Google search engine
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து பத்து மாதங்கள் கடந்து விட்டது. அண்மையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தி படைபலத்தைக் காட்டி கொள்கை பிரகடனம் செய்த விஜய், தற்போது தனது கடைசிப் படத்தை நடித்துக் கொடுப்பதில் மும்முரமாக இருக்கிறார். இருந்த போதும் அவரது கட்சிக்காரர்கள் உறுப்பினர் சேர்க்கை, நலத்திட்ட உதவிகள் என அரசியல் நடவடிக்கைகளில் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள். பிப்ரவரி மாதத்தில் மாவட்ட பொறுப்பாளர்களை அறிவிப்பதற்கான வேலைகளில் தீவிரமாக இருக்கிறார் கட்சியின் பொதுச் செயலாளர்...
இந்தியா வேகமாக தன்னிறைவு பெற்று வருகிறது என மத்திய கனரக தொழில் துறை இணை அமைச்சர் பூபதி ராஜு சீனிவாச வர்மா தெரிவித்தார். சிவகங்கை அருகே இலுப்பைக்குடி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில், மத்திய அரசு துறைகளில் தேர்வான 455 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் பூபதி ராஜு சீனிவாச வர்மா தலைமை வகித்தார்....
தமிழகத்தில் 14 லட்சமாக உள்ள அரசு கேபிள் இணைப்புகளை வரும் பிப்ரவரி மாதத்துக்குள் 25 லட்சம் இணைப்புகளாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓராண்டுக்குள் இணைப்புகளின் எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என அரசு கேபிள் டிவி ஆபரேட்டர் மற்றும் தொழிலாளர் வாரியத் தலைவர் ஜீவா தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் காவேரி சிறப்பு அங்காடியில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசு கேபிள் அலுவலகத்தில், கேபிள் ஆபரேட்டர்களுக்கு, புதிய ஹெச்டி செட்டாப் பாக்ஸ்...
பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 45-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேதப்படுத்திய ‘சிடி16’ என்ற ‘புல்லட் ராஜா’ காட்டு யானையின் இருப்பிடத்தை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அரிசி சுவைக்கு பழக்கப்பட்ட இளம் ஆண் காட்டு யானை ஒன்று, நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியிருப்புகளைச் சேதப்படுத்தி அரிசியை உட்கொண்டு வருகிறது. மிகவும் பலவீனமான நிலையில் உள்ள அந்தக் குடியிருப்புகளை சேதப்படுத்தி...
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1958-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பிறந்த வி.ராமசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்தார். அதன்பிறகு தெலங்கானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். அங்கிருந்து உச்ச நீதிமன்ற...
பொங்கல் விடுமுறையில் நடத்தப்பட உள்ள யுஜிசி நெட் தேர்வை வேறு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தேர்வு முகமை (என்டிஏ) யுஜிசி நெட் தகுதித்தேர்வை ஜனவரி 3 முதல் 16 வரை நடத்துவதாக அறிவித்துள்ளது. உலகம்...
விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வு பணிக்காக தயாரிக்கப்பட்டுள்ள எஸ்டிஎக்ஸ்-1 & 2 என்ற இரு சிறிய செயற்கைக் கோள்கள், பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் வரும் 30-ம் தேதி இரவு விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தொலை தொடர்பு, காலநிலை, தொலை உணர்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைக் கோள்களையும், அவற்றை விண்ணில் செலுத்துவதற்கான பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்களையும் வடிவமைத்து தயாரித்து...
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வட தமிழகக் கரையை இன்று நெருங்கக்கூடும். இதன் காரணமாக 29-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திர மற்றும்...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஊரக வளர்ச்சித் துறைசார்பில் ரூ.99.68 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் 9 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக ரூ.8.46 கோடி மதிப்பிலான 95 வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில், குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ்...
ஈரோடு இடைத்தேர்தலில் நிச்சயமாக தனித்துப் போட்டியிடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் நீதிமன்ற வாயில், மருத்துவமனை, பள்ளி என பல இடங்களில் கொலைகள் நிகழ்கின்றன. அனைத்துத் தரப்பினருமே பாதுகாப்பற்ற நிலையை உணர்கின்றனர். ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், போக்குவரத்து தொழிலாளர்களை போராடவைத்துவிட்டு, சிறந்த ஆட்சி தருகிறோம் என்கிறார்கள். தமிழர்களின் அடையாளங்களை மறைத்துவிட்டு, பேருந்து நிலையம்,...