Google search engine
 இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. போர் பதற்றம் தீவிரமடைந்த நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பு, அமைதிக்கான பாதையில் வெளிச்சத்தைக் கூட்டி இருக்கிறது. லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. பதிலுக்கு இஸ்ரேலும் ஈரான் மீது தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. எதிர்பாராத இந்த திடீர் மோதல் மேற்கு ஆசியாவின் நிலைமையை மீண்டும் சிக்கலாக்கும் என்ற அச்சம் பரவலாக...
துபாயில் திங்கள்கிழமை நடந்த சாலை விபத்தில், இந்திய தொழிலாளர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  பழுதடைந்து சாலையின் நடுவே நின்றுகொண்டிருந்த லாரி ஒன்றின் பின்புறத்தில், தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினி பேருந்து அதிவேகமாக மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. துபாய் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, எமிரேட்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அது சாலையின் நடுவிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது அந்த லாரியின்...
தெற்கு பிலிப்பைன்ஸில் நேற்று 7.8 ரிக்​டர் அளவி​லான சக்​தி​வாய்ந்த நிலநடுக்கம் ஏற்​பட்​ட​தில் 32 பேர் உயி​ரிழந்​தனர். தெற்கு பிலிப்​பைன்​ஸின் மிண்​ட​னாவோ பிராந்​தி​யத்​தில் நேற்று காலை 7:37 மணிக்கு சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. 7.8 ரிக்​டர் அளவி​லான இந்த நிலநடுக்​கம் இந்த ஆண்டு பிலிப்​பைன்ஸை தாக்​கிய மிக வலு​வான நிலநடுக்​கம் என கூறப்படுகிறது. இந்த நிலநடுக்​கம் பிலிப்​பைன்​ஸின் 2-வது அதிக மக்​கள் தொகை கொண்ட தீவான மிண்​டனாவோவுக்கு அப்​பால் கடலில் மையம் கொண்​டிருந்​த​தாக​வும்...
லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்துவதால், இஸ்​ரேல் விமான தளங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​யது. இதற்கு பதிலடி​யாக ஈரான் நகரங்​களில் இஸ்​ரேல் போர் விமானங்​கள் குண்டு வீசின. இரு தரப்பு இடையே மீண்​டும் தீவிர போர் ஏற்​படும் சூழல் ஏற்​பட்​ட​தால், ஈரான் மற்​றும் இஸ்​ரேல் தாக்​குதலை நிறுத்த அதிபர் ட்ரம்ப் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். லெப​னான் மீது இஸ்​ரேல் தாக்​குதல் நடத்தி வரு​வ​தால், அமெரிக்கா -...
அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் எச்-1பி விசாவுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் என்ற அறிவிப்பை அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இது ட்ரம்ப்புக்கு மற்றொரு பின்னடைவாக கருதப்படுகிறது. அமெரிக்​கா​வில் வெளி​நாட்​டினர் தற்​காலிக​மாக தங்கி வேலை செய்​வதற்​காக எச்​-1பி விசா வழங்​கப்​படு​கிறது. குறிப்​பாக, தொழில்​நுட்ப நிறு​வனங்​கள் (ஐ.டி.) திறமை​யான வெளி​நாட்டு ஊழியர்​களை பணி​யமர்த்த இந்த விசா பயன்​படு​கிறது. குலுக்​கல் முறை​யில் இந்த விசா புதிய விண்ணப்பதாரர்களுக்கு...
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை சந்திக்க தயாராக இருப்பதாக டொனால்டு ட்ரம்ப் கூறியதற்கு, அவர் யதார்த்த உலகில் வாழ வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அப்பாஸ் அராக்சி, “உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை சந்திக்க தயாராக இருப்பதாகவோ அல்லது சந்திப்பை விரும்புவதாகவோ டொனால்டு ட்ரம்ப் கூறியதாக நான் ஒரு செய்தியைப் பார்த்தேன். அவர் யதார்த்தத்துடன் இருக்க வேண்டும்....
‘‘​நாட்டு நலன் கரு​தியே இந்​தியா செயல்​படு​கிறது. அதற்​குப் பொருளா​தார தடைகள் மூலம் அழுத்​தம் கொடுத்​தால், அது பிரதமர் மோடி தலை​மை​யின் கீழ் பூம​ராங் போல் திரும்பி தாக்​கும்’’ என அமெரிக்கா​வுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். ரஷ்​யா​வின் செயின்ட் பீட்​டர்ஸ் சதுக்​கத்​தில் நடை​பெற்ற சர்​வ​தேச பொருளா​தார கூட்​டமைப்​பில் பங்​கேற்ற ரஷ்ய அதிபர் புதின் பேசி​ய​தாவது: இந்​தியா தனது நாட்டு நலனை கருத்​தில் கொண்டு முடிவு​களை எடுக்​கிறது. ரஷ்​யா​வுடன் உள்ள உறவு​கள்...
ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திடு​வதை தவிர ஈரானுக்கு வேறு வழி இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். அமெரிக்​கா, ஈரான் இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி தொடங்கிய போரை கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி இருதரப்​பும் இணைந்து தற்​காலிகமாக நிறுத்தி உள்ளன. எனினும் கடந்த சில வாரங்​களாக அமெரிக்கா​வும் ஈரானும் பரஸ்​பரம் தொடர் தாக்​குதல்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றன. இதுதொடர்​பாக என்​பிசி நியூஸ் ஊடகத்​துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது:...
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று (ஜூன் 8) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதன் தொடர்ச்சியாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அந்த நாட்டில் உள்ள மிண்டானாவ் தீவுப் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக களத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதியில் மின்சாரம், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும், சுனாமி பேரலை எழலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாக கடலோரத்தில் தாழ்வான பகுதிகளில்...
இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இன்று (ஜூன் 8) ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடுத்தது. இத்தகைய சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க நேச நாடுகள்...