மியான்மர், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளில் டிஜிட்டல் மோசடி, சூதாட்டம் ஆகியவை மிகப் பெரியளவில் நடைபெறுகிறது.
சீனா-மியான்மர் எல்லையில் செயல்படும் ஒரு கும்பல் 1 பில்லியன் டாலரை விட அதிக மதிப்பில் சூதாட்டம் மற்றும் டிஜிட்டல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. மேலும் சீனர்கள் 14 பேர் இந்த கும்பலால் கொலை செய்யப்பட்டுள்னர்.
இந்த கும்பலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரை கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் சீன அதிகாரிகள் கைது...
அமெரிக்காவின் சைபர் செக்யூரிட்டி அன்ட் இன்பிராஸ்டிரக்கசர் செக்யூரிட்டி (சிஐஎஸ்ஏ) எனப்படும் சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்புப் பிரிவின் செயல் இயக்குநராக செயல்பட்டு வருபவர் மது கோட்டுமுக்கலா.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிஐஎஸ்ஏ-வின் செயல் தலைவராக, தனது நம்பிக்கைக்குரிய மது கோட்டுமுக்கலாவை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நியமித்தார். அமெரிக்க அரசின் ரகசியங்களையும், முக்கிய விவரங்களையும் பாதுகாக்கும் பணியில் சிஐஎஸ்ஏ ஈடுபட்டு வருகிறது. இதன்...
மியான்மரில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில், ராணுவ ஆதரவு பெற்ற யூனியன் மற்றும் ஒற்றுமை கட்சி (USDP) பெரும்பான்மை வெற்றியை பெற்றிருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ராணுவ ஆட்சியின் தலைவராக மின் ஆங் ஹ்லைங் உள்ளார். 2020 பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே ராணுவ ஆட்சியால் அவை ரத்து செய்யப்பட்டன.
2015 தேர்தலில்...
தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர், சோமாஸ்கந்தர், சுந்தரர் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு
admin - 0
தமிழக கோயில்களில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர் வெண்கல சிலை உட்பட 3 சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க அருங்காட்சியகம் ஒப்புக் கொண்டுள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ‘ஸ்மித்சோனியன் தேசிய அருங்காட்சியகம்’ உள்ளது. இந்த அருங்காட்சியகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் தமிழகக் கோயில்களில் இருந்து சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட 3 வெண்கல சிலைகளை திருப்பி ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10-ம் நூற்றாண்டை சேர்ந்த ஷிவா நடராஜர் சிலை, 12-ம் நூற்றாண்டை சேர்ந்த...
சீனாவுடன் வர்த்தகம் செய்ய கனடா ஒப்பந்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்த ஒப்பந்தப்படி கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால், கனடா பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் கல்ப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் நிறுவன விமானங்களுக்கு,கனடா அங்கீகாரம் வழங்கவில்லை என்றால், அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் கனடா தயாரிப்பு விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
மேலும்,...
வடமேற்கு பாகிஸ்தானில் இருந்து 70,000 பேர் வெளியேற்றம் – தலிபான்களுக்கு எதிராக ராணுவம் நடவடிக்கையா?
admin - 0
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்ற தீவிரவாத அமைப்பு செயல்படுகிறது.
ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கருதப்படும் டிடிபி, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மீண்டும் டிடிபி அமைப்பினர் மீது ராணுவம் தாக்குதல் நடத்தப்போவதாகவும், ஜனவரி 23-க்குள் திரா பகுதியை விட்டு வெளியேறுமாறும் மசூதி ஒலிபெருக்கிகள் மூலம் ஒரு மாதம் முன்பே அறிவிப்பு வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த...
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ள ஐரோப்பிய யூனியனின் செயல் ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 27-ம் தேதி நிறைவடைந்தது. இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்கும் அமலுக்கு வரும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்த வர்த்தக ஒப்பந்தம், அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் என்று...
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வரும் நிலையில், ஈரானுக்கு சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சவூதி பத்திரிகை நிறுவனம் (SPA) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது, ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதில் சவூதி அரேபியாவின் நிலைப்பாட்டை இளவரசர் உறுதிப்படுத்தினார்.
மேலும், ‘ஈரானுக்கு எதிரான எந்த ஒரு ராணுவ நடவடிக்கைக்காகவும் சவூதி அரேபியா...
ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கே அதிக நன்மை கிடைக்கும் என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள ஜேமிசன் கிரீர், ‘‘இந்த ஒப்பந்தத்தை வியூக ரீதியாக புரிந்து கொள்வது முக்கியம். அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து, அமெரிக்க சந்தையை அணுகும் மற்ற நாடுகளுக்கான வரியை உயர்த்தியுள்ளார். இதனால், அந்த நாடுகள்...
உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தனது கார்ப்பரேட் பிரிவில் பணியாற்றும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அந்நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய பணிநீக்கம் இதுவாகும்.
அமேசான் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பெத் காலெட்டி, இது குறித்து வெளியிட்ட பதிவில், “நிறுவனத்தின் படிநிலைகளைக் குறைக்கவும், அதிகாரத்துவத்தைக் களைந்து உரிமையை அதிகரிக்கவும் இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமேசான் ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர்...
