Google search engine
ஈரானுடனான உறவில் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க கடற்படையின் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க் கப்பல் மத்திய கிழக்கு கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளது. இது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரான் மீது வான்வழித் தாக்குதலுக்கு உத்தரவிடக்கூடும் என்ற யூகங்களை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான உறவில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில், இந்தோ-பசிபிக் பகுதியில் இருந்து அனுப்பப்பட்ட அமெரிக்க கடற்படையின் ஆபிரகாம்...
வங்​கதேசத்​தில் கடந்த 2024 ஜூலை​யில் இடஒதுக்​கீட்​டில் திருத்​தம் கோரி மாணவர்​கள் தொடங்​கிய போராட்​டம் மிகப்​பெரிய கிளர்ச்​சி​யாக மாறியது. அப்​போது பிரதம​ராக இருந்த ஷேக் ஹசீ​னா​வின் அரசு கடும் ஒடுக்​கு​முறை​யில் ஈடு​பட்​டது. இதில் பலர் கொல்​லப்​பட்​டனர். அப்​போது நிகழ்ந்த மனித குலத்​துக்கு எதி​ரான குற்​றங்​கள் குறித்து டாக்​கா​வில் உள்ள சர்​வ​தேச குற்​ற​வியல் தீர்ப்​பா​யம் விசா​ரித்து வரு​கிறது. இதில் இந்​தி​யா​வில் தஞ்​சம் அடைந்​துள்ள முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா, முன்​னாள் உள்​துறை அமைச்​சர்...
சர்​வ​தேச அமைதி மற்​றும் பாது​காப்பை வழங்​கும் ஓர் அமைப்​பாக ஐ.நா.வை உலக மக்கள் கருது​வ​தில்​லை என்று இந்​தி​யா​வின் நிரந்தர தூதர் பர்​வதனேனி ஹரீஷ் விமர்​சித்​துள்​ளார். ஐ.நா.​வில் இருந்து வில​கு​வ​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த வாரம் அறி​வித்​தார். அத்​துடன், ஐ.நா.வுக்கு மாற்​றாக, ‘போர்டு ஆப் பீஸ்’ என்ற அமைப்பை தொடங்​கி​னார். இதில் உறுப்​பின​ராக இந்​தியா உட்பட உலக நாடு​களுக்கு அழைப்பு விடுத்​தார். அதிபர் ட்ரம்ப்​பின் தலை​மை​யில் இயங்​கும் இந்த அமைப்​பில்,...
து​பாயைச் சேர்ந்த தொழில​திபர் கலாப் அல் ஹப்​தூர், ஊழியர்​களுக்கு திருமண பரிசாக ரூ.12.5 லட்​சம் வழங்​கப்​படும் என்று அறி​வித்​துள்​ளார். ஐக்​கிய அரபு அமீரகத்​தைச் சேர்ந்த அல் ஹப்​தூர் குழு​மத்​தின் தலை​வர் கலாப் அல் ஹப்​தூர் எக்ஸ் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: திரு​மணம் செய்​வதும், ஒரு குடும்​பத்தை உரு​வாக்​கு​வதும் வெறும் தனிப்​பட்ட விஷ​யம் மட்​டுமல்ல. அவை சமூக மற்​றும் தேசிய பொறுப்​பு​கள். ஏனெனில் குடும்​பங்​களின் மூலமே தேசங்​கள் கட்​டி​யெழுப்​பப்​படு​கின்றன...
தென்​கொரியப் பொருட்​களுக்​கான இறக்​குமதி வரியை 25% ஆக உயர்த்​து​வ​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “அமெரிக்​கா​வின் வர்த்தக ஒப்​பந்​தங்​கள் மிக​வும் முக்​கிய​மானவை. ஒப்​புக்​கொண்​டபடி நாங்​கள் வரியைக் குறைத்​துள்​ளோம். அதே வேகத்தை எங்​கள் வர்த்​தகக் கூட்​டாளி​களிட​மிருந்​தும் எதிர்​பார்க்​கிறோம்" என தெரி​வித்​துள்​ளார். அமெரிக்​கா​வின் இந்த நடவடிக்​கையை அடுத்து தென்​கொரி​யா​விலிருந்து இறக்​குமதி செய்​யப்​படும் கார்​கள், மரக் கட்​டைகள் (Lumber) மற்​றும்...
