Google search engine
மூன்றாம் உலகப் போரை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக உக்ரைன் அதிபர் வுலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்.24-ம் தேதி உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா தொடங்கியது. இன்றுடன் போர் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதை முன்னிட்டு பிபிசி செய்தி நிறுவனத்துக்கு தான் அளித்த பேட்டியின் சுருக்கத்தை, வுலோடிமிர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: ‘வான் பாதுகாப்பு என்பது...
வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் நாட்டின் அரசியலமைப்பைப் பின்பற்றவில்லை என்றும், தனக்கு எதிராக சதிச் செயலில் ஈடுபட்டதாகவும் அந்நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதின் குற்றம் சாட்டியுள்ளார். வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி வெற்றி பெற்று தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், முன்னாள் ஆட்சியாளரான முகமது யூனுஸ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை அதிபர் முகமது ஷஹாபுதின் முன்வைத்துள்ளார். அதிபர் மாளிகையில், வங்காள நாளிதழான...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஆண்டு ஏப்​ரலில் சுமார் 100-க்​கும் மேற்​பட்ட நாடு​களுக்கு புதிய வரி விகிதங்கள அறி​வித்​தார். இதை எதிர்த்து அமெரிக்க குறு, சிறு நிறு​வனங்​கள் மற்​றும் 12 மாகாண அரசுகள் கீழமை நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தன. இரு கீழமை நீதி​மன்​றங்​களில் அதிபர் ட்ரம்​பின் புதிய வரி விகிதங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. இதை எதிர்த்து அமெரிக்க அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தது. இந்த வழக்​கில் கடந்த...
உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் இன்று (பிப்.22) அதிகாலை விடியல் பொழுதுக்கு முன்பாக பாலிஸ்டிக் ஏவுகணை உள்ளிட்டவற்றை கொண்டு ரஷ்யா மிக கடுமையாக தாக்குதல் மேற்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. முன்னதாக, இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளனர். சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றின் செய்தியாளர்கள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் கீவ் நகரில் வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறும் சப்தத்தை கேட்டதாக தெரிவித்தனர். அதற்கு முன்பாக வான்வழி...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் புதிய வரி விதிப்​பால் இது​வரை ரூ.18 லட்​சம் கோடி வரி வசூல் செய்​யப்​பட்டு இருக்​கிறது. இந்த தொகையை அமெரிக்க அரசு திருப்பி வழங்​காது என்று அதிபர் ட்ரம்ப் திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துள்​ளார். எனினும், ஜனநாயக கட்சி ஆட்சி நடத்​தும் மாகாணங்​களின் அரசுகள், கூடு​தலாக வசூலிக்​கப்​பட்ட தொகையை திரும்ப வழங்க வேண்​டும் என்று கோரிக்கை விடுத்​துள்​ளன. இதுதொடர்​பாக அதிபர் ட்ரம்ப்​புக்கு இலி​னாய்ஸ் மாகாண ஆளுநர் பிரிட்​ஸ்​கர் அனுப்​பி​யுள்ள கடிதத்​தில்...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொள்​கைகள் மீது 60 சதவீதம் பேர் அதிருப்தி கொண்​டிருப்​ப​தாக ஓர் ஆய்​வில் தெரியவந்​துள்​ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலை​மையி​லான அரசின் கொள்கைகள் குறித்து ஏபிசி நியூஸ், வாஷிங்​டன் போஸ்ட் ஆகியவை இப்​சோஸ் நிறு​வனத்​தின் அறி​வுத்​திறன் குழுவினருடன் இணைந்து ஒரு ஆய்வை நடத்​தி​யது. அமெரிக்காவின் பண வீக்​கம், மற்ற நாடு​களின் பொருட்​கள் மீதான இறக்​குமதி வரி, வெளி​நாட்டு உறவு​கள் மேலாண்மை ஆகிய பிரிவு​களில் இந்த கருத்​துக்​கணிப்பு அமெரிக்க மக்​களிடம்...
ஆப்​கானிஸ்​தான் எல்​லைப் பகு​தி​யில் பாகிஸ்​தான் விமானப்​படை​யினர் வான்​வழித் தாக்​குதல் நடத்​தி​ய​தில் 18 பேர் உயி​ரிழந்​தனர். பாகிஸ்​தான் மற்​றும் ஆப்​கானிஸ்​தான் இடையே​யான எல்​லைப்​புற மோதல்​கள் கடந்த சில மாதங்​களாக அதி​கரித்து வரு​கின்​றன. தலி​பான்​கள் தலை​மையி​லான ஆப்​கானிஸ்​தானின் நங்​கர்​ஹார் மற்​றும் பாக்​டிகா மாகாணங்​களில் அடிக்​கடி பாகிஸ்​தான் விமானப்​படை வான்​வழித் தாக்​குதலை நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில் நேற்று திடீரென நங்​கர்​ஹார் பகு​தி​யில் பாகிஸ்தான் ராணுவத்​தினர் வான்​வழித் தாக்​குதலை நடத்​தினர். இந்த பயங்​கரத் தாக்​குதலில் பெண்​கள், குழந்​தைகள்...
மத்திய கிழக்கில் மிகப் பெரிய அளவில் அமெரிக்கா படைகளை குவித்து வருவதாகவும், ஈரான் மீது போர் தொடுக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஈரானின் பொருளாதார வீழ்ச்சி, மதக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக, இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. மக்களின் போராட்டத்தை...
“200 சதவீதம் வரி விதிக்கப்படும் எனச் சொல்லி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தினேன்” என்று வாஷிங்டனில் நடைபெற்ற அமைதி வாரிய அமைப்பின் (போர்டு ஆஃப் பீஸ்) நிகழ்வில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். “இந்த நிகழ்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் பேசினேன். இதை கேட்டு அவர் உற்சாகம் அடைந்தார். அவர் இந்த நிகழ்வை காணொலியில் பார்த்திருப்பார். (இந்த அமைப்பில் இணையாத இந்தியா,...
​பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்க்வா மாகாணத்​தில் நிகழ்ந்த தீவிர​வாத தாக்​குதல் சம்​பவங்​களில் 14 பாது​காப்​புப் படை வீரர்​கள் உட்பட 17 பேர் உயி​ரிழந்​தனர். பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்க்வா மாகாணம், பஜாவுர் மாவட்​டத்​தில், தீவிர​வா​தி​கள் நேற்று முன்​தினம் மாலை வெடிபொருட்​கள் நிரப்​பப்​பட்ட ஒரு வாக​னத்தை ஒரு சோதனைச் சாவடிக்கு அரு​கிலுள்ள ஒரு கல்​லூரி​யின் சுவரில் மோதி தாக்​குதல் நடத்​தினர். இதில் 11 பாது​காப்​புப் படை வீரர்​கள் மற்​றும் ஒரு சிறுமி கொல்​லப்​பட்​ட​தாக ராணுவம்...