கிரிண்டர் செயலியை பயன்படுத்தி போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாகவும், எனவே அந்த செயலியை உடனடியாக தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையர் அருண் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், விற்பனை, பதுக்கலைத் தடுக்க காவல் ஆணையர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். போலீஸாரின் தொடர் நடவடிக்கைகளால் பல்வேறு வகையான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதோடு, அதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது...
மதுபான ஆலை நிறுவனத்திடம் இருந்து அரசு கையகப்படுத்திய 248 ஏக்கர் நிலத்தை மீட்க நீதிமன்றம் உத்தரவு
admin - 0
சென்னையில் அரசு கையகப்படுத்திய 248 ஏக்கர் நிலத்தில் தனியார் மதுபான ஆலை நிர்வாகம் செயல்படுவது சட்டவிரோதம் என்று தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், அந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏப்ரல் 21-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கம், மதுரவாயல் பகுதியில் மோகன் மதுபான ஆலை நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் 248 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கடந்த 1975-ம் ஆண்டு கையகப்படுத்தி உத்தரவிட்டது. இந்த நிலத்தில்...
பாஜக மாநில தலைவர் தேர்தலுக்கு விருப்பமனு தாக்கல் இன்று நடைபெறுகிறது. தமிழக பாஜகவில் மாநில தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இவ்விரு பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என தமிழக பாஜக தேர்தல் அதிகாரி எம்.சக்கரவர்த்தி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மாநில தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் தேர்தலுக்கான விருப்பமனுக்களை கட்சியின் இணையதளமான www.bjptn.com...
பாமகவுக்கு இனி நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார் என்று கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளது பாமகவினரிடையே உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், சாதி வாரி கணக்கெடுப்பு, அரசுப் பள்ளிகளின் மேம்பாடு, ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். இதைத் தொடர்ந்து அவர் அறிக்கை ஒன்றை வாசித்தார்.
1980-ல் வன்னியர் சங்கம் தொடங்கிய காலத்தில்...
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் 3-வது நாளாக சோதனை நடந்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரவிச்சந்திரன் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார்.
அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் தொடர்புடைய சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் கடந்த ஏப்.7-ம் தேதி சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் 2-வது நாளாக நேற்று முன்தினமும் சோதனை நடந்தது.
இந்நிலையில், அமைச்சர் நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்...
தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு விபத்து மரண உதவித்தொகை ரூ.8 லட்சமாக உயர்வு: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு
admin - 0
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்த மற்றும் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித்தொகை ரூ.8 லட்சமாக உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் பதிலளித்து பேசியதாவது: தமிழகம் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் மாநிலமாகும். அதன்படி மொத்தம் 49 நிறுவனங்களில் நடைபெற்ற வேலைநிறுத்தங்கள்...
சட்ட போராட்டத்தை தொடர்ந்தால் நீட் விலக்கு பெறலாம்: அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
admin - 0
சட்ட போராட்டத்தை தொய்வின்றி தொடர்ந்தால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்று, நீட் தேர்வு தொடர்பான அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், முதல்வர் பேசியதாவது: நுழைவுத் தேர்வு என்பது ஏழை...
திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 32 கலைக் கல்லூரிகள் திறப்பு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
admin - 0
திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 32 கலைக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அந்தியூர் தொகுதி எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பேசும்போது, அந்தியூரில் கலைக் கல்லூரி தொடங்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அளித்த பதில்:
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 2022-23 கல்வியாண்டு முதல் புதிய அரசு கலை மற்றும் அறிவியல்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நாகையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அகில இந்திய விவசாயிகள் சங்கமாநாடு வரும் 15, 16, 17-ம் தேதிகளில் நாகையில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, தமிழக அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கேரள மாநில அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பாஜகவின் நிர்பந்தம் காரணமாகவே தமிழக அரசுக்கு எதிராக அதிமுக...
நவீன வசதிகளுடன் தேவநேயப்பாவாணர் அரங்கம் புதுப்பிப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்
admin - 0
சென்னையில் ரூ.1.32 கோடியில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட தேவநேயப்பாவாணர் அரங்கத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள மாவட்ட நூலக ஆணைக்குழு கட்டிடத்தின் முதல் தளத்தில் தேவநேயப் பாவாணர் அரங்கம் அமைந்துள்ளது. இந்த அரங்கம் ரூ.1.32 கோடியில் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி, 280 இருக்கைகள், லைவ் கேமரா உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஒலி, ஒளி அமைப்புகள் மற்றும் உணவுக்...










