மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர்ஜெய்ஸ்வால் டெல்லியில் நேற்று கூறியதாவது: வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி முதல் இந்தியா, அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருதரப்பும் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளன. இந்த பேச்சுவார்த்தைகளில் ஒப்பந்தத்தின் இறுதி வடிவத்தை எட்டினோம்.
இருதரப்புக்கும் பலன் அளிக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க...
ஒரு நாட்டின் அதிபர் அதன் அண்டை நாட்டால் சிறைப்பிடிக்கப்படுகிறார். தங்கள் நாட்டின் அதிபர் சிறைபிடிக்கப்பட்டதைத் தெரிந்து கொண்ட மக்கள் அதை கொண்டாட்ட மனநிலையோடு அணுகுகின்றனர். ஒரு சிலர் அச்சத்தோடு வேடிக்கைப் பார்க்கின்றனர், இன்னும் சிலர் புதிய நம்பிக்கையுடன் அதை வரவேற்கின்றனர்.
இந்தக் கலவையான மனநிலை வெனிசுலா நிலவரம் மட்டுமல்ல, அமெரிக்காவில் வாழும் வெனிசுலா நாட்டவர் மற்றும் ஸ்பெயின் போன்ற பிற தேசங்களில் வசிக்கும் வெனிசுலா மக்களிடமும் பிரதிபலிப்பதை ஊடகங்கள், சமூக...
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் விவகாரம்: இந்தியாவுக்கு 500% வரி விதிக்கும் மசோதாவுக்கு ட்ரம்ப் ஒப்புதல்?
admin - 0
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான வரியை 500% உயர்த்த வழிவகுக்கும் மசோதாவுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆதரவு அளித்திருப்பதாக குடியரசு கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, தான் அதிபரானால் உக்ரைன்-ரஷ்யா போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வருவேன் என உறுதி அளித்தார் டொனால்டு ட்ரம்ப். ஆனால், இதுவரை...
‘‘வங்கதேச மாணவர் தலைவர் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு எனக் கூறுவது அடிப்படையற்றது’’ – ஷேக் ஹசீனா
admin - 0
வங்கதேச மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறுவது அடிப்படையற்றது என்று ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் மாணவர் கிளர்ச்சியால் ஏற்பட்ட வன்முறை காரணமாக அந்நாட்டில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர், ‘‘ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலை செய்யப்பட்டது ஒரு சோகமான, கண்டிக்கத்தக்க செயல். வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின்...
புரதத்துக்கு ‘யெஸ்’, சர்க்கரைக்கு ‘நோ’ – அமெரிக்கர்களுக்கு ட்ரம்ப் அரசின் புதிய ‘டயட் சார்ட்’
admin - 0
அமெரிக்க சுகாதாரத் துறைச் செயலர் ராபர்ட் கென்னடி ஜூனியர், அமெரிக்கர்களுக்கான புதிய ஊட்டச்சத்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்கர்கள் தங்கள் உணவில் அதிக புரதச்சத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வேளாண் துறை மற்றும் சுகாதாரம், மக்கள் சேவைகள் துறை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்க மக்களுக்கு இத்தகைய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடுவது வழக்கம்.
அதன்படி, அமெரிக்கர்கள்...
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 500% வரி விதிப்பு – மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்
admin - 0
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500% வரி விதிக்க வகை செய்யும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக நடைமுறைக்கு வரும் பட்சத்தில் ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் நேற்றுமுன்தினம் கூறியதாவது: கச்சா எண்ணெய் விவகாரத்தில்...
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக தீவு தேசமான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்வது அவசியம் என்று கூறியுள்ள அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃப்ரெட்ரிக் நீல்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிரதேசம் கிரீன்லாந்து. அங்கு ரேர் எர்த் மினரல்ஸ் எனப்படும் அரிதான கனிம வளங்கள் அதிகமாக இருக்கின்றன. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் தொட்டே கிரீன்லாந்தை பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி...
வெனிசுலாவில் நடந்த அமெரிக்க ராணுவ நடவடிக்கையின்போது தங்களது நாட்டைச் சேர்ந்த 32 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக கியூபா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்” வெனிசுலா அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் கியூபாவின் ராணுவ மற்றும் காவல் துறை அதிகாரிகள் பல ஆண்டுகளாக அங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் வெனிசுலாவை சுற்றிவளைத்து அமெரிக்கா நடத்திய திடீர் தாக்குதலில் 32 கியூபா அதிகாரிகள் உயிரிழந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏர்போர்ஸ் ஒன்...
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த நாட்டில் அண்மைக்காலமாக இந்துக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த டிச.18-ல் மைமன்சிங் பகுதியை சேர்ந்த தீபு சந்திரா அடித்துக் கொல்லப்பட்டார். டிச. 24-ல் ராஜ்பாரி பகுதியை சேர்ந்த அம்ரித் மண்டல் கொலை செய்யப்பட்டார். கடந்த 29-ல் மைமன்சிங் பகுதியை சேர்ந்த பிஜேந்திர பிஸ்வாஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சூழலில் வங்கதேசத்தின் ஜெஸ்ஸோர் மாவட்டம், ஆருவா கிராமத்தை சேர்ந்த...
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து தலைநகர் வாஷிங்டன் செல்லும்போது, ‘ஏர் போர்ஸ் ஒன்' விமானத்தில் நிருபர்களுக்கு அதிபர் ட்ரம்ப் பேட்டியளித்தார். அப்போது ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அதிபர் ட்ரம்ப் அளித்த பதில் வருமாறு:...
