Google search engine
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டதாகவும், இனி எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று (மார்ச் 3) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.  தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள ட்ரம்ப், “ஈரானின் வான் பாதுகாப்பு, விமானப்படை, கடற்படை  மற்றும் தலைமைத்துவம் அனைத்தும் இப்போது இல்லாமல் போய்விட்டன. இப்போது அவர்கள் எங்களுடன் பேச விரும்புகிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், காலம் கடந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்....
ஈ​ரானில் பூமிக்கு அடி​யில் சுமார் 1,600 அடி ஆழத்​தில் செயல்​படும் ஏவு​கணை உற்​பத்தி ஆலைகளை குறி​ வைத்து அமெரிக்க விமானப் படை​யின் அதிநவீன பி-2 போர் விமானங்​கள் தீவிர தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. ஈரானின் பல்​வேறு பகு​தி​களில் பூமிக்கு அடி​யில் சுமார் 1,600 அடி ஆழத்​தில் ஏவு​கணை உற்​பத்தி ஆலைகள் செயல்​படு​கின்​றன. இவை ஏவு​கணை நகரங்​கள் என்று அழைக்​கப்​படு​கின்​றன. அமெரிக்​கா, இஸ்​ரேல் உளவுத் துறை​ தகவல்​களின்​படி ஈரான் தலைநகர் டெஹ்​ரான், கெர்​மன்...
கத்​தார் தலைநகர் தோஹா​வில் அமெரிக்​கா​வின் மிகப்​பெரிய விமானப் படைத் தளம் உள்​ளது. அங்கு 10,000-க்​கும் மேற்​பட்ட அமெரிக்க வீரர்​கள் முகாமிட்டு உள்​ளனர். நூற்​றுக்​கும் மேற்​பட்ட போர் விமானங்​கள் நிலைநிறுத்​தப்​பட்டு உள்​ளன. தோஹா விமானப் படைத்​தளத்​தில் இருந்து புறப்​படும் அமெரிக்க போர் விமானங்​கள், ஈரான் மீது குண்​டுமழை பொழிந்து வரு​கின்​றன. இந்த சூழலில் தோஹா விமானப் படைத் தளத்​தில் நிறு​வப்​பட்​டிருந்த அமெரிக்​கா​வின் ஏஎன்​/எப்​பிஎஸ்​-132 என்ற அதிநவீன ரேடாரை ஏவு​கணை தாக்​குதல் மூலம் அழித்​து​விட்​ட​தாக...
அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேலிய படைகள் நடத்​திய தாக்​குதலில் கொல்​லப்​பட்ட பள்​ளி மாணவிகள் உட்பட 165 பேருக்​காக வரிசை​யாகத் தோண்​டப்​பட்​டுள்ள கல்லறைகளின் புகைப்​படத்தை ஈரான் அரசு வெளி​யிட்​டுள்​ளது. ஈரானின் மினாப் நகரில் உள்ள மிகப்பெரிய ராணுவ தளத்தை குறிவைத்து, கடந்த 28-ம் தேதி இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் ராணுவ தளம் அருகே உள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் உட்பட 165 பேர் உயிரிழந்தனர். ஈரான் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் அப்​பாஸ்...
ஈரானில் அரசுக்கு எதி​ராக கருத்து தெரிவித்​த​தால் கைது செய்யப்​பட்ட ஒரு இளம்பெண் (மோர்​டிசியா ஆடம்​ஸ்) சித்ரவதைக்கு ஆளாகி, கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். க​ன​டா​வில் வசிக்​கும் அந்த இளம்​பெண், கடந்த ஜனவரியில் ஈரான் தலைவர் காமேனிக்கு எதி​ராக கனடாவில் நடந்த பேரணியில் பங்​கேற்ற வீடியோவை நேற்று எக்ஸ் தளத்​தில் பகிர்ந்​துள்​ளார். அத்துடன், ‘‘உன் (காமேனி) கல்​லறை​யின் மேல் நாங்​கள் நடன​மாடு​வோம் என்று நான் சொன்​னேன் அல்​ல​வா?’’ என எக்ஸ் தளத்​தில் பதி​விட்​டு உள்​ளார். மற்​றொரு...
