ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடக்கும் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றன.
அரபிக்கடலில் பெர்சியன் வளைகுடாவையும், ஓமன் வளைகுடாவையும் ஹார்முஸ் ஜலசந்தி இணைக்கிறது. இந்த ஜலசந்தி ஈரான் கடல் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. ஆசிய நாடுகளுக்கான 85 சதவீத கச்சா எண்ணெய், சமையல் காஸ் ஏற்றுமதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது.
அமெரிக்கா உடனான போர் காரணமாக இந்த ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்தை ஈரான்...
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தாரை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே நேற்று 16-வது நாளாக போர் நீடித்தது. ஈரானின் பார்சு மாகாண தலைநகர் சிராசுவில் அந்த நாட்டின் ராணுவ தளம் உள்ளது. அங்கு ஏவுகணைகள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத் தொடர்ந்து சிராசுவில் உள்ள...
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தேடிச் சென்று கொல்வோம்: ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை சபதம்
admin - 0
மத்திய கிழக்கு நாடுகளில் 2 வாரங்களுக்கு மேலாக போர் நீடிக்கிறது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த சில நாட்களாக பொதுவெளியில் காணப்படவில்லை என்று தகவல் பரவி வருகிறது.
இந்த சூழ்நிலையில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”குழந்தைகளைக் கொல்லும் இந்தக் குற்றவாளி (நெதன்யாகு) உயிரோடு இருந்தால், எங்களது முழு பலத்தையும் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து தேடிச் சென்று கொல்வோம்” என கூறப்பட்டுள்ளது.
மார்ச் 12ம்...
ஆப்கனில் உள்ள ராணுவ மையம், சுரங்கம் மீது தாக்குதல் நடத்தினோம்: பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தகவல்
admin - 0
பாகிஸ்தானில் நடைபெறும் தீவிரவாத சம்பவங்களுக்கு தெஹ்ரிக்-இ-தலிபான்கள் தான் காரணம் என்றும் இவர்களுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. ஆனால் இதை ஆப்கானிஸ்தான் மறுக்கிறது. இந்த விவகாரம் காரணமாக பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் கடந்த சில வாரங்களாக மோதல் நடைபெறுகிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகம் உட்பட 3 இடங்கள் மீது ஆப்கானிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அவற்றை பாகிஸ்தான்...
கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய விமானப் படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானுக்கு எதிராக கடந்த பிப்.28-ம் தேதி தாக்குதல்களைத் தொடங்கின. இதையடுத்து, ஈரான் பதில் தாக்குதல்களைத் தொடங்கியது. கடந்த 14 நாட்களாக இரு தரப்பும் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், இஸ்ரேலிய விமானப் படை வெளியிட்ட தகவல்: கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின்...
“ஈரானின் பயங்கரவாத ஆட்சியை ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அழித்து வருகிறோம். இன்று என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்” என்று ஈரானை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய தாக்குதல் 13-வது நாளை எட்டியுள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கோ குறிவைப்பதற்கோ எதுவும் இல்லை என்றும் எப்போது வேண்டுமானாலும் போரை தான் முடித்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்...
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மோஜ்தபா காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 8-ம் தேதி மோஜ்தபா தனது தந்தை அலி காமேனியின் மறைவுக்குப் பிறகு ஈரானின் புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில், 12 நாட்களாக நீடித்து வரும் போரின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், மோஜ்தபா தனது ஒரு காலை...
அமெரிக்க விமானப் படையின் எரிபொருள் நிரப்பும் விமானம் இராக்கில் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த தீக்காயமடைந்தனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே நேற்று 14-வது நாளாக போர் நீடித்தது. ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பப்படுகிறது. இதற்காக அமெரிக்க விமானப் படையின் யு.எஸ்.கே.சி -135 ரக...
ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா காமேனி மற்றும் பல ஈரான் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை 10 மில்லியன் டாலர் வரை வெகுமதியை அறிவித்துள்ளது.
பிப்ரவரி 28 அன்று போரின் போது கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி உட்பட பல முக்கிய தலைவர்களை ‘ஈரானிய பயங்கரவாதத் தலைவர்கள்’ என்று குறிப்பிட்டு அமெரிக்க பாதுகாப்புத்...
“பலவான்கள் தாங்கள் நினைப்பதை செய்கிறார்கள்; அதனால் நேரும் விளைவுகளை நலிந்தோர் கடமைப்பட்டதுபோல் அனுபவிக்கின்றனர்!”
- இந்த மேற்கோளை சுட்டிக் காட்டி தற்போதைய ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலை விளக்க முற்படுகிறார், மத்திய கிழக்கு அரசியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிபுணரான ஃபரா என்.ஜான். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இவர் மூத்த விரிவுரையாளராக இருக்கிறார். அவரது பார்வையிலிருந்து...
“பலவான்கள் தாங்கள் நினைப்பதை செய்கிறார்கள்; அதனால் நேரும் விளைவுகளை நலிந்தோர் அனுபவிக்கின்றனர்.”...










