Google search engine
சட்டப்பேரவை தேர்தல் நெருங் குவதால் மதுரையில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுக்கு ஏராளமான பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் சூழலில் மதுரையில் மக்களுக்கு, எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், பரிசு பொருட்கள் வழங்கி பிரச் சாரத்தை தொடங்கி விட்டனர். கடந்த தீபாவளி நாளில், கிளை, பகுதி, ஒன்றியச் செய லாளர்களுக்கு புத்தாடை, பட்டாசு, பரிசுப் பொருட்களை வழங்கினர். பொதுமக்களுக்கு தீபாவளி விழா நடத்தி, பரிசு...
எல்லாருக்கும் எல்லாம் என்ற சமத்துவ நிலையை அடைய திராவிட மாடல் அரசு செயல்படுவதாக சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அனைத்துத் துறை பணியாளர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் இன்று கொண்டாடப்பட்டது. இதில் நமது பாரம்பரிய உடையான பட்டு வேட்டி, சட்டையுடன் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், அரசு பணியாளர்களுக்கு பொங்கலை வழங்கி தனது மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில்...
“எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. சில கட்சிகள் வரும், இவற்றையெல்லாம் பகிரங்கமாக கூற முடியாது. வலிமையான கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். திமுக ஆட்சி எப்போது போகும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஒவ்வொரு பொங்கல் திருநாள் அன்றும், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஒவ்வொரு தொகுதியாக சென்று பொங்கல் திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டில், மேட்டூர்...
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளை அடக்கி சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட வலையங்குளம் பாலமுருகனுக்கு கார் பரிசும், சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசை அவனியாபுரம் விருமாண்டி மந்தை முத்துக்கருப்பன் காளைக்கும் அமைச்சர் பி. மூர்த்தி வழங்கினார். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது முதல் இறுதி சுற்று வரை விறுவிறுப்பாக நடந்தது. 940 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 47 காளைகள் தகுதி நீக்கம்...
தைத்திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று (ஜன.16) காலை 9 மணி அளவில் தொடங்கியது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட காளைகளும், 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள்...
பு​திய பிரத்​யேக ஆதார் சேவை மையம் சென்னை அண்ணா நகரில் நேற்று திறக்​கப்​பட்​டது. நாளொன்​றுக்கு 1000 பேருக்கு இந்த மையம் மூலம் சேவை வழங்​கப்​பட​வுள்​ளது. சென்னை அண்ணா நகர் கிழக்​கில் உள்ள தமிழ்​நாடு நகர்ப்​புற உட்​கட்​டமைப்பு நிதிச் சேவை​கள் நிறுவன கட்​டிடத்​தில் புதிதாக ஆதார் சேவை மையம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்​தது. தமிழ்​நாடு மின்​-ஆளுமை முகமை இயக்​குநர் மற்​றும் தலைமை செயல் அலு​வலர் ஆல்பி ஜான் வர்​கீஸ்...
கரோனா கால​கட்​டத்​தில் நிறுத்​தப்​பட்ட யானைகள் புத்​துணர்வு முகாமை மீண்​டும் தொடங்​காதது குறித்து அறிக்கை தாக்​கல் செய்ய வனத்​துறைக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. வனவிலங்​கு​கள் மற்​றும் வனப்​பாது​காப்பு தொடர்​பான வழக்​கு​கள் மீதான விசா​ரணை நீதிப​தி​கள் என்​.சதீஷ்கு​மார், டி.பரதசக்​ர​வர்த்தி ஆகியோர் அமர்​வில் நடந்து வரு​கிறது. இந்த வழக்கு விசா​ரணை​யின்​போது வனவிலங்​கு​கள் ஆர்​வல​ரான முரளிதரன், “கோ​யில் யானை​களை ஆண்​டு​தோறும் புத்துணர்வு முகா​ம் அழைத்து செல்​லப்​பட்​டு, மற்ற யானை​களு​டன் பழக​வைத்​து, அந்த யானை​களுக்கு தேவை​யான மருத்​துவ சிகிச்​சைகள்,...
இந்த மாத இறு​திக்​குள் கூட்​டணி அறிவிக்​கப்​படும் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தெரி​வித்​துள்​ளார். தேமு​திக சார்​பில் சமத்​துவ பொங்​கல் விழா கோயம்​பேட்​டில் உள்ள கட்​சி​யின் தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இந்த விழா​வில் தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமல​தா, பொருளாளர் சுதீஷ், இளைஞர் அணி செய​லா​ளர் விஜயபிர​பாகரன் மற்​றும் நிர்​வாகி​கள் பலர் கலந்து கொண்​டனர். இவ்​விழா​வில் மகளிர் அணி​யினருடன் பிரேமலதா இணைந்து பொங்​கல் வைத்​தார். தொடர்ந்து உறியடித்​தல், கயிறு இழுத்​தல் போன்ற...
தமிழக அரசின் அண்ணா விருது அமைச்​சர் துரை​முரு​க​னுக்​கும், திருவிக விருது முன்​னாள் தலை​மைச்​செயலர் வெ.இறையன்​புவுக்​கும் அறி விக்​கப்​பட்​டுள்​ளது. இதுத​விர பல்​வேறு விருதுகளும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: திருக்​குறள் நெறிபரப்​புவோருக்​கான திரு​வள்​ளுவர் விருது, இந்​தாண்​டு மு.பெ.சத்​தி​ய​வேல் முரு​க​னாருக்கு வழங்​கப்​படு​கிறது. அதே​போல் கடந்த 2025-ம் ஆண்​டுக்​கான தந்தை பெரி​யார் விருது வழக்​கறிஞர் அ.அருள்​மொழிக்​கும் அண்​ணல் அம்​பேத்​கர் விருது விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் மற்​றும் சட்​டப்​பேரவை குழுத் தலை​வர்...
ஆலத்​தூர் சிட்கோ வளாகத்​தில் கரும்​புகை வெளி​யேற்றி சுற்​றுச்​சூழலுக்கு பாதிப்பை ஏற்​படுத்​தும் தனி​யார் மருந்து நிறு​வனத்​துக்கு எதி​ரான புகாரை பரிசீலி்த்து 8 வாரங்​களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது. செங்​கல்​பட்டு மாவட்​டம் ஆலத்​தூர் சிட்கோ வளாகத்​தில் அமைந்​துள்ள ‘அன்​ஜன் டிரக்​ஸ்’ என்ற தனி​யார் மருந்து நிறு​வனத்​தில் இருந்து வெளி​யேறும் கரும்​பு​கை​யால் சுற்​றுச்​சூழல் மாசடைந்​துள்​ள​தாக​வும், அந்த ஆலை​யி்ல் இருந்து வெளி​யேற்​றப்​படும் கழி​வுநீ​ரால் நிலத்​தடி நீர்...