கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேர உண்ணாவிரதம்: அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு
admin - 0
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
தமிழக அரசு மருத்துவர்களுக்குக் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசாணை 354-ன்படி, ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.3,000 ஊக்கத்தொகையை நிலுவையின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்...
சிவகாசி சுற்றுவட்டாரத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் 3.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதால், பொதுமக்களி டையே பதற்றம் ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. சில நேரங்களில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்படும்போது, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம்.
ஆனால் நேற்று எந்த பட்டாசு ஆலையிலும் வெடிவிபத்து ஏற்படவில்லை. இந்நிலையில்,...
திருப்போரூர் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு: நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றும் நடவடிக்கையை எதிர்த்து மறியல்
admin - 0
நீதிமன்ற உத்தரவுப்படி திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கடசியினர் மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் தனி நபர்கள் இடத்தில் இருப்பதாகவும், அவற்றை மீட்டு கோயில் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்னாத் என்பவர் கடந்த...
பிஹார் தொழிலாளி, அவரது மனைவி, 2 வயது ஆண் குழந்தை ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை தரமணியில் பிஹார் இளைஞர், அவரது மனைவி, 2 வயது குழந்தை ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, அவரது நண்பர்களை போலீஸார் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள்...
கம்பரின் படைப்புகள் மீதான ஆய்வுகளை அதிகரிக்க வேண்டியது நமது கடமை: ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்
admin - 0
‘கம்பரின் படைப்புகள் மீதான ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும்’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். பாரதிய வித்யா பவன் சார்பில் ‘கல்விக் கூடங்களில் கம்பர்’ விருது வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, பள்ளி மற்றும் கல்லூரி அளவில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது: கம்ப ராமாயணம் உட்பட இதிகாசங்கள் நமது கலாச்சாரம், பண்பாடு...
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித்பவாரின் மறைவுக்கு தமிழக ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் அறிக்கை வருமாறு:
ஆளுநர் ஆர்.என்.ரவி: விபத்தில் அஜித்பவார் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பையும், நிரப்ப முடியாத வெற்றிடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித்பவார் விமான விபத்தில் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். மிகப்பெரும் துன்ப நிகழ்வான...
20 நாடுகளைச் சேர்ந்த 1000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்திய சர்வதேச கல்வி உச்சி மாநாடு சென்னையில் தொடங்கியது
admin - 0
இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட 20 நாடுகளைச் சேர்ந்த 1000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்திய சர்வதேச கல்வி உச்சி மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது.
தமிழக அரசின் டிட்கோ நிறுவனம், இங்கிலாந்து நாட்டின் தேசிய இந்திய மாணவர் மற்றும் பழைய மாணவர் சங்கம், கிழக்கு இங்கிலாந்து பல்கலைக்கழகம் இணைந்து இந்திய சர்வதேச கல்வி உச்சி மாநாட்டை சென்னையில் 2 நாட்கள் நடத்துகின்றன.
கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த மாநாட்டை தென்சென்னை தொகுதி...
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரும் பகுதியில் இரும்பு தகட்டை வைத்து, வாடிக்கையாளர்கள் பணத்தை நூதன முறையில் திருட முயன்ற வடமாநில இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, வியாசர்பாடி, பல்லவா 3-வது தெருவில் வங்கி ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இங்குள்ள ஏசி இயந்திரம் பழுதடைந்ததால் அதனை சரி செய்வதற்காக, நேற்று முன்தினம் மாலை சம்பந்தப்பட்ட வங்கி அனுப்பிய ஊழியர்கள் இருவர் வந்தனர்.
அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரும் பகுதியில்...
கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி 48 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறு ஆய்வு செய்து அரசு மருத்துவர்களுக்கான திருத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கான படிகள் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.
20 ஆண்டுகள் கடந்த மூத்த முதுநிலை மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். நோயாளிகளின்...
நுங்கம்பாக்கம் பகுதியில் பிரதான குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நாளை காலை 10 மணிமுதல் அடுத்த நாள் காலை 10 மணிவரை நடைபெறுவதால் 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகளை...
