மத்திய கிழக்கு துறைமுகங்களை தாக்குவோம்: ஈரான் ராணுவ மூத்த தளபதி இப்ராகிம் பகிரங்க எச்சரிக்கை
admin - 0
ஈரான் துறைமுகங்கள் தாக்கப்பட்டால் மத்திய கிழக்கு நாடுகளின் துறைமுகங்களை தாக்குவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஈரான் ராணுவ மூத்த தளபதி லெப்டினென்ட் கர்னல் இப்ராகிம் ஸோல்பகாரி டெஹ்ரானில் நேற்று கூறியதாவது: எங்கள் எதிரிகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதி வழங்கமாட்டோம். இந்த ஜலசந்தி தொடர்ந்து எங்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும். சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் செயல்பட்டு வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை...
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ட்ரம்ப் கூறியுள்ளதன் எதிரொலியாக ஈரான் கச்சா எண்ணெயைச் சுமந்து வந்த 2 சரக்குக் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி வைத்திருந்தது. இருப்பினும், மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில்...
கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு
admin - 0
கடல் கண்ணி வெடிகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
அமெரிக்கா உடனான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி முழுவதும் நூற்றுக்கணக்கான கண்ணி வெடிகளை ஈரான் ராணுவம் வீசியுள்ளது. குறிப்பாக கடலுக்கு அடியிலும், சில நூறு அடி ஆழத்திலும் கடலுக்கு மேலேயும் கண்ணி வெடிகள் வீசப்பட்டன. இதனால் சரக்குக் கப்பல் போக்குவரத்து முடங்கி உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயுக்குத் தட்டுப்பாடு...
ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி அமெரிக்கக் கடற்படை முழுமையான முற்றுகையைத் தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ”ஈரான் உடனான சந்திப்பு நன்றாகவே சென்றது, பெரும்பாலான அம்சங்களில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், மிக முக்கியமான அணுசக்தி விவகாரத்தில் இணக்கம் ஏற்படவில்லை. எனவே, உடனடியாகச் செயல்பாட்டுக்கு வரும் வகையில், உலகின் மிகச்சிறந்த...
பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: ஈரான் மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டம்
admin - 0
அமெரிக்கா - ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. 21 மணி நேர ஆலோசனையில் இருதரப்பு இடையே எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
கடந்த பிப்.28-ம் தேதி முதல் அமெரிக்கா - ஈரான் இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இரு தரப்பும் இணைந்து 2 வாரங்களுக்கு தற்காலிக போர்நிறுத்தத்தை அமல் செய்தன. இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் அமைதிப்...
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தங்கியிருந்த கிராமங்களை இஸ்ரேல் குண்டு வைத்து மொத்தமாக தகர்த்தது.
தெற்கு லெபனான் பகுதியில் உள்ள கிராமங்களில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தங்கியிருந்தனர். இவர்கள் வடக்கு இஸ்ரேல் பகுதியில் அடிக்கடி ராக்கெட் குண்டு வீச்சில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கடந்த 2 வாரங்க ளாக லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வந்தது.
காசாவின் ரஃபா, பெய்ட் ஹானன் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை எல்லாம்...
பாகிஸ்தானில் சனிக்கிழமை அன்று தொடங்கிய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைய அமெரிக்காதான் காரணம் என ஈரான் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்.28-ம் தேதி அன்று ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தின. அதையடுத்து இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், அமெரிக்க நட்பு நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்காசியாவில் போர்...
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்ததை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து, ரஷ்யா எண்ணெய்க்கு மீண்டும் தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி, "தற்போது மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பகுதிகளில் போர்நிறுத்தம் தொடங்கியுள்ளது. எனவே, முன்பு இருந்தது போலவே, ரஷ்ய எண்ணெய் மீதான தடைகள் முழுமையாக மீண்டும் விதிக்கப்படுவதற்காக நான் காத்திருக்கிறேன்” என்றார்.
மேற்கு...
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவம் இடையே தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இரு தரப்பினரும் பங்கேற்கும் அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் விரைந்துள்ளனர். ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள்...
அமெரிக்கா, ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சரக்கு, எண்ணெய் கப்பல்களை அனுமதிக்க ஈரான் ஒப்புக் கொண்டது.
இதை கண்காணிக்க அமெரிக்க கடற்படையின் எம்கியூ-4சி டிரைட்டன் என்ற ஆளில்லாத உளவு ட்ரோன் நேற்று ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து பறந்த அமெரிக்க உளவு ட்ரோன் திடீரென மாயமானது. இந்த ட்ரோன் சுட்டு...










