Google search engine
ஈ​ரான் போருக்கு கூடு​தலாக 200 பில்​லியன் டாலர் (ரூ.18 லட்​சம் கோடி) தேவை என அமெரிக்க ராணுவ தலை​மையகம் பென்டகன் கோரிக்கை விடுத்​துள்​ளது. ஈரான் ​மீது அமெரிக்க மற்​றும் இஸ்​ரேலிய படைகள் போர்தொடுத்​தன. இதற்​காக மிகப் பெரிய படையை அமெரிக்கா அனுப்​பியது. ஈரான் மீதான தாக்​குதல் கடந்த 20 நாட்​களுக்கு மேலாக தொடர்​கிறது. ஈரானில் ஏராள​மான இலக்​கு​களை குறி​வைத்து அமெரிக்கா தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில் அமெரிக்க ராணுவத் தலை​மையகம் ஈரான்...
நியூ​யார்க்​கிலுள்ள ஒரு சிறை வளாகத்​தில் கத்​தி​கள், செல்​போன், ஹேர்​கிளிப்​பு​களை ட்ரோன் வீசிச் சென்​ற​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. அமெரிக்​கா​வின் நியூ​யார்க் மாகாணம் மார்சி டவுன் பகு​தி​யில் சிறைச்​சாலை அமைந்​துள்​ளது. இந்த சிறைச்​சாலை வளாகத்​தில் நேற்று முன்​தினம் இரவு நுழைந்த ஒரு ட்ரோன் கத்​தி​கள், செல்​போன், ஹேர்​கிளிப்​பு​கள், தலை​யில் அணி​யும் துணி ஆகியவை அடங்​கிய பையை வீசிச் சென்​று​விட்​டது. இதைப் பார்த்த சிறை அதி​காரி​கள் செல்​போன், ஹேர்​கிளிப்​பு​கள் அடங்​கிய பையை எடுத்து சோதனை செய்​தனர்....
கத்​தா​ரைத் தாக்​கி​னால் ஈரான் பேரழி​வைச் சந்​திக்​கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரித்​துள்​ளார். இதனால் போர் உச்ச கட்​டத்தை அடையும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் இணைந்து கடந்த பிப்​ரவரி 28-ம் தேதி தாக்குதலை தொடங்​கின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வரு​கிறது. இஸ்​ரேல் மீதும் அமெரிக்க ராணுவ தளங்​கள் உள்ள வளை​குடா நாடு​கள் மீதும் ஈரான் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. ஒரு ராணுவ மோதலாக...
ஈரானின் ‘தெற்கு பார்ஸ்’ இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் கடுமையான பதிலடி தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இந்த விவகாரத்தால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. “ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறித்து அமெரிக்காவுக்கு எதுவும் தெரியாது. அதை...
அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் உள்ள ராணுவ தளத்​தின் மீது மர்ம ட்ரோன்​கள் பறந்​த​தால் பதற்றம் எழுந்திருக்கிறது. முன்​னெச்​சரிக்கை நடவடிக்கை​யாக அங்கு வசிக்​கும் பாது​காப்​பு, வெளி​யுறவு அமைச்​சர்​களை இடமாற்​றம் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்​கிறது. அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் போர்ட் லெஸ்லி ஜே. மெக்​நேயர் என்ற ராணுவ தளம் அமைந்​துள்​ளது. இந்த மையம் அமெரிக்​கா​வின் முக்​கிய ஆயுதக் கிடங்​கு​களில் ஒன்​றாக​வும் விளங்​கு​கிறது. அமெரிக்க பாது​காப்​புத் துறை அமைச்​சர் பீட் ஹெக்​செத், வெளி​யுறவு அமைச்​சர்...
இஸ்​ரேல் தாக்குதலில் ஈரானின் 2-வது மிகப்​பெரிய தலை​வ​ரான அலி லாரிஜானி, அவரது மகன் மற்றும் மூத்த தளபதி கோலம்​ரெசா சுலை​மானி உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவில் கொத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறது ஈரான். செவ்வாய்க்கிழமை இரவில் நடத்தப்பட்ட இந்த கொத்து குண்டு வீச்சில் 2 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப் போரில் ஈரான், கொத்து குண்டுகளை அடிக்கடி பிரயோகப்...
வட கொரியாவை இந்த பூவுலகின் மர்ம தேசம் என்று சொல்லலாம். அங்கு என்ன நடக்கிறது, எப்படி நடக்கிறது, ஏன் நடக்கிறது என்று எல்லாமே வெளியுலகுக்கு ரகசியம்தான். உலகமே கோவிட் பெருந்தொற்றில் சிக்கி மரணக் கணக்குகளை சொல்லிக் கொண்டிருந்தபோதும் கூட, உயிரிழப்புகள் பற்றி அங்கிருந்து ஒற்றைச் செய்திகூட பதிவாகவில்லை. ராணுவ கட்டுக்கோப்பு என்பதன் உண்மையான அடையாளமே வட கொரியாதான் எனலாம். அந்த அளவுக்கு மக்கள் ‘உம்’ என்றாலும், ‘இம்’ என்றாலும்...
இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில் ஈரானின் உளவுத்​துறை அமைச்​சர் இஸ்​மா​யில் காதிப் உயி​ரிழந்​துள்​ளார். மேலும், ஹார்​முஸ் ஜலசந்தி பகுதி அருகே ‘பங்​கர் பஸ்​டர்’ குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் பதற்​றம் அதி​கரித்​துள்​ளது. அமெரிக்க மற்​றும் இஸ்​ரேலிய படைகளுக்​கும், ஈரானுக்​கும் இடை​யில் கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் போர் நடை​பெற்று வரு​கிறது. இதனால், வளை​குடா நாடு​களிடையே பதற்​ற​மான சூழல் நிலவி வரு​கிறது. இந்​நிலை​யில், இஸ்​ரேல் நடத்​திய புதிய தாக்​குதலில்...
அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடி​யாக வளை​குடா நாடு​களில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படை தளங்​கள், கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்​குதல் நடத்தி வருகின்​றன. இதனைத் தொடர்ந்​து, ஈரானுக்கு ஆதர​வாக ஏமனில் உள்ள ஹவுதி​கள் மற்​றும் லெப​னானின் ஹிஸ்​புல்லா தீவிர​வாத அமைப்பு​கள் இஸ்​ரேலுக்கு எதி​ரான தாக்​குதலை மேற்கொண்டன. இதைத் தொடர்ந்து லெப​னான் மீது இஸ்​ரேல் நடத்தி வரும் தாக்​குதல்​களில் 900-க்​கும் அதி​க​மான நபர்​கள் உயிரிழந்​தனர். இந்​நிலை​யில் லெப​னான் தலைநகர் பெய்​ரூட்​டிலுள்ள கட்​டிடம்...
 ஈரான் போர் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவேன் அசார் தெரிவித்துள்ளார். ஈரானின் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ள நிலையில் ரூவேன் அசார் இதை கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. இது தொடர்பாக முன்னணி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ரூவேன் அசார் கூறியதாவது: “ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. நாளுக்கு நாள் அது அதிகரித்து வருகிறது. இந்த தாக்குதல் காரணமாக ஈரானின்...