Google search engine
நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது இந்திய அணி. விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் விளாசினார். ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் அவருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் அந்த...
மகளிருக்கான புரோ ஹாக்கி லீக்கில் நேற்று புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இநதியா - ஜெர்மனி அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் அமேலி வோர்ட்மேன் (3-வது நிமிடம்), சோபியா ஸ்வாபே (18 மற்றும் 47-வது நிமிடம்), ஜோகான் ஹாச்சன்பெர்க் (59-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். இந்திய அணி தனது ஆட்டத்தில்...
மகாராஷ்டிரா ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி, இந்தியாவின் நிக்கி கலியாண்டா பூனாச்சா, ஜிம்பாப்வேயின் கர்ட்னி ஜான் லாக் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி 7-6(5), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஜோடி...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் லாகூரில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே சமீபகாலமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பார்மில் இல்லை. இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 0-3 என இழந்தது. அதேவேளையில் இரு முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி இலங்கையிடம் 0-2...
எம்ஓபி வைஷ்ணவா மகளிர் கல்லுாரி சார்பில் வாஸ்போ மாநில அளவிலான கல்லூரிகள், பள்ளி மாணவிகளுக்கான செஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் கல்லூரிகள் பிரிவில் 150 பேரும், பள்ளிகள் பிரிவில் 300 பேரும் பங்கேற்றனர். கல்லூரிகள் பிரிவில் நாகர்கோவிலை சேர்ந்த ரெபேக்கா ஜெசுமரியன் (ஹோலி கிராஸ்) சாம்பியன் பட்டம் வென்றார். பள்ளி மாணவிகளுக்கான 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கீர்த்தி ஸ்ரீ ரெட்டியும் (வேலம்மாள் மெட்ரிகு ரிகு லேசன்),...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. துபாயில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி 49.4 ஓவர்களில் 228 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. சவுமியா சர்க்கார் 0, மெஹிதி ஹசன் 5 ரன்களில் முகமது ஷமி பந்திலும், கேப்டன்...
நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று போட்டியில் வங்கதேசத்தை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இதில் இந்திய அணியின் துணை கேப்டன் ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணி 49.4 ஓவர்களில் 228 ரன்கள் சேர்த்தது. 229 ரன்கள் எடுத்தால்...
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக 228 ரன்கள் பதிவு செய்தது வங்கதேசம். இந்தப் போட்டியில் வங்கதேச வீரர்கள் தவ்ஹித் ஹ்ரிடோய் மற்றும் ஜாக்கர் அலி அனிக் இணைந்து 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் நழுவவிட்ட கேட்ச்சால் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை அக்சர் படேல் மிஸ் செய்தார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்.19)...
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்று சுமார் 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கிரிக்கெட்டை அனுபவித்து, ரசித்து விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஐபிஎல் 2025-ம் ஆண்டுக்கான சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் அவர் களமாட உள்ளார். இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற மொபைல் செயலி அறிமுக நிகழ்வில் தோனி கலந்து கொண்டார். “சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து...
அகில இந்திய சிவில் சர்வீஸ் வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் மகளிருக்கான இறுதிப் போட்டியில் ஆர்எஸ்பி சென்னை 25-09, 25-17, 25-15 என்ற செட் கணக்கில் ஆர்எஸ்பி பெங்களூரு அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. அந்த அணி தொடர்ச்சியாக 4-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளது. ஆர்எஸ்பி கொல்கத்தா 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றது. 2-வது இடம்...