“ஒரு வெளிநாட்டு தலைவர் கொல்லப்பட்டது குறித்து, இறையாண்மை அடிப்படையிலும், சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலும் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அப்படி ஒரு தெளிவான நிலைப்பாடு இந்திய அரசிடம் இருந்து வெளிப்படவில்லை. இது நமது வெளிநாட்டுக் கொள்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.
இந்தச் சூழலில் மவுனம் என்பது நடுநிலையல்ல. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, கொள்கை அளவிலான எதிர்ப்பை வெளிப்படுத்தாவிட்டால், சர்வதேச நெறிமுறைகள் சீரழிவதை...
இந்திய பெருங்கடலில் இலங்கையின் கடற்பரப்பில் ஈரான் போர் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கியதில் நீரில் மூழ்கியது. இதில் 83 பேர் உயிரிழந்ததாக தகவல். மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் தற்போது இந்திய துணைக்கண்டத்துக்கு அருகே அரங்கேறி உள்ளது.
இந்த தாக்குதலை அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஹெக்ஸத் உறுதி செய்துள்ளார். புதன்கிழமை அன்று சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழகி கப்பல் ஏவிய ‘டார்பிடோ’...
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிப்பு: ஈரானின் நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க் கப்பல்கள் அழிப்பு
admin - 0
ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் ‘எபிக் ஃபியூரி’ ஆபரேஷனில் ஈரான் கடற்படையில் இருந்த ஒரு நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க் கப்பல்களை அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் மறுத்ததால், அதன் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்தன. பதில் தாக்குதலில் இறங்கிய ஈரான், அமெரிக்க ராணுவ முகாம்கள் இருக்கும் வளைகுடா நாடுகள் மீது...
ஈரான் போர்க் கப்பலை மூழ்கடித்தது அமெரிக்க நீர்மூழ்கி: 87 வீரர்கள் உயிரிழப்பு – மீட்பு பணியில் இலங்கை
admin - 0
இலங்கை அருகே இந்தியப் பெருங்கடல் பகுதியில் ‘ஐஆர்ஐஎஸ் டேனா’ என்ற ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தியது. அதில் இருந்த 87 வீரர்கள் உயிரிழந்தனர். அவசர அழைப்பு விடுக்கப்பட்டதால் மீட்பு பணியில் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை ஈடுபட்டுள்ளது.
இந்தக் கப்பல் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் கடந்த மாதம் நடந்த மிலன் 2026 கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அணு ஆயுத தடை ஒப்பந்தத்துக்கு மறுத்த ஈரான்...
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து கடந்த செவ்வாய்க் கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது. அப்போது குவைத் வான்பரப்பில் 3 அமெரிக்க எப்-15 இ ஸ்டிரைக் ஈகிள்ஸ் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இவை குவைத்தின் நிலத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. ‘நட்பு நாடுகளுக்கு இடையிலான சம்பவம்' என கருதப்படும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க தயாரிப்பான எப்/ஏ-18 ஹார்னெட்...
ஓமன் கடல் பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
ஓமன் கடற்பகுதியில், தலைநகர் மஸ்கட்டில் இருந்து 52 கடல்மைல் தொலைவில் மார்ஷல் தீவுகள் கொடியுடன் சென்று கொண்டிருந்த எம்கேடி வியோம் என்ற சரக்கு கப்பல் மீது ட்ரோன் படகு மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் சரக்கு கப்பலின் இன்ஜின் அறையில் தீப்பற்றியதில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். இதை ஓமனில் உள்ள இந்திய தூதரகம் உறுதி...
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டதாகவும், இனி எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று (மார்ச் 3) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள ட்ரம்ப், “ஈரானின் வான் பாதுகாப்பு, விமானப்படை, கடற்படை மற்றும் தலைமைத்துவம் அனைத்தும் இப்போது இல்லாமல் போய்விட்டன. இப்போது அவர்கள் எங்களுடன் பேச விரும்புகிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், காலம் கடந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்....
ஈரானில் பூமிக்கு அடியில் சுமார் 1,600 அடி ஆழத்தில் செயல்படும் ஏவுகணை உற்பத்தி ஆலைகளை குறி வைத்து அமெரிக்க விமானப் படையின் அதிநவீன பி-2 போர் விமானங்கள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஈரானின் பல்வேறு பகுதிகளில் பூமிக்கு அடியில் சுமார் 1,600 அடி ஆழத்தில் ஏவுகணை உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன. இவை ஏவுகணை நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அமெரிக்கா, இஸ்ரேல் உளவுத் துறை தகவல்களின்படி ஈரான் தலைநகர் டெஹ்ரான், கெர்மன்...
கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப் படைத் தளம் உள்ளது. அங்கு 10,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் முகாமிட்டு உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.
தோஹா விமானப் படைத்தளத்தில் இருந்து புறப்படும் அமெரிக்க போர் விமானங்கள், ஈரான் மீது குண்டுமழை பொழிந்து வருகின்றன.
இந்த சூழலில் தோஹா விமானப் படைத் தளத்தில் நிறுவப்பட்டிருந்த அமெரிக்காவின் ஏஎன்/எப்பிஎஸ்-132 என்ற அதிநவீன ரேடாரை ஏவுகணை தாக்குதல் மூலம் அழித்துவிட்டதாக...
அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் கொல்லப்பட்ட பள்ளி மாணவிகள் உட்பட 165 பேருக்கு ஒரே இடத்தில் கல்லறை
admin - 0
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பள்ளி மாணவிகள் உட்பட 165 பேருக்காக வரிசையாகத் தோண்டப்பட்டுள்ள கல்லறைகளின் புகைப்படத்தை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.
ஈரானின் மினாப் நகரில் உள்ள மிகப்பெரிய ராணுவ தளத்தை குறிவைத்து, கடந்த 28-ம் தேதி இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் ராணுவ தளம் அருகே உள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் உட்பட 165 பேர் உயிரிழந்தனர்.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ்...










