இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. போர் பதற்றம் தீவிரமடைந்த நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பு, அமைதிக்கான பாதையில் வெளிச்சத்தைக் கூட்டி இருக்கிறது.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. பதிலுக்கு இஸ்ரேலும் ஈரான் மீது தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. எதிர்பாராத இந்த திடீர் மோதல் மேற்கு ஆசியாவின் நிலைமையை மீண்டும் சிக்கலாக்கும் என்ற அச்சம் பரவலாக...
துபாயில் திங்கள்கிழமை நடந்த சாலை விபத்தில், இந்திய தொழிலாளர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பழுதடைந்து சாலையின் நடுவே நின்றுகொண்டிருந்த லாரி ஒன்றின் பின்புறத்தில், தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினி பேருந்து அதிவேகமாக மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
துபாய் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, எமிரேட்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அது சாலையின் நடுவிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது அந்த லாரியின்...
தெற்கு பிலிப்பைன்ஸில் நேற்று 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பிராந்தியத்தில் நேற்று காலை 7:37 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் இந்த ஆண்டு பிலிப்பைன்ஸை தாக்கிய மிக வலுவான நிலநடுக்கம் என கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸின் 2-வது அதிக மக்கள் தொகை கொண்ட தீவான மிண்டனாவோவுக்கு அப்பால் கடலில் மையம் கொண்டிருந்ததாகவும்...
லெபனான் மீதான தாக்குதலை கண்டித்து இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – பதிலடியில் ஈரான் பெட்ரோ ரசாயன ஆலை சேதம்
admin - 0
லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்துவதால், இஸ்ரேல் விமான தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் நகரங்களில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசின. இரு தரப்பு இடையே மீண்டும் தீவிர போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால், ஈரான் மற்றும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த அதிபர் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், அமெரிக்கா -...
அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் எச்-1பி விசாவுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் என்ற அறிவிப்பை அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இது ட்ரம்ப்புக்கு மற்றொரு பின்னடைவாக கருதப்படுகிறது.
அமெரிக்காவில் வெளிநாட்டினர் தற்காலிகமாக தங்கி வேலை செய்வதற்காக எச்-1பி விசா வழங்கப்படுகிறது. குறிப்பாக, தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.டி.) திறமையான வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த இந்த விசா பயன்படுகிறது. குலுக்கல் முறையில் இந்த விசா புதிய விண்ணப்பதாரர்களுக்கு...
“யதார்த்த உலகில் வாழுங்கள்” – மொஜ்தபா கமேனியை சந்திக்க விரும்பும் ட்ரம்ப்புக்கு ஈரான் பதில்
admin - 0
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை சந்திக்க தயாராக இருப்பதாக டொனால்டு ட்ரம்ப் கூறியதற்கு, அவர் யதார்த்த உலகில் வாழ வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அப்பாஸ் அராக்சி, “உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை சந்திக்க தயாராக இருப்பதாகவோ அல்லது சந்திப்பை விரும்புவதாகவோ டொனால்டு ட்ரம்ப் கூறியதாக நான் ஒரு செய்தியைப் பார்த்தேன். அவர் யதார்த்தத்துடன் இருக்க வேண்டும்....
பொருளாதார தடைகள் மூலம் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தால் பூமராங் போல் திரும்பி தாக்கும்: புதின் எச்சரிக்கை
admin - 0
‘‘நாட்டு நலன் கருதியே இந்தியா செயல்படுகிறது. அதற்குப் பொருளாதார தடைகள் மூலம் அழுத்தம் கொடுத்தால், அது பிரதமர் மோடி தலைமையின் கீழ் பூமராங் போல் திரும்பி தாக்கும்’’ என அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார கூட்டமைப்பில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புதின் பேசியதாவது:
இந்தியா தனது நாட்டு நலனை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கிறது. ரஷ்யாவுடன் உள்ள உறவுகள்...
ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை தவிர ஈரானுக்கு வேறு வழி இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய போரை கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இருதரப்பும் இணைந்து தற்காலிகமாக நிறுத்தி உள்ளன. எனினும் கடந்த சில வாரங்களாக அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இதுதொடர்பாக என்பிசி நியூஸ் ஊடகத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:...
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று (ஜூன் 8) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதன் தொடர்ச்சியாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
அந்த நாட்டில் உள்ள மிண்டானாவ் தீவுப் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக களத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதியில் மின்சாரம், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது.
மேலும், சுனாமி பேரலை எழலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாக கடலோரத்தில் தாழ்வான பகுதிகளில்...
இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இன்று (ஜூன் 8) ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடுத்தது. இத்தகைய சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க நேச நாடுகள்...










