மார்த்தாண்டம்: பைக் – கார் மோதல்.. வாலிபர் படுகாயம்
குழித்துறை ஆர்சி தெருவைச் சேர்ந்த ஜீன் தாமஸ் (32) மற்றும் அவரது மனைவி ஷெரினா (30) நேற்று முன்தினம் (ஏப்ரல் 28) பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, கல்லுத்தொட்டி அருகே வேகமாக வந்த கார் மோதி ஜீன் தாமஸ் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள...
புதுக்கடையில்: கல்லூரி மாணவி மாயம் போலீசில் புகார்
புதுக்கடை அருகே மாராயபுரத்தைச் சேர்ந்த 20 வயதான கல்லூரி மாணவி ஜெனிஷா நேற்று காலை வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால், தாயார் ஜெகதா புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்கு...
காளிமலை சித்ரா பௌர்ணமி பொங்கல் விழா!
நாகர்கோவிலில் காளிமலை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில், கடந்த 25-ம் தேதி தொடங்கிய சித்ரா பௌர்ணமி விழா மே 1-ம் தேதி பொங்கல் விழாவில் நிறைவடையும் எனத் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் திரைப்பிரபலங்கள் பங்கேற்கும் இந்த விழாவில் ஒரு லட்சம் பக்தர்கள் வருவார்கள்...
குளச்சல்: மாணவியிடம் அத்துமீறியவர் 2 வருடத்துக்கு பின் கைது
குளச்சல் பகுதியில், 19 வயது பொறியியல் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி ஜஸ்டாலிசன் (43) என்பவரை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பத்தூரில் வைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2024 ஆம் ஆண்டு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து இந்த கொடூர சம்பவம்...
குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடுமையான வெயிலால் நீர்நிலைகள் வறண்டு மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், இன்று மாலையில் குலசேகரம், திருவட்டார், அருமனை, திற்பரப்பு, மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி...
ஆரல்வாய்மொழியில் மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞர் பலி
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் கனரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், டேவிட் சுஜன் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலையில் பலத்த காயமடைந்த மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லங்கோடு: மாமியாரை தாக்கிய மருமகள் மீது வழக்கு
கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ஐடா ராஜபாய் (65) என்பவரின் மூக்கை, அவரது மருமகள் அசியா (27) வாக்குவாதத்தின் போது குத்தி உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஐடா ராஜபாய் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீசார் மருமகள் அசியா மீது...
குமரியில்: ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை; தீவிர ஏற்பாடுகள்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்காக, தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, 26 சுற்றுகளாக வாக்குகளை எண்ண தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்து...
குமரியில்: தேசிய மல்யுத்தப் போட்டிக்கு பள்ளி மாணவன் தேர்வு
மேலபெருவிளை பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் சஞ்ஜெய், சிறுவயதிலிருந்தே மல்யுத்த பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுள்ள இவர், தற்போது 17 வயதுக்குட்பட்டோர் தேசிய போட்டிக்குத் தேர்ச்சி பெற்றுள்ளார். வரும் 27-ஆம் தேதி...
அருமனை: கல்லூரி மாணவி மாயம் – போலீசில் புகார்
சிதறால், அம்பலக்கடை பகுதியைச் சேர்ந்த ராஜி மகள் ஆஷ்மி (18) ஆற்றூர் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பாததால், பெற்றோர் பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை. மாணவியின் தாய் கலா அருமனை காவல் நிலையத்தில்...













