Google search engine

கொல்லங்கோடு: வெற்றிலை பாக்கு வைத்து வாக்காளர்களுக்கு அழைப்பு

சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் நோக்கில், கொல்லங்கோடு நகராட்சிப் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி பொது பார்வையாளர் மனிஷா சந்தியா தலைமையில், வீட்டு விசேஷங்களுக்கு அழைப்பது போல, தட்டில் வெத்திலை, பாக்கு, பழங்கள், மலர்களுடன் தேர்தல் அழைப்பிதழ் வழங்கும்...

நாகர்கோவில்: பெண் வரைந்த ஓவியத்தில் கையெழுத்திட்ட மோடி

நாகர்கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, இடலாக்குடி பட்டாரியார் நெடுந்தெருவைச் சேர்ந்த ஓவியர் சந்தியாதேவி, தான் வரைந்த பிரதமர் மோடியின் உருவப்படத்தை பரிசாக வழங்கினார். பாதுகாப்பு அதிகாரிகள் அதை மோடியிடம் கொண்டு சேர்த்தனர். படத்தை...

மண்டைக்காடு: கோவிலில் தங்கும் விடுதி காங். வேட்பாளர் உறுதி

குளச்சல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் என்றும், இங்கு பக்தர்களின் தங்குவதற்காக...

குலசேகரம்: பாம்பு கடித்து 3 வயது ஆண் குழந்தை சாவு

குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி ஜவகரின் 3 வயது ஆண் குழந்தை, நேற்று (ஏப்ரல் 15) பக்கத்து தோட்டத்தில் இருந்து வந்த பாம்பால் கடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தை, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக...

குமரியில்: பைக் ஓட்டிய மாணவன்: தந்தை மீது வழக்கு

குளச்சல் போலீசார் நேற்று மாலையில் காமராஜர் பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த மூன்று இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு கல்லூரியில் சேர காத்திருப்பதாக தெரிவித்தனர். இதில், பைக் ஓட்டி வந்த மாணவர்களுக்கு ஓட்டுநர் உரிமம்...

நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ தொடங்கியது

நாகர்கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ தொடங்கியுள்ளது. வேப்பமூடு சந்திப்பு பகுதியில் இருந்து வடசேரி எம்.ஜி.ஆர் சிலை வரை 1.5 கி.மீ. தூரத்திற்கு நடைபெறும் இந்த ரோடு ஷோவில் சாலையின் இருபுறமும் தொண்டர்களும், பொதுமக்களும் பிரதமரை வரவேற்று வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, பொன்...

நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 15) நாகர்கோவிலில் ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர், மாலை 4 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவிலில்...

குளச்சல்: இறந்த நிலையில் திமிங்கலப் புள்ளி சுறா

கொட்டில் பாடு பகுதியில் நேற்று திமிங்கலப் புள்ளி சுறா ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்டது. இது குறித்து உள்ளூர் மக்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு தகவல் அளித்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தபோது, சுறா உயிரிழந்தது தெரியவந்தது. அரசின் பாதுகாப்பு பட்டியலில்...

குமரி: நள்ளிரவில் அனுமதி மறுத்த கனரக வாகனங்கள் – வீடியோ

தக்கலை பகுதியில் 4 நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவர் டாரஸ் லாரி மோதி இறந்ததை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. உத்தரவின் பேரில் கனிம வள அனைத்து கனரக வாகனங்களுக்கும் 4 வழி பாதை முடியும் வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், நேற்று நள்ளிரவு...

நாகர்கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

பிரதமர் நரேந்திர மோடி நாளை நாகர்கோவிலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பரப்புரைக்காக வருகிறார். அவர் வேப்பமூடு முதல் வடசேரி வரை சாலைகளில் மக்கள் மத்தியில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் ஈடுபட உள்ளார். இதனையொட்டி, பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, இன்று மோப்ப நாய் மற்றும்...