அமெரிக்காவின் மினியாபொலிஸ் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 37 வயதான அலெக்ஸ் ஜெஃப்ரி பிரெட்டியை குடியேற்ற அதிகாரிகள் 6 பேர் சூழ்ந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற புதிய வீடியோ வெளியாகி உள்ளது. இது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மினியாபொலிஸ் பகுதியில் கடந்த 7-ம் தேதி அன்று அமெரிக்க குடியேற்ற அதிகாரி ஒருவர், ரெனி குட் என்ற பெண்மணியை சுட்டுக்கொன்றனர். இது தேசிய அளவில் மக்களை கொதிப்படைய செய்தது....
சீனா​வில் ராணுவ ஜெனரல் ஜாங் யூசியா மற்​றும் லியு ஜென்லி ஆகியோர் கட்சி தலை​மைக்கு (ஜி ஜின்​பிங்) மிரட்​டல் விடுக்​கும் வகை​யில்செயல்​படு​வ​தாகவும், கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் ஒழுக்​கங்​கள், சட்​டங்​களை மீறிய​தாகவும் குற்​றச்​சாட்டு எழுந்​தது. இரு​வரை​யும் பிடித்து விசா​ரணை நடத்​தப்​படு​கிறது என்று சீன ராணுவத்​தின் பிஎல்ஏ டெய்லி பத்​திரிகை நேற்று தகவல் வெளி​யிட்​டுள்​ளது. இவர்​களில் ஜாங் யூசியா பொலிட்​பீரோ உறுப்​பின​ராக​வும், ராணுவ துணைத் தலை​வ​ராக​வும் இருக்​கிறார். அதே​போல் லியு ஜென்லி கூட்​டு பணி​யாளர்...
வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தால் பிரதமர் ஷேக் ஹசீ​னா பதவி விலகி இந்​தி​யா​வில் தஞ்​சமடைந்​தார். இதையடுத்து முகமது யூனுஸ் தலை​மையி​லான இடைக்​கால அரசு பொறுப்​பேற்​றது. அதன் பிறகு இந்​துக்​கள் உள்​ளிட்ட சிறு​பான்​மை​யினர் மீதான தாக்​குதல்​கள் அதி​கரித்​துள்​ளது. பிப்​ர​வரி 12-ம் தேதி வங்​கதேசத்​தில் பொதுத்​தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், கடந்த சில மாதங்​களாக இந்​துக்​கள் அடுத்​தடுத்து படு​கொலை செய்​யப்​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில், வங்​கதேசத்​தின் நரசிங்​கடி நகரில் நேற்று முன்​தினம் இரவு சஞ்​சல் பவுமிக்...
மெக்சிகோவில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் நேற்று (ஜன.25) ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர், 12 பேர் காயமடைந்தனர். வன்முறை சம்பவங்கள் அதிகளவில் நடக்கும் குவானாஜுவாடோ மாகாணத்தில் அமைந்திருக்கும் மைதானத்தில், உள்ளூர் கால்பந்துப் போட்டி முடிந்த சிறிது நேரத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. இதுகுறித்து பேசிய சலமன்கா மேயர் சீசர் பிரிட்டோ, “ உள்ளூர் கால்பந்து போட்டிக்குப் பிறகு...
அமெரிக்க போர்க்கப்பல்கள் ஈரான் பகுதியை நோக்கி நெருங்கியுள்ள நிலையில், தலைநகர் தெஹ்ரானில் உள்ள எங்கெலாப் சதுக்கத்தின் புதிய சுவரோவியம் ஒன்றை ஈரான் அரசு வெளியிட்டது. அதில், “காற்றை விதைத்தால், சூறாவளியை அறுவடை செய்வீர்கள். எங்கள் நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்த முயற்சிக்க வேண்டாம்” என்று அமெரிக்காவிற்கு நேரடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மற்றும் அதனுடன் வரும் போர்க்கப்பல்கள் ஈரான் பிராந்தியத்தை...