Google search engine
பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 4 நாள் அரசு முறைப் பயண​மாக நேற்று சீனா சென்​றுள்​ளார். சீனா​வுட​னான உறவை மேம்​படுத்​த​வும் இரு நாடு​களுக்கு இடையே​யான தூதரக உறவு​களின் 75 ஆண்டு விழா​வில் பங்​கேற்​க​வும் ஷெபாஸ் ஷெரீப் சீனா சென்​றுள்​ளார். அவர் தனது 4 நாள் பயணத்​தின் முதல் கட்​ட​மாக நேற்று சீனா​வின் ஹாங்சோ நகரை சென்​றடைந்​தார். அங்கு சீன கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் ஜெஜி​யாங் மாகாண செய​லா​ளரை பிரதமர் ஷெபாஸ் சந்​திக்​கிறார். மேலும்,...
ஈரானுடனான பேச்சுவார்த்தை முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார். மேலும், ஈரானுடனான ஒப்பந்தம் குறித்து இன்று பிற்பகல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, “ஈரான் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இன்று பிற்பகல் சில அறிவிப்புகளை வெளியிடக்கூடும். நமக்கு நீண்டகால பலனளிக்கக் கூடிய ஒரு வரைவுத் திட்டத்தில்...
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று (மே 24) ராணுவ வீரர்கள் பயணித்த ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதை அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் குவெட்டா நகரில் உள்ள சமன் பதக் ரயில் நிலையம் அருகில் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பினால் ரயில், பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்ததாக காவல்...
மத்திய கிழக்கில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ள சூழலில், அதிகாரபூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரான் மீதான கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடன் ஒரு விரிவான உடன்பாடு எட்டப்படும் நிலையை நெருங்கிவிட்டதாக குறிப்பிட்ட சில மணி நேரங்களிலேயே, ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார். “பேச்சுவார்த்தைகள் முறையான...
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளி​கைக்கு அரு​கிலுள்ள பாது​காப்​புச் சாவடி ஒன்​றில் துப்​பாக்கி ஏந்​திய நபர் ஒரு​வர் நேற்று காலை திடீரென சுடத் தொடங்​கினார். உடனடி​யாக மத்​திய பாது​காப்​புப் படை​யினர் களமிறங்கி 21 வயதுள்ள இளைஞரை சுட்​டுக்​கொன்​றனர். இதுகுறித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்​கத்​தில் பதி​விட்​டுள்​ள​தாவது: நமது நாட்​டின் புனித சின்​னத்​தின் (வெள்ளை மாளி​கை) மீது ஒரு​வித வெறி, வன்​முறை உணர்வு கொண்​ட​வரே இந்த துப்பாக்கிச் சூட்​டில்...
“என்னை இந்தியா நூறு சதவீதம் நம்பலாம்” என தொலைபேசி மூலம் நிகழ்த்திய உரையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 250-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்வு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தியாவுக்கு மார்கோ ரூபியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர்...
நீண்டகாலமாக இனப்படுகொலைகளில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்ட நாடு பாகிஸ்தான் என்று ஐநா பாதுகாப்பு சபையில் பேசிய இந்திய பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி விமர்சித்துள்ளார். ஆயுத மோதல்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாத்தல் என்ற பொருளில் ஐநா பாதுகாப்பு சபையில் திறந்த விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் பார்வதனேனி, “நீண்டகாலமாக இனப்படுகொலைகளில் ஈடுபட்ட களங்கப்பட்ட வரலாற்றைக் கொண்ட நாடு பாகிஸ்தான். அப்படிப்பட்ட ஒரு...
ஈ​ரானுக்கு எதி​ரான போரில் போர் விமானங்​கள், டிரோன்​கள் உட்பட 42 அமெரிக்க ராணுவ விமானங்​களுக்கு இழப்பு அல்​லது சேதம் ஏற்​பட்​ட​தாக நாடாளு​மன்ற ஆய்வு சேவை (சிஆர்​எஸ்) அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் தரவு வகைப்​பாடு, தொடர்ந்து நடை​பெறும் போர், இழப்புக்​கான காரணங்​களை உறுதி செய்​தல் உள்​ளிட்ட பல்​வேறு காரணி​களால் இழப்​பு​களின் எண்​ணிக்கை அதி​கரிக்​கும் என்​றும் அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது. ஈரானுக்கு எதி​ரான போரின் செல​வு, ஏற்​கெனவே சுமார் 29 பில்​லியன் டால​ராக உயர்ந்துவிட்டதாக​வும்...
புல்​வாமா தாக்​குதலில் மூளை​யாக செயல்​பட்ட தீவிரவாதி ஹம்சா புர்ஹானை, பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​யில் அடை​யாளம் தெரி​யாத நபர்​கள் சுட்​டுக் கொன்​றனர். ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா மாவட்​டத்​தில் ஜம்​மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலை​யில் கடந்த 2019ம் ஆண்டு சிஆர்​பிஎப் வீரர்​களை ஏற்​றிச் சென்ற வாக​னத்​தின் மீது வெடிபொருட்​களை ஏற்றி வந்த வாக​னம் ஒன்று மோதி பயங்​கர​மாக வெடித்​தது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்​கள் உயி​ரிழந்​தனர். வெடிபொருட்​கள் ஏற்றி வந்த வாக​னத்தை எடுத்​துச்...
அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனி​யத்தை ஒப்படைக்க வேண்டும் என்று ஈரானை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதற்கு ஈரான் மறுத்த​தால் அந்​நாட்​டின் மீது அமெரிக்க - இஸ்​ரேலிய படைகள் தாக்​குதல் நடத்​தின. இந்​நிலை​யில் போரை நிறுத்த பாகிஸ்​தான் செய்த மத்தியஸ்தம் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கப்பல் போக்​கு​வரத்து நடை​பெறாமல் முடங்​கி​யுள்​ளது. இதனால் கச்சா எண்​ணெய் விலை அதி​கரித்து வரு​கிறது. இந்​நிலை​யில் செறிவூட்​டப்​பட்ட யுரேனி​யம் ஈரானில்​தான் இருக்க...