வங்கதேசத்தில் வாழும் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த டிசம்பர் 2ம் தேதி பிரந்தோஷ், உப்தால் சர்க்கார், டிசம்பர் 7ம் தேதி ஜோகேஷ் சந்திர ராய், சுபோர்ணா ராய், டிசம்பர் 12ம் தேதி சாந்தோ சந்திர தாஸ், டிசம்பர் 18ம் தேதி திபு சந்திர தாஸ், டிசம்பர் 24ம் தேதி அம்ரித் மண்டல், டிசம்பர் 29ம் தேதி பஜேந்திர பிஸ்வாஸ், டிசம்பர் 31ம் தேதி கோகன் சந்திர தாஸ்,...
பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பரப்பளவுக்கு இணையாக ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய தீவாக கிரீன்லாந்து உள்ளது.
இது டென்மார்க் நாட்டின் கீழ் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. கிரீன்லாந்தை சுற்றியுள்ள கடல் பகுதிகள் தற்போது ரஷ்யா, சீன கப்பல்களால் நிரம்பியுள்ளதாகவும் அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுடன் கிரீன்லாந்து இணைக்கப்படும் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார். இதற்கு டென்மார்க் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில்...
இங்கிலாந்தின் மேற்கு லண்டனில் உள்ளது ஹவுன்ஸ்லோ பகுதி. இங்கு 20 பள்ளிகள் உள்ளன. பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் இந்தப் பள்ளிகளில் பயிலும் டீன் ஏஜ் பெண்களை குறிவைத்து காதல் வலையில் சிக்க வைக்கின்றனர். பின்னர் இவர்களை தங்கள் குழுவினரின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இந்த இளம் பெண்களை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.
இந்தக் கும்பல் இங்கிலாந்து பெண்களை மட்டும் அல்லாமல் லண்டனில் உள்ள சீக்கிய பெண்களையும்...
ஈரானில் ரேசா பஹ்லவியால் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு தேவையான ஆதரவை பெற முடியுமா என்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரான் நாட்டில் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு எதிராக கடந்த மாதம் மக்கள் போராட்டம் வெடித்தது. அயத்துல்லா அலி காமேனி மற்றும் அதிபர் மசூத் பெசேஸ்கியான் பதவி விலக வேண்டும் என மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த போராட்டத்தை ஒடுக்க ராணுவ வீரர்கள் நடத்திய...
ஈரானில் நிலவும் உள்நாட்டுப் போராட்டங்கள் மற்றும் அங்கு நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர மத்திய வெளியுறவு அமைச்சகம் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
ஈரானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் கையாளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்குப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
முதற்கட்டமாக அங்குள்ள இந்தியர்கள் விமானங்கள்...
வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, கடந்த ஆண்டு தான் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசுக்கான பதக்கத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்போதே அந்தப் பரிசை ட்ரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதிபர் ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் அவர் சந்தித்து பேசினார். அப்போது...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக ஊடகத் தளமான ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் தன்னை வெனிசுலாவின் தற்காலிக அதிபர் மற்றும் அமெரிக்காவின் 45 மற்றும் 47-வது அதிபர் என குறிப்பிட்டு தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்துகிறார் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. வெனிசுலா மீது திடீர் தாக்குதல் நடத்தி அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து அமெரிக்கா...
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“ஈரான் அரசுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் வணிகத்திற்கு 25% வரி செலுத்த வேண்டும். இந்த உத்தரவு இறுதியானது” - இது தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு.
உக்ரைன் - ரஷ்யா இடையே போரா அதற்கு...
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் உட்பட ஒரு லட்சம் பேர் விசாவை ரத்து செய்தது அமெரிக்கா
admin - 0
அமெரிக்காவில் சட்டவிரோத மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் உட்பட 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் விசாக்களை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, சட்டவிரோதமாக நுழைந்தோருக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பிறகு சட்டப்பூர்வமாக விசா எடுத்து வருவோர் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விசா நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் 8 ஆயிரம் மாணவர்கள் உட்பட...
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அந்த நாட்டில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு எதிராக கடந்த டிசம்பர் 28-ம் தேதி தலைநகர் டெஹ்ரானில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. அப்போது டெஹ்ரானின் முக்கிய வணிக சந்தையான கிரான்ட் பஜாரில் கடைகள் அடைக்கப்பட்டன. ஜென் இசட் இளைஞர்கள் (1997 முதல் 2012-க்குள் பிறந்தவர்கள்) தலைநகரில் திரண்டு மதத் தலைவர் காமேனி, அதிபர்...
