சட்டப்பேரவை தேர்தல் நெருங் குவதால் மதுரையில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுக்கு ஏராளமான பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் சூழலில் மதுரையில் மக்களுக்கு, எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், பரிசு பொருட்கள் வழங்கி பிரச் சாரத்தை தொடங்கி விட்டனர்.
கடந்த தீபாவளி நாளில், கிளை, பகுதி, ஒன்றியச் செய லாளர்களுக்கு புத்தாடை, பட்டாசு, பரிசுப் பொருட்களை வழங்கினர். பொதுமக்களுக்கு தீபாவளி விழா நடத்தி, பரிசு...
எல்லாருக்கும் எல்லாம் என்ற சமத்துவ நிலையை அடைய திராவிட மாடல் அரசு செயல்படுவதாக சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அனைத்துத் துறை பணியாளர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் இன்று கொண்டாடப்பட்டது. இதில் நமது பாரம்பரிய உடையான பட்டு வேட்டி, சட்டையுடன் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், அரசு பணியாளர்களுக்கு பொங்கலை வழங்கி தனது மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில்...
‘‘திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ – பொங்கல் விழாவில் பழனிசாமி பேச்சு
admin - 0
“எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. சில கட்சிகள் வரும், இவற்றையெல்லாம் பகிரங்கமாக கூற முடியாது. வலிமையான கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். திமுக ஆட்சி எப்போது போகும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஒவ்வொரு பொங்கல் திருநாள் அன்றும், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஒவ்வொரு தொகுதியாக சென்று பொங்கல் திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டில், மேட்டூர்...
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளை அடக்கி சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட வலையங்குளம் பாலமுருகனுக்கு கார் பரிசும், சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசை அவனியாபுரம் விருமாண்டி மந்தை முத்துக்கருப்பன் காளைக்கும் அமைச்சர் பி. மூர்த்தி வழங்கினார்.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது முதல் இறுதி சுற்று வரை விறுவிறுப்பாக நடந்தது. 940 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 47 காளைகள் தகுதி நீக்கம்...
தைத்திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று (ஜன.16) காலை 9 மணி அளவில் தொடங்கியது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட காளைகளும், 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள்...
புதிய பிரத்யேக ஆதார் சேவை மையம் சென்னை அண்ணா நகரில் நேற்று திறக்கப்பட்டது. நாளொன்றுக்கு 1000 பேருக்கு இந்த மையம் மூலம் சேவை வழங்கப்படவுள்ளது.
சென்னை அண்ணா நகர் கிழக்கில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதிச் சேவைகள் நிறுவன கட்டிடத்தில் புதிதாக ஆதார் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு மின்-ஆளுமை முகமை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஆல்பி ஜான் வர்கீஸ்...
கரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட யானைகள் புத்துணர்வு முகாமை மீண்டும் தொடங்காதது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனவிலங்குகள் மற்றும் வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அமர்வில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின்போது வனவிலங்குகள் ஆர்வலரான முரளிதரன், “கோயில் யானைகளை ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் அழைத்து செல்லப்பட்டு, மற்ற யானைகளுடன் பழகவைத்து, அந்த யானைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள்,...
இந்த மாத இறுதிக்குள் கூட்டணி அறிவிக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தேமுதிக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ், இளைஞர் அணி செயலாளர் விஜயபிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் மகளிர் அணியினருடன் பிரேமலதா இணைந்து பொங்கல் வைத்தார். தொடர்ந்து உறியடித்தல், கயிறு இழுத்தல் போன்ற...
தமிழக அரசின் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கும், திருவிக விருது முன்னாள் தலைமைச்செயலர் வெ.இறையன்புவுக்கும் அறி விக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருக்குறள் நெறிபரப்புவோருக்கான திருவள்ளுவர் விருது, இந்தாண்டு மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு வழங்கப்படுகிறது.
அதேபோல் கடந்த 2025-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அ.அருள்மொழிக்கும் அண்ணல் அம்பேத்கர் விருது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சட்டப்பேரவை குழுத் தலைவர்...
ஆலத்தூர் சிட்கோ வளாகத்தில் கரும்புகை வெளியேற்றி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தனியார் மருந்து நிறுவனத்துக்கு எதிரான புகாரை பரிசீலி்த்து 8 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஆலத்தூர் சிட்கோ வளாகத்தில் அமைந்துள்ள ‘அன்ஜன் டிரக்ஸ்’ என்ற தனியார் மருந்து நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளதாகவும், அந்த ஆலையி்ல் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் நிலத்தடி நீர்...
