ஜப்பான் தேர்தலில் லிபரல் ஜனநாயகக் கட்சி அபார வெற்றி: வாழ்த்து மழையில் பிரதமர் சனே டகாய்ச்சி!
admin - 0
ஜப்பான் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அந்நாட்டு பிரதமர் சனே டகாய்ச்சி தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது. இந்நிலையில், சனே டகாய்ச்சிக்கு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜப்பான் நாடாளுமன்ற கீழவை பிரதிநிதிகள் சபையில் உள்ள 465 இடங்களுக்கான இந்த தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 316 இடங்களில் பிரதமர் சனே டகாய்ச்சி தலைமையிலான லிபரல் ஜனநாயகக்...
விண்வெளியில் மனிதர்கள் குடியேறுவது குறித்து பல்வேறு முறை எலான் மஸ்க் பேசியது உண்டு. அதற்காக அவர் டார்கெட் செய்தது செவ்வாய் கிரகத்தைதான். இந்த சூழலில் இப்போது செவ்வாயில் இருந்து அந்த திட்டத்தை நிலவுக்கு மஸ்க் மாற்றி உள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார். “ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவில் நகரம் அமைக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறது. இதை 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில்...
2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு டொனால்டு ட்ரம்பைக் கொல்ல சதி செய்த குற்றச்சாட்டில் ரியான் ரூத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புளோரிடாவில் உள்ள ஒரு கோல்ஃப் மைதானத்தில் 2024ஆம் ஆண்டு டொனால்டு ட்ரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு துப்பாக்கியுடன் ரியான் ரூத் (59) புதர்களில் கிட்டத்தட்ட 10 மணி நேரம் மறைந்திருந்ததாகவும், பின்னர் உளவுத்துறையினரால் அவர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்...
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்தவரும் நிதி ஆலோசகருமான ஜெப்ரி எப்ஸ்டீன் என்ற கோடீஸ்வரர், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் திரட்டப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் 2019-ல் தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட வெளிப்படைத்தன்மை சட்டத்தின் கீழ் ஜெப்ரி...
அமெரிக்காவுடன் இந்தியா அண்மையில் மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தம் பாகிஸ்தானில் கடும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுடன் பல மாதங்களாக பாகிஸ்தான் நெருக்கம் காட்டியும், அதனால் எந்தப் பயனும் இல்லை. மரியாதையை விலைக்கு வாங்க முடியாது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் மேற்கொண்ட தீவிர முயற்சிகளுக்குப் பலனாக, பாகிஸ்தானுக்கு 19 சதவீத வரியை அமெரிக்கா நிர்ணயித்தது....
பார்மசி பெயரில் போதை பொருட்கள் விற்கும் சர்வதேச கும்பலின் 200+ இணையதளங்கள் அமெரிக்காவில் முடக்கம்
admin - 0
இந்தியாவை தளமாகக் கொண்டு ஆன்லைனில் பார்மசி என்ற பெயரில் போதை பொருட்கள் விற்கும் சர்வதேச கிரிமினல் அமைப்புடன் தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட வலைகளங்களை அமெரிக்கா முடக்கி உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: இந்தியாவை தளமாகக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட இணையதளங்களில் மருந்து மற்றும் போதைப் பொருட்கள் விற்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து மருந்துக் கட்டுப்பாட்டு துறை கள ஆய்வாளர்கள்,...
டெல்லியில் வரும் 19, 20 ஆகிய தேதிகளில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சி மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த உச்சி மாநாட்டுக்கு வருவதை ஐ.நா. சபை தலைவர் அன்டோனியா குட்டேரஸும் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து செய்தி நிறுவனத்துக்கு நேற்று அவர் அளித்த பேட்டி: செயற்கை நுண்ணறிவுத்துறை என்பது மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாகப் பார்க்கப்படுகிறது. இதனால் பல நன்மைகளும்,...
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளிலும் உள்ள வர்த்தக வாய்ப்புகளை, பரஸ்பரம் சிறப்பாக பயன்படுத்திக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்...
நைஜீரியாவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள குவாரா மாநிலத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை மாலை 6:00 மணியளவில் (1700 GMT) துப்பாக்கி ஏந்திய நபர்கள் குவாராவில் உள்ள வோரோ கிராமத்துக்குள் நுழைந்து, கடைகளையும் மன்னரின் அரண்மனையையும் தீ வைத்துக் கொளுத்தினர்.
மேலும், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று...
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு கடந்த ஓர் ஆண்டுகாலமாக சுமுகமானதாக அமையவில்லை. வரி விதிப்பு, வர்த்தக உறவு என பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளன. இந்த சூழலில் திங்கட்கிழமை (பிப்.2) அன்று இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி உடன் ட்ரம்ப் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டிருந்தார்....