Google search engine
ஈ​ரான் துறை​முகங்​கள் தாக்​கப்​பட்​டால் மத்​திய கிழக்கு நாடு​களின் துறை​முகங்​களை தாக்​கு​வோம் என்று ஈரான் ராணுவம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதுதொடர்​பாக ஈரான் ராணுவ மூத்த தளபதி லெப்​டினென்ட் கர்​னல் இப்​ராகிம் ஸோல்​ப​காரி டெஹ்​ரானில் நேற்று கூறிய​தாவது: எங்​கள் எதிரி​களின் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்க அனு​மதி வழங்​க​மாட்​டோம். இந்த ஜலசந்தி தொடர்ந்து எங்​களின் கட்​டுப்​பாட்​டில் மட்​டுமே இருக்​கும். சர்​வ​தேச சட்ட விதி​களுக்கு எதி​ராக அமெரிக்க ராணுவம் செயல்​பட்டு வரு​கிறது. ஹார்​முஸ் ஜலசந்​தியை...
ஈ​ரானின் எண்​ணெய் ஏற்​றும​தியை முடக்​கும் முயற்சி​யில் அமெரிக்கா தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளது. அதன் ஒரு பகு​தி​யாக ஹார்​முஸ் ஜலசந்​தியை மூடப்​போவ​தாக ட்ரம்ப் கூறியுள்​ளதன் எதிரொலி​யாக ஈரான் கச்சா எண்​ணெயைச் சுமந்து வந்த 2 சரக்​குக் கப்​பல்​கள் இந்​தி​யத் துறை​முகங்​களுக்கு அருகே நிறுத்​தப்​பட்​டுள்​ளன. கடந்த 2019-ம் ஆண்டு முதல் அமெரிக்​கா​வின் பொருளா​தா​ரத் தடைகளால் ஈரானிட​மிருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை நிறுத்தி வைத்​திருந்​தது. இருப்​பினும், மேற்கு ஆசி​யப் போர்ச் சூழலால் சர்​வ​தேச சந்​தை​யில்...
கடல் கண்​ணி வெடிகள் எங்​கெல்​லாம் இருக்​கின்றன என்​ப​தைக் கண்​டு​பிடிக்க முடி​யாத​தால் ஹார்​முஸ் ஜலசந்​தியை முழு​மை​யாக திறப்​ப​தில் சிக்​கல் நீடிக்​கிறது. அமெரிக்கா உடனான போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி முழு​வதும் நூற்​றுக்​கணக்​கான கண்​ணி வெடிகளை ஈரான் ராணுவம் வீசி​யுள்​ளது. குறிப்​பாக கடலுக்கு அடி​யிலும், சில நூறு அடி ஆழத்​தி​லும் கடலுக்கு மேலே​யும் கண்ணி வெடிகள் வீசப்​பட்​டன. இதனால் சரக்​குக் கப்​பல் போக்​கு​வரத்து முடங்கி உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய், எரி​வா​யுக்​குத் தட்​டுப்​பாடு...
ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி அமெரிக்கக் கடற்படை முழுமையான முற்றுகையைத் தொடங்கும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ”ஈரான் உடனான சந்திப்பு நன்றாகவே சென்றது, பெரும்பாலான அம்சங்களில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், மிக முக்கியமான அணுசக்தி விவகாரத்தில் இணக்கம் ஏற்படவில்லை. எனவே, உடனடியாகச் செயல்பாட்டுக்கு வரும் வகையில், உலகின் மிகச்சிறந்த...
அமெரிக்கா - ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. 21 மணி நேர ஆலோசனையில் இருதரப்பு இடையே எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. கடந்த பிப்.28-ம் தேதி முதல் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இரு தரப்பும் இணைந்து 2 வாரங்களுக்கு தற்காலிக போர்நிறுத்தத்தை அமல் செய்தன. இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் அமைதிப்...
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தங்கியிருந்த கிராமங்களை இஸ்ரேல் குண்டு வைத்து மொத்தமாக தகர்த்தது. தெற்கு லெபனான் பகுதியில் உள்ள கிராமங்களில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தங்கியிருந்தனர். இவர்கள் வடக்கு இஸ்ரேல் பகுதியில் அடிக்கடி ராக்கெட் குண்டு வீச்சில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கடந்த 2 வாரங்க ளாக லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வந்தது. காசாவின் ரஃபா, பெய்ட் ஹானன் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை எல்லாம்...
பாகிஸ்தானில் சனிக்கிழமை அன்று தொடங்கிய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைய அமெரிக்காதான் காரணம் என ஈரான் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். கடந்த பிப்.28-ம் தேதி அன்று ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தின. அதையடுத்து இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், அமெரிக்க நட்பு நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்காசியாவில் போர்...
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்ததை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து, ரஷ்யா எண்ணெய்க்கு மீண்டும் தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி, "தற்போது மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பகுதிகளில் போர்நிறுத்தம் தொடங்கியுள்ளது. எனவே, முன்பு இருந்தது போலவே, ரஷ்ய எண்ணெய் மீதான தடைகள் முழுமையாக மீண்டும் விதிக்கப்படுவதற்காக நான் காத்திருக்கிறேன்” என்றார். மேற்கு...
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவம் இடையே தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலை​யில், இரு தரப்​பினரும் பங்​கேற்​கும் அமை​திப் பேச்​சு​வார்த்தை பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் இன்று நடை​பெறுகிறது. இதில் பங்​கேற்க அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் தலை​மையி​லான குழு​வினர் பாகிஸ்​தான் விரைந்​துள்​ளனர். ஈரான் தரப்​பில் நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாப், வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி உள்​ளிட்​டோர் பங்​கேற்​கின்​றனர். அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள்...
 அமெரிக்​கா, ஈரான் இடையே தற்​காலிக போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்டுள்ளது. இதன்​படி ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் சரக்​கு, எண்​ணெய் கப்​பல்​களை அனு​ம​திக்க ஈரான் ஒப்​புக் கொண்​டது. இதை கண்​காணிக்க அமெரிக்க கடற்​படை​யின் எம்​கியூ-4சி டிரைட்​டன் என்ற ஆளில்​லாத உளவு ட்ரோன் நேற்று ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டது. சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து பறந்த அமெரிக்க உளவு ட்ரோன் திடீரென மாய​மானது. இந்த ட்ரோன் சுட்டு...