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் புறநகர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதை அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, லெபனான் புரட்சி படையான ஹிஸ்புல்லா, ஈரான் உச்ச தலைவர் கமேனி மரணத்தை அடுத்து இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர்...
ஈ​ரானில் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி கொல்​லப்​பட்​ட​தால், அடுத்த தலை​வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலில் ஈரானின் அதி​கபட்ச அதி​காரம் வைத்​திருந்த மதத் தலை​வ​ர் காமேனி கொல்லப்பட்டார். இதனால் அடுத்த தலைவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. தனக்​குப் பின்​னர் இவர்​தான் வாரிசு என்று காமேனி பகிரங்​க​மாக யாரை​யும் அறிவிக்​க​வில்​லை. ஆனால், அவருடைய 2-வது மகன் மோஜ்தபா காமேனி​தான் அடுத்த தலை​வ​ராக வரு​வார் என்று கூறப்​படு​கிறது....
அமெரிக்க மற்​றும் இஸ்​ரேல் தாக்​குதலில் உயி​ரிழந்த ஈரான் தலை​வர் காமேனி கடந்த 1980 மற்​றும் 1981-ம் ஆண்டுகளில் காஷ்மீர் மற்​றும் கர்​நாட​கா​வில் பயணம் செய்துள்ளார். ஈரான் உச்ச தலை​வ​ராவதற்கு முன்பே அயத்​துல்லா அலிகாமேனி கடந்த 1980-ம் ஆண்டு காஷ்மீர் வந்​துள்​ளார். அப்​போது காஷ்மீரில் சன்னி மற்​றும் ஷியா முஸ்​லிம்​கள் இடையே பகைமை நிலவி வந்​தது. அப்​போது காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு வந்த அயத்துல்லா அலி காமேனி, சன்னி மசூ​தி​யில் நடை​பெற்ற வெள்ளிக்...
‘ரோரிங் லயன்’ என்ற பெயரில் இஸ்​ரேலும், ‘எபிக் ஃப்​யூரி’ என்ற பெயரில் அமெரிக்கா​வும் ஒன்​றிணைந்து நடத்திய தாக்​குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி, ஈரான் தேசிய பாது​காப்பு கவுன்​சில் முன்​னாள் செய​லா​ளர் அலி சம்​கானி, ஈரான் ராணுவ கமாண்​டர் முகமது பக்​போர் ஆகியோர் இறந்​தனர். இந்த தாக்​குதலில் அயத்​துல்லா அலி காமேனி​யின் மகள், மரு​மகன், பேத்தி ஆகியோ​ரும் இறந்​தனர். இதே​போல் ஈரானின் இஸ்ஃ​பாகன் மற்​றும் சிராஸ் ஆகிய முக்கிய பகு​தி​களி​லும்...
பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான் இரு நாடு​களும் எல்​லை​யில் மாறி மாறி தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. இதனால் ஆப்​கானிஸ்​தான் மீது பகிரங்க போர் என்று பாகிஸ்​தான் அமைச்​சர் அறி​வித்​துள்​ளார். கடந்த 2021-ம் ஆண்டு ஆப்​கானிஸ்​தான் அரசை தலி​பான்​கள் கைப்​பற்​றினர். அப்​போது முதலே பாகிஸ்​தான் - ஆப்​கானிஸ்​தான் இடையே மோதல் நடை​பெறுகிறது. பாகிஸ்​தானில் நடை​பெற்ற சில தீவிர​வாத தாக்​குதல்​களுக்கு தலி​பான்​கள்​தான் காரணம் என்று பாகிஸ்​தான் குற்​றம் சாட்​டியது. அதற்கு பதிலடியாக ஆப்​கன் எல்​லை​யில் பாகிஸ்​தான்...