விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் வரும் ஜனவரி 6-ம் தேதி மீண்டும் டெல்லி அணிக்காக விராட் கோலி களமிறங்கவுள்ளார்.
தற்போது நாடு முழுவதும் விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் தங்கள் மாநிலம் சார்ந்த அணிக்காக களமிறங்கி விளையாடி வருகின்றனர். அதன்படி விராட் கோலி, டெல்லி அணிக்காக கடந்த வாரம் 2 போட்டிகளில் பங்கேற்று ஒரு சதம், ஒரு அரை சதம்...
உலக விரைவு செஸ் போட்டியில் வெண்கலம் வென்றுள்ள இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
கத்தார் நாட்டிலுள்ள தோஹா நகரில் உலக விரைவு மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து கோனேரு ஹம்பிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூஸிலாந்து அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் டக் பிரேஸ்வெல் அறிவித்துள்ளார்.
நியூஸிலாந்து அணிக்காக 2011-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை டக் பிரேஸ்வெல் விளையாடியுள்ளார். 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 74 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். மேலும் பேட்டிங்கில், 568 ரன்களும் எடுத்துள்ளார்.
21 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 26 விக்கெட்களும் சர்வதேச டி20 போட்டிகளில் 20 விக்கெட்டுகள் என சர்வதேச...
இலங்கைக்கு எதிரான 4-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோருக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இலங்கை மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் நேற்று முன்தினம் 4-வது டி20 போட்டி...
தனது கால்பந்து வாழ்க்கையில் 1,000 கோல்களை அடிக்க வேண்டும் என்று விரும்புவதாக போர்ச்சுகல் அணி வீரரும், கால்பந்து ஜாம்பவானுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நேற்று முன்தினம் குளோப் கால்பந்து வீரர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய கிழக்கு நாடுகள் பிரிவிலிருந்து சிறந்த வீரர் விருதை ரொனால்டோ பெற்றார்.
விழாவுக்கு பின்னர் அவர் கூறியதாவது: "எனக்கு தற்போது 40 வயதாகிறது. கால்பந்துப் போட்டிகளில் 1,000...
விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் விளையாடவுள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் இந்த விஜய் ஹசாரே போட்டியில் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி ரோஹித் சர்மா, விராட் கோலி,...
சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் குவித்த 4-வது வீராங்கனை என்ற சாதனையை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நிகழ்த்தியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. இதில் ஸ்மிருதி மந்தனா 27 ரன்கள் எடுத்திருந்தபோது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 10...
தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டியில் ரித்விக் சஞ்சீவி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் 87-வது தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வந்தன. நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஹட்சன் பாட்மிண்டன் சென்டர் வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ரித்விக் சஞ்சீவியும், ஹரியானா வீரர் பாரத் ராகவும் மோதினர்.
இதில் ரித்விக் சஞ்சீவி 21-16, 22-20 என்ற புள்ளிகள் கணக்கில் பாரத் ராகவை வீழ்த்தி சாம்பியன்...
இந்திய டெஸ்ட் அணிக்காக பயிற்சியாளர் மாற்றமா? – கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மறுப்பு
admin - 0
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக பயிற்சியாளர் மாற்றப்படப் போகிறார் என்ற செய்தியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) மறுத்துள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கடந்த ஆண்டு ஜூலையில் நியமிக்கப்பட்டார். தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு, இந்திய அணி குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களையும், சரிவையும் சந்தித்து வருகிறது.
கவுதம் கம்பீரின் தலைமையின் கீழ், இந்திய அணி ஒருநாள், சர்வதேச டி20 போட்டிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு...
இலங்கைக்கு எதிரான சர்வதேச டி20 தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிலிருந்து பாபர் அசம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் ஷா அப்ரிடி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அணியில் புதிதாக விக்கெட் கீப்பர் கவாஜா நபாய் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து பாகிஸ்தான் அணி சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் வரும் ஜனவரி 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை விளையாடவுள்ளது. இதற்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் பிக்...
