பேச்சிப்பாறை: அணை நீர்மட்டம் 35 அடியை தாண்டியது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று 35 அடியாக இருந்த நிலையில், தற்போது வினாடிக்கு...
நித்திரவிளை: ஆற்றில் வாலிபர் மாயம் ; 2-ம் நாளாக தேடுதல்
நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த 22 வயது அபி, சென்னையில் வேலை பார்த்துவிட்டு தற்போது சொந்த ஊரில் உள்ளார். நேற்று மதியம் நண்பர்களுடன் கணபதியான்கடவு ஆற்றின் கரையில் பேசிக்கொண்டிருந்தபோது, ஆற்றில் குதித்து நீந்த முயன்றார். ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால், அபி நீந்த முடியாமல் அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்ததும் கொல்லங்கோடு...
பேயங்குழி: இரட்டைக்கரை கால்வாய் கலெக்டர் ஆய்வு
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்குப் பேயங்குழி இரட்டைக்கரை கால்வாயினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் இன்று 11-ம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கால்வாயில் தூர்வாரப்பட்டதன் மூலம் நீரோட்டம் சீராக உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர்...
குமரியில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு படையினர் விழிப்புணர்வு
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், இன்று 11-ம் தேதி, பேருந்து நிலையங்களில் சிங்கப் பெண் சிறப்புப் படையினர் பொதுமக்கள், பெண் பயணிகள், மற்றும் மாணவிகளிடம் நேரடியாகப் பேசி, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நடக்கும் குற்றங்களைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குமரி மாவட்ட காவல் துறையின்...
புதுக்கடை: நர்சிங் மாணவி திடீர் மாயம் – புகார்
முஞ்சிறை பகுதியைச் சேர்ந்த சந்தியா மோகன் என்பவரின் மகள் சௌமியா (19), பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு மாணவி, நேற்று முன்தினம் வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தனது மகளை கண்டுபிடித்து தருமாறு...
குமரி: 2 கார்களில் 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் கெ. எம் பாரதி தலைமையில், நேற்று இரவு 9.30 மணிக்கு தேங்காப்பட்டணம் அருகே கேரளா பதிவெண் கொண்ட 2 சொகுசு கார்கள் சோதனை செய்யப்பட்டன. அவற்றில், மீனவர்களுக்கு மானிய விலையில் அரசு வழங்கும் 1800 லிட்டர் மண்ணெண்ணெய் கடத்தப்பட்டது...
திண்டுக்கல் – நாகர்கோவில் இடையே அந்தியோதயா ரயில் ரத்து
இம்மாதம் 21 முதல் 30ஆம் தேதி வரை தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா ரயிலும், 22 முதல் ஜூலை வரை நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரயிலும் திண்டுக்கல்-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. நெல்லை ரயில் நிலைய விரிவாக்க பணிகளுக்காக இந்த ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தக்கலை: கோயிலில் நகை பணம் திருடியவர் கைது
பரைக்கோடு பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் சம்பவ தினம் இரவு மர்ம நபர் புகுந்து சாமி சிலையில் இருந்து சுமார் ஒரு கிராம் தங்க நகை மற்றும் உண்டியல் பணத்தை திருடி சென்றார். இது குறித்து கோவில் துணைத்தலைவர் நெல்லியப்பன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார்...
திருவட்டாறு: பள்ளிவேன் மோதி ஒருவர் பலி
திருவட்டாறு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (63) தனது மனைவி சுசீலாவுடன் (60) சிறுநீரக டயலிசிஸ் சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிக்கு ஆட்டோவில் சென்றார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது, எதிரே வந்த தனியார் பள்ளி வேன் ஆட்டோ மீது மோதியதில் பால்ராஜ், சுசீலா மற்றும் ஆட்டோ...
குழித்துறை: நகராட்சி கவுன்சிலர்கள் போராட்டம் வாபஸ்
குழித்துறை நகராட்சி ஆணையாளர் வெங்கடாஜலபதி கவுன்சிலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரவு பகலாக நடைபெற்றது. நெல்லை மண்டல அதிகாரி ரவீந்திரன், நகராட்சி தலைவர் பொன் ஆசை தம்பியுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி, 10 நாட்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்...













