகதாம்பிகை கோயில்...

நாகர்கோவிலில் இருந்து சாமி தோப்பிற்கு ஊர்வலம்

அய்யா வைகுண்டரின் 193வது அவதார தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து அய்யா வைகுண்டரின் தலைமை பதி அமைந்துள்ள சாமிதோப்புக்கு அய்யா வழி பக்தர்களின் பேரணி மற்றும் வாகன பவனி நடைபெற்றது.  கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான அய்யா...