ஈரானில் பல இடங்களை குறிவைத்து அமெரிக்கா நேற்று முன்தினம் இரவு மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானின் பல இடங்களில் உள்ள ஏவுகணை மற்றும் டரோன் மையங்கள், கண்காணிப்பு மையங்கள், ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டன.
ஈரான் மீது தொடர்ந்து 2 வாரங்களாக தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்கா, ஆயுதக் கையிருப்பு குறைந்ததால் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி வைத்திருந்தது. ஈரானுக்கு ஆதரவாக ஈராக்கில் செயல்படும் ஹவுதி தீவிரவாத அமைப்புகள்,...
நேபாளத்தின் கோஷி மாகாணம், சுன்சரி மாவட்டம் இந்திய எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. அங்கு இரு மதத்தினரின் பண்டிகை கொண்டாட்டங்களின் போது திடீரென தகராறு ஏற்பட்டது.
இது வன்முறையாக மாறியது.நிலவரத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், பாதுகாப்புப் படையினர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று 4-வது நாளாக இந்த ஊரடங்கு தொடர்ந்து அமலில்...
பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் உள்ள ஒருகாவல் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டனர். கூடுதல் போலீஸார் சென்ற வாகனம் மீதும் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் போலீஸார் நேற்று ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகளும் எதிர் தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் நேற்று கூறுகையில், “ஹங்கு...
இந்திய - பிரிட்டானிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. இவர் சாத்தானின் வேதங்கள் என்ற நாவலை கடந்த 1988-ம் ஆண்டு வெளியிட்டார். இது இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக புகார் எழுந்தது.
இதனால் சல்மான் ருஷ்டி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் சல்மான் ருஷ்டி தாக்கப்பட்டார். அவரை ஹாதி மாதர் (28) என்பவர் கத்தியால் 15 முறை குத்தினார். இதில் சல்மான் ருஷ்டி தனது...
திபெத்தில் எவரெஸ்ட் சிகரம் அருகே இந்திய எல்லையை கண்காணிக்க ட்ரோன் ஆராய்ச்சி மையம் அமைத்தது சீனா
admin - 0
எல்லைக் கண்காணிப்பு, பாதுகாப்பு, தளவாடங்கள் மற்றும் போக்குவரத்தை பலப்படுத்துவதற்காக, திபெத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை சீனா நிறுவியுள்ளது.
சீனா இந்திய எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில் ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. லடாக்கின் லே பகுதிக்கு அருகில் உள்ள ஹேட்டன் விமானப்படை தளத்தில் ஏழு ஜே-20 ரக போர் விமானங்களை நிறுத்தியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு அருகில் 4 ஜே-20...
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 13 பேர் உயிரிழப்பு – பிரதமர் தலைமையில் பேரிடர் நிவாரண குழு அமைப்பு
admin - 0
ஜப்பானின் தெற்குப் பகுதியில் கியூசு தீவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தில், செவ்வாய்க் கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்ததாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், நிலநடுக்கத்தின் பாதிப்புகள் அதிகமாக இருப்பதால், தனது தலைமையில் அவசரகால பேரிடர் நிவாரணக் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
ஜப்பானின் தெற்குப் பகுதியில் கியூசு தீவு உள்ளது. இங்கு குமாமோட்டோ பகுதியில் நேற்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது....
தீவிரவாதத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் காரணமாக டெலிகிராம் மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவை தேடப்படும் குற்றவாளி என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்யாவின் பிரதான உள்நாட்டு பாதுகாப்பு முகமை புதன்கிழமை அன்று கூறியதாவது: ரஷ்யாவில் சைபர் மோசடி, கூட்டுப் படுகொலை, தீவிரவாதம் மற்றும் பல்வேறு நாசவேலைகளை திட்டமிடும் உக்ரைன் உளவுத்துறை, தீவிரவாத அமைப்புகள் திட்டமிடவும், அதை அரங்கேற்றவும் டெலிகிராம் தளத்தை பயன்படுத்துகிறது.
அப்படி டெலிகிராமில் ஆக்டிவாக உள்ள சேனல்கள், சாட்களை அந்நிறுவனம்...
குறைந்த கட்டணத்தில் சுற்றுலா செல்ல விசா கிடைத்ததன் மூலம் 3 இந்திய இளைஞர்கள் தாய்லாந்து சென்றுள்ளனர். இந்த சுற்றுலாவுக்கு சுமார் ரூ.2 லட்சம் செலுத்தி உள்ளனர்.
கடந்த 21-ம் தேதி சுவர்ணபூமி விமான நிலையத்துக்கு வந்த அவர்களை, சுற்றுலா ஏற்பாடு செய்தவர்கள் என்று கூறி டாக்ஸி மூலம் பட்டாயாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பாங் லாமுங் மாவட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவர்களின் கை, கால்களை கட்டிப் போட்டு...
தொழிலதிபர் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: இன்னும் 10 ஆண்டுகளில் மனிதர்கள் ஏஐ-யிடம் தங்கள் கட்டுப்பாட்டை இழப்பார்கள். 2036-ம் ஆண்டுக்குள் உலகம் ரோபோக்கள் வசம் செல்லும். ஏஐ மனிதகுலத்தையே அழிப்பதற்கு 10 முதல் 20% வாய்ப்புகள் உள்ளன.
அதிகார அமைப்பில் விரைவில் மாற்றம் ஏற்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அறிவையும் ஏஐ விஞ்சிவிடும். ஒரு விஷயத்தை மனிதர்களை விட...
ஜப்பானின் தெற்குப் பகுதியான குமாமோட்டா மாகாணத்தில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக இடிந்து விழுந்த வணிக வளாகத்தில் பலர் சிக்கிக்கொண்ட நிலையில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
குமாமோட்டோ மாகாணத்தில் சுமார் 7 லட்சம் மக்கள் வசிக்கும் மத்திய கியூஷு தீவின் மிகப் பெரிய நகரமான குமாமோட்டோவுக்கு தெற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்துள்ளதாக ஜப்பான் வானிலை...









