ஈரானை தாக்க தயாராகிறதா அமெரிக்கா? – மத்திய கிழக்குக்கு வந்த விமானம் தாங்கி போர்க்கப்பல்கள்!
admin - 0
ஈரானுடனான உறவில் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க கடற்படையின் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க் கப்பல் மத்திய கிழக்கு கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளது. இது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரான் மீது வான்வழித் தாக்குதலுக்கு உத்தரவிடக்கூடும் என்ற யூகங்களை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான உறவில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில், இந்தோ-பசிபிக் பகுதியில் இருந்து அனுப்பப்பட்ட அமெரிக்க கடற்படையின் ஆபிரகாம்...
வங்கதேசத்தில் கடந்த 2024 ஜூலையில் இடஒதுக்கீட்டில் திருத்தம் கோரி மாணவர்கள் தொடங்கிய போராட்டம் மிகப்பெரிய கிளர்ச்சியாக மாறியது.
அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் அரசு கடும் ஒடுக்குமுறையில் ஈடுபட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர். அப்போது நிகழ்ந்த மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இதில் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர்...
அமைதி வழங்கும் அமைப்பாக ஐ.நா. சபையை மக்கள் கருதவில்லை: இந்தியாவின் நிரந்தர தூதர் விமர்சனம்
admin - 0
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை வழங்கும் ஓர் அமைப்பாக ஐ.நா.வை உலக மக்கள் கருதுவதில்லை என்று இந்தியாவின் நிரந்தர தூதர் பர்வதனேனி ஹரீஷ் விமர்சித்துள்ளார்.
ஐ.நா.வில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த வாரம் அறிவித்தார். அத்துடன், ஐ.நா.வுக்கு மாற்றாக, ‘போர்டு ஆப் பீஸ்’ என்ற அமைப்பை தொடங்கினார். இதில் உறுப்பினராக இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். அதிபர் ட்ரம்ப்பின் தலைமையில் இயங்கும் இந்த அமைப்பில்,...
இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளும் ஊழியர்களுக்கு ரூ.12.5 லட்சம் பரிசு: துபாய் தொழிலதிபர் அறிவிப்பு
admin - 0
துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் கலாப் அல் ஹப்தூர், ஊழியர்களுக்கு திருமண பரிசாக ரூ.12.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அல் ஹப்தூர் குழுமத்தின் தலைவர் கலாப் அல் ஹப்தூர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: திருமணம் செய்வதும், ஒரு குடும்பத்தை உருவாக்குவதும் வெறும் தனிப்பட்ட விஷயம் மட்டுமல்ல. அவை சமூக மற்றும் தேசிய பொறுப்புகள். ஏனெனில் குடும்பங்களின் மூலமே தேசங்கள் கட்டியெழுப்பப்படுகின்றன...
தென்கொரியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 25% ஆக உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தங்கள் மிகவும் முக்கியமானவை. ஒப்புக்கொண்டபடி நாங்கள் வரியைக் குறைத்துள்ளோம். அதே வேகத்தை எங்கள் வர்த்தகக் கூட்டாளிகளிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை அடுத்து தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள், மரக் கட்டைகள் (Lumber) மற்றும்...
அமெரிக்காவின் மினியாபொலிஸ் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 37 வயதான அலெக்ஸ் ஜெஃப்ரி பிரெட்டியை குடியேற்ற அதிகாரிகள் 6 பேர் சூழ்ந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற புதிய வீடியோ வெளியாகி உள்ளது. இது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மினியாபொலிஸ் பகுதியில் கடந்த 7-ம் தேதி அன்று அமெரிக்க குடியேற்ற அதிகாரி ஒருவர், ரெனி குட் என்ற பெண்மணியை சுட்டுக்கொன்றனர். இது தேசிய அளவில் மக்களை கொதிப்படைய செய்தது....
சீனாவில் ராணுவ ஜெனரல் ஜாங் யூசியா மற்றும் லியு ஜென்லி ஆகியோர் கட்சி தலைமைக்கு (ஜி ஜின்பிங்) மிரட்டல் விடுக்கும் வகையில்செயல்படுவதாகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் ஒழுக்கங்கள், சட்டங்களை மீறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இருவரையும் பிடித்து விசாரணை நடத்தப்படுகிறது என்று சீன ராணுவத்தின் பிஎல்ஏ டெய்லி பத்திரிகை நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. இவர்களில் ஜாங் யூசியா பொலிட்பீரோ உறுப்பினராகவும், ராணுவ துணைத் தலைவராகவும் இருக்கிறார். அதேபோல் லியு ஜென்லி கூட்டு பணியாளர்...
வங்கதேசத்தில் உறங்கிக் கொண்டிருந்த இந்து இளைஞர் எரித்துக் கொலை: போலீஸார் தீவிர விசாரணை
admin - 0
வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. அதன் பிறகு இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.
பிப்ரவரி 12-ம் தேதி வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்துக்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வங்கதேசத்தின் நரசிங்கடி நகரில் நேற்று முன்தினம் இரவு சஞ்சல் பவுமிக்...
மெக்சிகோவில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் நேற்று (ஜன.25) ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர், 12 பேர் காயமடைந்தனர்.
வன்முறை சம்பவங்கள் அதிகளவில் நடக்கும் குவானாஜுவாடோ மாகாணத்தில் அமைந்திருக்கும் மைதானத்தில், உள்ளூர் கால்பந்துப் போட்டி முடிந்த சிறிது நேரத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது.
இதுகுறித்து பேசிய சலமன்கா மேயர் சீசர் பிரிட்டோ, “ உள்ளூர் கால்பந்து போட்டிக்குப் பிறகு...
அமெரிக்க போர்க்கப்பல்கள் ஈரான் பகுதியை நோக்கி நெருங்கியுள்ள நிலையில், தலைநகர் தெஹ்ரானில் உள்ள எங்கெலாப் சதுக்கத்தின் புதிய சுவரோவியம் ஒன்றை ஈரான் அரசு வெளியிட்டது. அதில், “காற்றை விதைத்தால், சூறாவளியை அறுவடை செய்வீர்கள். எங்கள் நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்த முயற்சிக்க வேண்டாம்” என்று அமெரிக்காவிற்கு நேரடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மற்றும் அதனுடன் வரும் போர்க்கப்பல்கள் ஈரான் பிராந்தியத்தை...
